பிரபு மகள் ஐஸ்வர்யா – ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் திரைப் பிரபலங்கள்

பிரபு மகள் ஐஸ்வர்யா – ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் திரைப் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

ஜிவி பிரகாஷ் நடித்த ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

அதன் பின்னர் சிம்பு & தமன்னா நடிப்பில் உருவான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த படம் படுதோல்வியை அடைந்தது.

மேலும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா - ஆதிக் ரவிச்சந்திரன்

இதன் பின்னர் பகீரா & ‘மார்க் ஆண்டனி’ என்ற படங்களை இயக்கியிருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன்.

இதில் ‘மார்க் ஆண்டனி’ படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் இவர் பிரபுவின் மகளும் விக்ரம் பிரபுவின் சகோதரியும் ஆன ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய கொள்ள போவதாக செய்திகள் வந்திருந்தன.

அதன்படி இன்று டிசம்பர் 15ஆம் தேதி இன்று காலை ஆதிக் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் விஷால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

ஐஸ்வர்யா - ஆதிக் ரவிச்சந்திரன்

மேலும் நடிகர் ‘லெஜண்ட்’ சரவணன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

என்றென்றும் நம் நினைவில் வாழும் நடிகர் திலகம், பத்மஶ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நம் இளைய திலகம் பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. எனத் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா - ஆதிக் ரவிச்சந்திரன்

Celebrities at Adhik Ravichandran and Ishwarya marriage

‘லியோ’ தயாரிப்பாளருடன் இணைந்த விக்னேஷ்சிவன் – பிரதீப் – கீர்த்தி – அனிருத்

‘லியோ’ தயாரிப்பாளருடன் இணைந்த விக்னேஷ்சிவன் – பிரதீப் – கீர்த்தி – அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது,

புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது.

இப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, நடிகை கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விக்னேஷ்சிவன் - பிரதீப் - கீர்த்தி - அனிருத்

கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் E ராகவ் எடிட்டிங் செய்கிறார்.

உடை வடிவமைப்பை பிரவீன் ரஜா செய்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார். படத்தின் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

விக்னேஷ்சிவன் - பிரதீப் - கீர்த்தி - அனிருத்

Pradeep Ranganathan Keerthy shetty in Vignesh shivan directorial

திரைப்படங்கள் தயாரிப்பதிலும் கமல் பாணியை பின்பற்றும் லோகேஷ் கனகராஜ்

திரைப்படங்கள் தயாரிப்பதிலும் கமல் பாணியை பின்பற்றும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ்.

5 படங்கள் மட்டுமே இயக்கி உள்ள இவர் இன்று ரஜினி, கமல், விஜய்யின் ஆஸ்தான இயக்குனராக மாறிவிட்டார்.

‘மாநகரம்’ என்ற மிகப்பெரிய ஹிட் படத்தைக் கொடுத்து ‘கைதி’ படத்தை இயக்கினார்.

இதனையடுத்து விஜய் நடித்த ‘மாஸ்டர்’, கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ மற்றும் விஜய் நடித்த ‘லியோ’ ஆகிய படங்களை இயக்கினார்.

இதனையடுத்து ரஜினியின் 171வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரோகேஷ். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

இதன் படபிடிப்பு 2024 ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது நிலையில் தான் ஜீ குவாட் என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ்.

இதன் மூலம் தரமான படங்களை கொடுக்கவும் புதுமுக இயக்குனர்கள் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் அவர் படங்கள் தயாரிப்பதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில்…

கமல்ஹாசன் ரசிகர்னு சொன்ன மட்டும் போதாது.. அவரை போல சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்ல போடாம சினிமாலயே போடனும்.

நாலு பேருக்கு வாய்ப்பு கொடுத்து நல்ல படங்களை தயாரிக்கனும், ஆண்டவன் புண்ணியத்துல படங்கள் இயக்கி நல்ல சம்பளம் வருது. அதுவே எனக்கு போதும்” – எனத் தெரிவித்துள்ளார் லோகேஷ்.

