விஷால் படத்தின் ஓடிடி உரிமையை அலேக்காக தூக்கிய அமேசான்

விஷால் படத்தின் ஓடிடி உரிமையை அலேக்காக தூக்கிய அமேசான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால்.

இவரது நடிப்பில் தற்போது ‘ரத்னம்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ஹரி இப்படத்தை இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.

இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் OTT உரிமை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தின் உரிமையை விஷால் திரை பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்புகள் திருப்பதியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal starrer Rathnam movie Ott updates

‘குறி வச்ச இறை விழனும்..’ விஜய்யை தாக்கி ‘வேட்டையன்’ ரஜினி பஞ்ச் டயலாக்.?

‘குறி வச்ச இறை விழனும்..’ விஜய்யை தாக்கி ‘வேட்டையன்’ ரஜினி பஞ்ச் டயலாக்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் டீசர் வெளியானது.

ஞானவேல் இயக்கிய வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த டீசரில் ரஜினிகாந்த் பேசும் வசனம் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் குறி வச்சா எர விழனும் என ரஜினி மாஸாக ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு பேசும் டயலாக் தற்போது வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் விஜய் ஒரு குட்டி கதை சொன்னார். அதில் இரு வேடன்கள் வேட்டைக்கு செல்கின்றனர்.

ஒருவன் வேட்டையாடி திரும்பி வருகிறார். மற்றொரு வேடனோ யானைக்கு குறி வைத்தான். அவனால் வேட்டையாட முடியவில்லை. ஆனாலும் அவனே வெற்றி பெற்றவன்” என பேசி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ரஜினி பேசிய வசனம் ‘குறி வைச்சா எற விழனும்…’ என்ற பேசிய பஞ்ச் டயலாக் விஜய்க்கு எதிராக உள்ளதாக விஜய்யை கலாய்க்கும் வகையில் உள்ளதாக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி

Rajinis Vettaiyan punch dialogue trolls Vijay?

வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா – த்ரிஷா – யுவனுக்கு நன்றி.. – அமீர் அறிக்கை

வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா – த்ரிஷா – யுவனுக்கு நன்றி.. – அமீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று டிசம்பர் 13ஆம் தேதி.. இன்றோடு ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் ரிலீஸ் ஆகி 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதனை முன்னிட்டு இயக்குனர் அமீர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்..

அந்த அறிக்கையில்… கடந்த ஒரு மாதமாக எனக்கு ஆறுதலாக பேசி வந்த ரசிகர்கள் ஊடகங்கள் திரைத்துறைகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ‘மௌனம் பேசியதே’ படம் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் தன் வெற்றிக்கு கரம் கொடுத்த நடிகர் சூர்யா, லைலா, த்ரிஷா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘மௌனம் பேசியதே’ திரைப்படம் அமீரின் முதல் படம் மேலும் நடிகை திரிஷாவுக்கும் நாயகியாக அதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர்

Director Ameer thanks note Suriya Trisha and Yuvan

‘குறி வச்சா இரை விழணும்…; ‘வேட்டையன்’ ரஜினிகாந்தின் மாஸ் டயலாக் டீசர்

‘குறி வச்சா இரை விழணும்…; ‘வேட்டையன்’ ரஜினிகாந்தின் மாஸ் டயலாக் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று டிசம்பர் 12 நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ‘வேட்டையன்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தை லைக்கா தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

வேட்டையன்

இந்த டைட்டில் டீசரில்… ரஜினிகாந்த் கண்ணாடி போடும் ஸ்டைல் வித்தியாசமாக உள்ளது.. பலவிதமாக ஸ்டைல்களை கண்ணாடி அணியும் ரஜினி இதில் தனது அடுத்த அதிரடியை காட்டி இருக்கிறார் எனலாம்.

மேலும் ஆரம்பத்தில்… நேதாஜி புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஜெயிலர் படத்தைப் போல இதிலும் வேட்டையன் படத்திலும் ரஜினி போலீசாக நடிப்பதாக தெரிகிறது.

