சிம்பு ஒரு ரியாக்சனும் கொடுக்கலையே… கீ பட விழாவில் விஷால் பேச்சு

சிம்பு ஒரு ரியாக்சனும் கொடுக்கலையே… கீ பட விழாவில் விஷால் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and silambarasanசிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தொடர்ந்து ஜீவா நடிக்கும் கீ படத்தை தயாரித்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.

இப்படத்தை அடுத்த மாதம் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் இப்பட இயக்குநர் காலீஸ், ஜீவா, நிக்கி கல்ராணி, சுஹாசினி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் உள்ளிட்ட கீ படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக விஷால், விஜய்சேதுபதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும்போது…

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் குறித்து மைக்கேல் ராயப்பன் கொடுத்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டார்.

அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே விஷாலின் ஆதரவாளர் இது பற்றி இங்கு பேசக்கூடாது” என்றார்.

இதனால் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால்.. “தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் சிம்பு தரப்பில் இருந்து எந்த ஒரு ரியாக்சனும் இல்லை.

எனவே இந்த பிரச்சனையை எப்படி முடிப்பது என்பதே தெரியவில்லை. அதனால் தான் இந்த பிரச்சனையில் இன்னும் காலதாமதம் ஆகிறது” என்றார்.

அனுஷ்காவுக்கே ஹீல்ஸ் போட்டவர் சூர்யா; சன் மியூசிக் தொகுப்பாளினிகள் கிண்டல்

அனுஷ்காவுக்கே ஹீல்ஸ் போட்டவர் சூர்யா; சன் மியூசிக் தொகுப்பாளினிகள் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sun music anchorsசெல்வராகவன் படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்ற செய்திகள் வந்துள்ளன.

இதில் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிப்பார் எனவும் வந்த செய்திகள் பார்த்தோம்.

இந்நிலையில் சன் மியூசிக் சேனலில் Franka peseta என்ற நிகழ்ச்சியை நிவேதிதா, சங்கீதா என்ற பெண்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அவர்கள் இது குறித்து பேசும்போது…

சிங்கம் படத்துல அனுஷ்காவுடன் நடிக்கும்போதே சூர்யா ஹீல்ஸ் போட்டு நடித்தார். அமிதாப்புடன் எப்படி நடிப்பார். ஸ்டூல் போட்டுப்பாரா?

உட்கார்ந்துக்கிட்டே நடிக்க வேண்டியதுதான் என சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்து பேசியுள்ளனர்.

இதற்கு சூர்யா ரசிகர்கள் முதல் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் விஷால், இயக்குனர் விக்னேஷ்சிவன் ஆகியோரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்களை என்ன சொல்ல…? எவ்வளவு உயரம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு உயருகிறோம் என்பதுதான் முக்கியம் என்ற சூர்யா சொன்ன டயலாக்குதான் தற்போது நினைவுக்கு வருகிறது…

ஆண்டாள்-வைரமுத்து சர்ச்சை வழக்கு; கோர்ட் இடைக்காலத் தடை!

ஆண்டாள்-வைரமுத்து சர்ச்சை வழக்கு; கோர்ட் இடைக்காலத் தடை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthuராஜபாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து கலந்துக் கொண்டு, ஆண்டாள் குறித்து பேசினார்.

அப்போது வெளிநாட்டை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், ஆண்டளை தேவதாசி என்று குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டி பேசினார்.

இதனை அடுத்து இந்து அமைப்புகள், பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் வைரமுத்துவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க. நிர்வாகி, எச்.ராஜா, வைரமுத்துவை அசிங்கமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில், வைர முத்துவுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வைரமுத்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீலை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

ஆண்டாள் குறித்து வைரமுத்து தன்னுடைய சொந்த கருத்தை கூற வில்லை. வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக் கையை குறிப்பிட்டும், மேற்கோள் காட்டியும் தானே பேசினார்? அப்புறம் எதற்காக இதை அரசியல் ஆக்க வேண்டும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த மனுவுக்கு பிற்பகலில் பதிலளிப்பதாக அரசு வக்கீல் கூறியதால், மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இறுதியாக இந்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நான் ஒரு தடவ சொன்னா டயலாக் அரசியலுக்கு செட்டாகாது..: ரஜினியை சீண்டும் சீமான்

நான் ஒரு தடவ சொன்னா டயலாக் அரசியலுக்கு செட்டாகாது..: ரஜினியை சீண்டும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and seemanவேலுபிரபாகரன் இயக்கத்தில் தயாராகும் படம் ‘கடவுள்-2’ இதில் பாரதிராஜா, சீமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட சீமான் பேசியதாவது…

ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவை பா.ஜ.கவை. சேர்ந்த எச். ராஜா வேசி மகன் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு சீமான் தன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது…

வைரமுத்து சொல்லாத வி‌ஷயத்தை சொல்லியதாக கூறி பிரச்சினை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் எது வேண்டுமானாலும் எல்லாம் பேசுகிறார். நீங்கள் என்ன சொன்னாலும் இங்கு கால் ஊன்ற முடியாது.