Director Lokesh Kanagaraj follows Kamal formula in production

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்த சிவகார்த்திகேயன் படம்

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்த்த சிவகார்த்திகேயன் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் உலகத்தளத்தில் புகழையும் ஒரு திரைப்படம் பெறப்போகிறது என்ற விஷயம் நமது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே பெருமையான ஒன்று. அந்த வகையில், வருகிற 2024 ஆம் வருடம் தமிழ் திரையுலகிற்கு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், தான் இயக்கிய ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறார்.

பெர்லினில் பிப்ரவரி, 2024ல் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ‘கொட்டுக்காளி’ தேர்வாகியுள்ளது.

இந்த விழாவில் திரையிட தேர்வாகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் பெறுகிறது ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருக்கும் இந்தப் பெருமைமிகு படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்க சூரி, அன்னா பென் மற்றும் பலர் தங்களது திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

கொட்டுக்காளி

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஒரு திரைப்படம் தேர்வாகி இருக்கிறது என்பது உலக அளவில் ஒட்டுமொத்த திரைப்படத் துறையினருக்கும் பெருமை மிகு அடையாளமாக அமைகிறது.

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது…

”நம்பிக்கைக்குரிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் செயல்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி தொழில் மீது ஆர்வம் கொண்ட திறமைசாலிகள் சரியாக அமைந்துள்ளனர்.

மொழி மற்றும் பிராந்திய தடைகளுக்கு அப்பால் அனைவரும் தொடர்புபடுத்தக்கூடிய மனித உணர்ச்சிகளை அங்கீகரிக்கும் தனித்துவமான கதைகளை உருவாக்க எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளது.

இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான படைப்பை நாங்கள் தயாரித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என்பது உலகத் திரையுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இடம். மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் மறக்க முடியாத பெருமைமிகு நினைவாகவும் இது இருக்கும்” என்றார்.

’கொட்டுக்காளி’ படத்தை பி.எஸ். வினோத்ராஜ் இயக்கி இருக்க, இணைத் தயாரிப்பாளர் கலை அரசு மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸூடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

பி.சக்தி வேல் ஒளிப்பதிவு, கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு, சுரேன் ஜி & எஸ். அழகிய கூத்தனின் ஒலி வடிவமைப்பு, ராகவ் ரமேஷின் ஒலி ஒத்திசைவு மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பையும் இப்படம் கொண்டுள்ளது.

Kottukaali movie got international attraction

பெரிய நடிகர்களை விட சின்னவங்க மக்களுக்கு உதவுறாங்க.. அவங்கள கண்டுக்குங்க..; ஆரி

பெரிய நடிகர்களை விட சின்னவங்க மக்களுக்கு உதவுறாங்க.. அவங்கள கண்டுக்குங்க..; ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

நாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். நாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார்.

ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ஆரி் பேசும்போது…

“இந்த விழாவில் எல்லா பாடகர்களையும் அழைத்து கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன் சினிமாவிற்கு வந்தே 50 வயது ஆகிவிட்டது. ஆனால் அவ்வளவு இளமையான இசையை கொடுத்திருக்கிறார். அவர் உடம்புக்கு தான் வயதாகி இருக்கிறது. இசைக்கு வயதாகவில்லை. நெடுஞ்சாலை சமயத்தில் அபிலாஷ் என்னிடம் ஒரு முறை கதை சொல்ல வந்தார். அப்போது இருந்து நல்ல பழக்கம். பின்னர் சில வருடங்கள் கழித்து தபால் அலுவலகம் மூலமாக சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்கிற பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவில் முன்னெடுத்த போது அங்கே எனக்கு உறுதுணையாக நின்று உதவிகளை செய்தவர் அபிலாஷ்.

