தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்துள்ளார்.
மேலும், 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விநியோகஸ்தர்களுக்கு பணத்தை சிம்பு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து சிம்பு தெரிவித்துள்ளதாவது..
ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கும்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த தயாரிப்பாளர் புகார் கூறினார் பதில் சொல்கிறேன்.
தற்போது படம் வெளியாகிவிட்டது. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை.
அப்படியொரு சட்டமும் இல்லை. என்றைக்குமே நான் தயாரிப்பாளரைப் பற்றி தவறாக பேசமாட்டேன்.
என் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் அப்போது என் என் பதிலை தெரிவிவிப்பேன்.” இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்