கொல்லைப்புறமாக வந்து கோட்டையில் ஏற முடியாது.

தாமரை ஒருபோதும் இங்கு மலராது. எங்கள் உடலில் படர் தாமரைதான் படர்கிறது.

நீங்கள் நோட்டோவுக்கு கீழ் இருப்பதால் தான் பேட்டா ரஜினிகாந்தை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள்.

ரஜினி ஆன்மீக அரசியல் பற்றி பேசுகிறார். அப்படியென்றால் கட்சி செயற்குழு, பொதுக்குழு கோயிலில் நடக்குமா? நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்னமாதிரி என்று சினிமாவின் பஞ்ச் டயலாக் பேசலாம்.

ஆனால் இங்கு அரசியலில் ஒவ்வொன்றையும் நூறு தடவை சொல்ல வேண்டும். இதை ரஜினி புரிந்துகொள்ள வேண்டும்.

அவர் எந்த பக்கம் நின்றாலும் அதற்கு எதிர் பக்கத்தில்தான் நான் நிற்பேன். தமிழ் மக்களுக்கு என்ன செய்துவிட்டீர்கள்? அவர்களை ஆள்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

இவ்வாறு சீமான் பேசினார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் வேலுபிரபாகரன், பாடல் ஆசிரியர் சினேகன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

AAA பட புரொடியூசரை சிம்பு கைவிட்டார்; விஷால் கைகொடுக்கிறார்..!

AAA பட புரொடியூசரை சிம்பு கைவிட்டார்; விஷால் கைகொடுக்கிறார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Michael rayappanஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார்.

இப்படம் சிம்பு கேரியரில் மாபெரும் தோல்வியை சந்தித்தது.

இதனால் விநியோகர்ஸ்தர்கள் நஷ்டஈடு கேட்க தயாரிப்பாளர் சிம்புவை நாடினார்.

மேலும் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கால்ஷீட்டை சிம்புவிடம் கேட்டார்.

ஆனால் அவர் தரப்பில் எந்த பதிலும் சரியாக வழங்கப்படவில்லை.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் முறையிட்டார்.

இந்நிலையில் மைக்கேல் ராயப்பனின் நிலையை அறிந்த விஷால் இன்றைய கீ பட விழாவில் அவருக்கு தான் உதவுதாக அறிவித்தார்.

ராயப்பன் ஒரு நல்ல கதையை தேர்வு செய்து இயக்குனரை கொண்டு வந்தால் நான் அட்வான்ஸ் வாங்காமல் நடித்துக் கொடுக்கிறேன்.

படம் வந்து வெற்றி அடைந்த பின் அவர் சம்பளம் கொடுக்கட்டும்” என்று தெரிவித்தார்.

சுதேசி மக்கள் நீதி கட்சி துவக்க விழா சென்னையில் நடந்தது.

சுதேசி மக்கள் நீதி கட்சி துவக்க விழா சென்னையில் நடந்தது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sudhesi makkal neethi katchi launchசுதேசி மக்கள் நீதி கட்சியின் துவக்க விழா சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடந்தது. விழாவில் கட்சியின் கொடி, கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டது.
சுதேசி மக்கள் நீதி கட்சியின் கொள்கைகள் வருமாறு:-

இன்றைய காலகட்டத்தில் அரசியல் சீர்கெட்டு உள்ளது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இயற்கை வளங்களை காக்க அரசு தவறி விட்டது. படித்த இளைஞர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.

நுகர்வோர்களாகிய மக்கள் அன்றாடம் கவர்ச்சி விளம்பரங்களால் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் சோம்பேறித் தனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.
அரசு துறைகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

இதற்காக அரசு பொருளாதார திட்டங்களை மேம்படுத்த வேண்டும். நாட்டிற்கு சவாலாக விளங்கும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், சாதி கலவரம் உள்ளிட்ட கலாச்சாரத்தை ஒழிக்க பாடுபடுவோம்.
சமூக நலன் கருதி, மக்களோடு மக்களாக நின்று அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம். லஞ்ச லாவண்யத்திற்கு அடிமையாகி, வேலியே பயிரை மேய்கிறது என்பது போன்று செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது. மக்களின் நலனுக்காக புதிய கடைமைகளை தவறாது செய்வது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய கட்சியின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான கப்பல் கே.எஸ். ராஜேந்திரன் கூறியதாவது:-
அரசு இயந்திரம் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் சிறிய கட்சிகள் தோன்ற அவசியம் இல்லை. மக்கள் நலனே எங்கள் கட்சியின் கொள்கை. மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைப்போம். 2021-ம் ஆண்டு தேர்தலில், சுதேசி மக்கள் நீதி கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கட்சி தலைவர் என். ரமேஷ், பொருளாளர் ஆர். வரலெட்சுமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

More Articles
Follows