ஷங்கரை மீறியும் வெளியாகும் ரஜினியின் ‘2.ஓ’ படங்கள்

ஷங்கரை மீறியும் வெளியாகும் ரஜினியின் ‘2.ஓ’ படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini 2 point O shooting spotரஜினிகாந்த் நடித்து வரும் ஷங்கரின் 2.ஓ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கெடுபிடிகள் உள்ளது.

படம் தொடர்பான எந்தவொரு புகைப்படமும் இணையத்தில் லீக்காகி விடக்கூடாது என ஷங்கர் கண்காணித்து வருகிறார்.

ஆனால், அதனையும் மீறி ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த், ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் பளிச்சென தோன்றுகிறார்.

இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

பாகுபலி-2 படத்தின் சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா?

பாகுபலி-2 படத்தின் சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baahubali movie stillsகடந்த வருடம் ரிலீசான ராஜமௌலியின் பாகுபலி படம் இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை படைத்தது.

படத்தின் உருவாக்கத்திலும், வசூலிலும் இது பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

அடுத்த வருடம் 2017 கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இநிலையில், இப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகியவற்றின் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் உரிமை ரூ.45 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

கிரேட் இண்டியா நிறுவனம் இந்த விலைக்கு இதை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் நிஜாம் ஏரியாவின் தெலுங்கு உரிமை மட்டுமே ரூ.45 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

இவையில்லாமல், சோனி டிவி இதன் ஹிந்தி சேட்டிலைட் உரிமையை மட்டும் ரூ. 51 கோடி வாங்கியிருக்கிறதாம்

இனி மேடையில் அழாமல் இருக்க சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு

இனி மேடையில் அழாமல் இருக்க சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakarthikeyan new imagesரெமோ படத்தின் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் மேடையிலே கண்ணீர் விட்டு அழுதார்.

இது திரையுலகில் பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இதுபோன்று இனி அழாமல் இருக்க முயற்சி செய்ய உள்ளதாக சிவகார்த்திகேயன் தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது….

நான் சென்சிட்டிங் டைப். எந்த நெகிழ்ச்சி சம்பவம் என்றாலும் எமோஷன் ஆகிவிடுவேன்.

இதற்கு முன்பு ஒரு முறை மேடையில் அழுதுள்ளேன். விருது வாங்கும்போது, என் தந்தையை நினைத்து அழுதேன்.

என் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

இதுவரை நீ பையன். இனி பெரிய ஆண் மகன் என்றார்.

இனி நிதானமாக யோசிப்பேன். என் எமோஷனலை கன்ட்ரோல் செய்வேன். என்றார்.

முருகதாஸ்-மகேஷ்பாபு-ஆர்.ஜே.பாலாஜி இணையும் படத்திற்கு தலைப்பு உறுதியானது

முருகதாஸ்-மகேஷ்பாபு-ஆர்.ஜே.பாலாஜி இணையும் படத்திற்கு தலைப்பு உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahesh babu and Murugadossதமிழகத்தின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது மகேஷ்பாபு நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்தாண்டு 2016 தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதால் இரு மொழிகளுக்கும் பொருத்தமான தலைப்பை தேடி வந்தனர்.

தற்போது ‘ஏஜெண்ட் சிவா’ என்ற டைட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாயகியாக ராகுல் ப்ரித்தி சிங் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார்.

முக்கிய வேடத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடித்து வருகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமந்தாவுக்காக விஷாலை எதிர்க்கிறாரா ஆர்யா..?

சமந்தாவுக்காக விஷாலை எதிர்க்கிறாரா ஆர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya and vishalமிஷ்கினின் துப்பறிவாளன் படத்தை முடித்துவிட்டு, பி.எஸ். மித்ரன் இயக்கும் இரும்புத் திரை படத்தில் நடிக்கவுள்ளார் விஷால்.

இதன் படப்பிடிப்பு நாளை தொடங்கப்பட உள்ளது.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார்.

இந்நிலையில் இதில் உள்ள முக்கிய கேரக்டரான வில்லன் கேரக்டரில் ஆர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஷால் ஆர்யா இருவரும் திரையுலகை தாண்டியும் நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர்.

தற்போது படத்தின் நாயகிக்காக விஷாலுடன் ஆர்யா மோத வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.

‘ரஜினின்னா அதான் பர்ஸ்ட் ஞாபகம் வரும்…’ – சிவகார்த்திகேயன்

‘ரஜினின்னா அதான் பர்ஸ்ட் ஞாபகம் வரும்…’ – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini salute sivakarthikeyan saluteரெமோ படத்தின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் தந்தி டிவியில் இவரது திரையுலக அனுபவம் குறித்த பிரத்யேக பேட்டி ஒளிப்பரப்பானது.

அப்போது சினிமா என்ற வெளிச்சத்தில் இருந்தபோதும், சிகரெட் மற்றும் மது பழக்கம் இல்லாமல் இருப்பது எப்படி? என்று இவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்…

என் தந்தைக்கு சிகரெட், சரக்கு போன்ற எந்த பழக்கமும் கிடையாது.

எனவே எனக்கும் இல்லை. அதுபோல் என் கல்லூரி நண்பர்களுக்கும் அந்த பழக்கம் இல்லை.

எனக்கு அந்த பழக்கம் தேவைப்படவில்லை. ஏன் அப்படி இருக்கக் கூடாது? என முடிவு எடுத்தேன்.

இத்தனைக்கும் நான் சூப்பர் ஸ்டார் ரஜினிசார் ரசிகன்.

எனக்கு ரஜினி சார்ன்னா அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடல்தான் நினைவுக்கு வரும்.

ஒரு ரசிகனான எனக்கு அவர் கொடுத்தது அதுதான்” என்று பேசினார்.

More Articles
Follows