அடுத்தடுத்த ஷாட்டில் லத்தியுடன் நடந்து வருகிறார். ‘குறி வச்சா இரை விழணும்’ என ரஜினி பேசும் வசனத்துடன் டீசர் முடிகிறது.

Here is the Official Tamil Title Teaser of Thalaivar 170 💥 *filmistreet* 🔥 *#Vettaiyan* 🌟😎🎉

Thalaivar 170 – Title Teaser

Rajinikanths 170 movie titled Vettaiyan

மக்களுக்கு தேவையான மின்னூட்டம் உங்களிடம்..; விரும்பும் வரை வாழ்க.; ரஜினியை வாழ்த்திய வைரமுத்து

மக்களுக்கு தேவையான மின்னூட்டம் உங்களிடம்..; விரும்பும் வரை வாழ்க.; ரஜினியை வாழ்த்திய வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று டிசம்பர் 12 நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எனவே ரசிகர்களும் அரசியல் கலைஞர்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் உள்ள பிரபல திரை ஆளுமைகளும் ரஜினிக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிக்கு பல படங்களில் பாடல்கள் எழுதிய கவிஞர் வைரமுத்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ரஜினியை வாழ்த்தி ஒரு கவிதை மழை பொழிந்துள்ளார்.

அந்த பதிவில்…

தங்களுக்குத் தேவையான
ஏதோ ஒரு மின்னூட்டம்
உங்களிடம் உள்ளதாக
மக்கள் நம்புகிறார்கள்

அதை
மிக்க விலைகொடுத்துத்
தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

கலை என்ற பிம்பத்தைவிட
உங்கள்
நிஜவாழ்க்கையின் நேர்மைதான்
என்னை வசீகரிக்கிறது

எதையும் மறைத்ததில்லை
என்னிடம் நீங்கள்
பலம் பலவீனம்
பணம் பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்
அந்த நம்பிக்கையைக்
காப்பாற்றுவேன்.

உடல் மனம் வயது கருதி
நீங்கள் எடுத்த அரசியல் முடிவு
உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும்
வாழ்க்கையெல்லாம்
வழிவகுக்கும்

வாழ்த்துகிறேன்

விரும்பும்வரை வாழ்க!

#Rajinikanth #Rajinikanthbirthday

ரஜினி வைரமுத்து

Lyricist Vairamuthu wishes Rajini on his birthday

‘முத்து & ஆளவந்தான்’ ரீ-ரிலீஸ்.; வசூலில் முந்தியது உலக நாயகன்.? சூப்பர் ஸ்டார்.?

‘முத்து & ஆளவந்தான்’ ரீ-ரிலீஸ்.; வசூலில் முந்தியது உலக நாயகன்.? சூப்பர் ஸ்டார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1995 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ‘முத்து’ படமும் 2001ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

கடந்த டிசம்பர் 8ம் தேதி இந்த இரண்டு படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட போது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து புதிய படத்தை போல கொண்டாடி வருகின்றனர்.

‘முத்து’ படம் 4k தொழில்நுட்பத்தில் வழக்கமான காட்சிகளை கொண்டே வெளியானது. ஆனால் ‘ஆளவந்தான்’ படம் 45 நிமிடங்களில் குறைக்கப்பட்டு 4k தொழில்நுட்பத்தில் 1000 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தற்போது 3 நாட்களை கடந்துள்ள நிலையில் வசூல் விவரங்கள் தெரிய வந்துள்ளது.

இதில் ‘முத்து’ படத்தை விட ‘ஆளவந்தான்’ படம் வசூலில் முந்தி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘ஆளவந்தான்’ தமிழகத்தில் ரூ.15 லட்சம் வசூலையும் ‘முத்து’ ரூ. 10 லட்சத்திற்கு குறைவான வசூலையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த படங்கள் முதல் முறையாக வெளியானபோது ‘முத்து’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. ‘ஆளவந்தான்’ படம் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ரீ-ரீலீசில் ரசிகர்களின் மனநிலை மாறி உள்ளதா என்ற கேள்வியில் இங்கு எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.

Muthu and Aalavandhan rerelease Box office Collection

More Articles
Follows