ஜித்தன் ரமேஷுக்கு முன்னாடியே என்னிடம் இந்த கதையை அவர் சொல்லி இருக்கிறார். ஹீரோவாக நடித்து தோத்தவன் இருக்கிறான். ஆனால் வில்லனாக நடித்து தோத்தவன் யாரும் இல்லை. வில்லனாக காலடி எடுத்து வச்சிருக்கீங்க.

இந்த சினிமா உங்களை நிச்சயம் உயரத்துக்கு கொண்டு போய் வைக்கும். நானும் அடுத்த வருடம் வெளியாகும் ஒரு படத்தில் உங்களை போலவே ஒரு வில்லனாக நடித்திருக்கிறேன்.

அதேபோல இந்த மழை வெள்ள காலத்தில் அறந்தாங்கி நிஷா, கே பி ஒய் பாலா ஆகியோர் செய்த உதவிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோருமே பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்.

உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் கொடுத்தவர்களை கொண்டாட வேண்டும் அவர்களும் ஹீரோதான். தயாரிப்பாளர் அமர் ஒரு சாமானியனாக இருந்து மருத்துவராகி சினிமா கனவுடன் 5 படங்களை எடுத்து அதை ரிலீஸ் செய்தும் இருக்கிறார் என்றால் எந்த அளவிற்கு சினிமா மீது அவருக்கு ஆர்வமும் கடின உழைப்பும் இருக்கும் என்பது தெரிகிறது” என்று கூறினார்.

Small actors helping lot at flood time says bigg boss Aari

அந்த குகைக்கு 50 பேர்.. சேற்றில் குளித்த ஹீரோயின் அஞ்சு.. – ஜித்தன் ரமேஷ்

அந்த குகைக்கு 50 பேர்.. சேற்றில் குளித்த ஹீரோயின் அஞ்சு.. – ஜித்தன் ரமேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

நாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். நாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார்.

ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நாயகன் நாயகன் ஜித்தன் ரமேஷ்* பேசும்போது…

“நானும் அபிலாஷும் எப்போது ஜாலியாக பேசிக் கொண்டிருப்போம். அப்போது தாய்நிலம் என்கிற படத்தை எடுத்திருந்த அவர் உங்களுக்காக ஒரு நல்ல கதை வைத்திருக்கிறேன் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். முதலில் கதையை சொல்லுங்கள் நல்லா இருக்கா இல்லையா என்று அப்புறம் சொல்லலாம் என்று கூறினேன். ஒரு மணி நேரம் கதை சொன்னார். ஆரம்பித்தது தெரிந்தது. ஆனால் முடித்தபோது ஒன்றுமே புரியவில்லை. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக கதை இருந்தது.

90% படம் காட்டில் தான் படமாக்கப்பட்டது அதிலும் நிறைய காட்சிகள் ஒரு குகையில் தான் எடுக்கப்பட்டன. அந்த குகைக்குள் கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல் இருந்து நடித்தோம். மூச்சு விடவே சிரமப்பட்டோம். அது மட்டுமல்ல இந்த படத்தின் பட்ஜெட்டிலேயே மெழுகுவர்த்திக்கு தான் அதிகம் செலவழித்து இருப்பார்கள் என நினைக்கிறன். அந்த அளவிற்கு படப்பிடிப்பு தளத்தில் மெழுகுவர்த்தி பயன்பட்டது.

இந்த படத்தின் நாயகி அஞ்சு, தண்ணீரில் குளித்ததை விட சேற்றில் தான் அதிகம் குளித்து இருப்பார். கிட்டத்தட்ட 30 நாட்கள் இதே போன்று தான் அவரது நிலை இருந்தது. இடையில் கால் உடைந்து ஓய்வு எடுக்க வேண்டியது கூட இருந்தது. ஆனாலும் தனது பணியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அவுசப்பச்சன் சாரின் கடின உழைப்பால் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் உருவாகி இருக்கிறது. படம் வெளியாகுமபோது நிச்சயம் பின்னணி இசை ஹிட் ஆகும்” என்று கூறினார்.

Jithan Ramesh shares his experience of Route No 17

More Articles
Follows