ரூ.500 கோடியை அள்ளியது 2.0; தமிழ் சினிமாவிற்கு ரஜினி தந்த பெருமை

ரூ.500 கோடியை அள்ளியது 2.0; தமிழ் சினிமாவிற்கு ரஜினி தந்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Proud moment for Tamil Cinema Rajinis 2pointO collected Rs 500 croresபிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ரூ. 550 கோடியில் 2.0 படத்தை தயாரித்து கடந்த நவம்பர் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 15000 தியேட்டர்களில் வெளியிட்டது.

ஷங்கர் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஏஆர். ரஹ்மான் இசையைமக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் வெளியானது முதல் உலகமெங்கும் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.

தற்போது ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் உலகமெங்கும் ரூ. 500 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் ரூ 500 கோடியை கடந்த நடிகர் என்ற பெருமையை நடிகர் ரஜினியும் இயக்குனர் என்ற பெருமையை ஷங்கர் ஆகிய இருவரும் பெற்று தந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு உலகளவில் பெருமை தேடித் தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Proud moment for Tamil Cinema Rajinis 2pointO collected Rs 500 crores

நாம் தமிழர் கட்சியே இல்லை; தவம் இசை விழாவில் சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியே இல்லை; தவம் இசை விழாவில் சீமான் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naam Tamilar is not a political party says Seeman at Thavam Audio launchபிரபு நடித்த ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீமான்.

அதன் பின்னர் ‘இனியவளே’, ‘வீரநடை’, ‘தம்பி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதில் ‘பாஞ்சாலங்குறிச்சி’, ‘தம்பி’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு சில படங்களிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

அதன்பின்னர் அரசியலில் ஆர்வம் காட்டி நாம் தமிழர் என்ற கட்சியை தொடங்கினார். இதனையடுத்து மேடைகளில் அனல் பறக்க பேசி வருகிறார்.

தன் பேச்சின் மூலம் தமிழர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விவசாயப் புரட்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘தவம்’ என்று படத்தில் நடித்துள்ளார்.

வசி என்பவர் தயாரித்து நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஆர். விஜய் ஆனந்த் மற்றும் ஏஆர். சூரியன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீமான் பேசும்போது…

நாட்டில் ஒரு பிரச்சினை நடந்தால் எவரும் கண்டுக் கொள்வதில்லை.

சினிமாவில் சமூக பிரச்சினையை பேசுபவர்கள் நேரில் பிரச்சினையை பேசுவதில்லை.

ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் என்னிடம் ஒரு குரல் கொடுக்க சொல்கின்றனர். நான் என்னய்யா டப்பிங் ஆர்ட்டிஸ்டா? இது நம்ம பிரச்சினை. எல்லாரும் பேச வேண்டும்.

நான் பேசுவதெல்லாம் படமாக வந்து கொண்டிருக்கிறது. பால் வேண்டும் என்கிறவன் மாடு வளர்ப்பதில்லை.

அழகான பெண் வேண்டும் ஆனால் பெண் குழந்தை வேண்டாம். இவர்கள் எல்லாம் பேசவே கூடாது. அவர்களின் நாக்கை அறுக்க வேண்டும்.

காரை இறக்குமதி செய்வதில் காட்டும் அக்கறை சோறை உற்பத்தி செய்வதில் காட்ட வேண்டும். அதைச் சொல்வதற்காகத் தான் இப்படியான படங்கள்.

என்னை விமர்சிப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். “என்னை விமர்சிப்பது உன் வேலை. உனக்கும் சேர்த்து போராடுவதுதான் என் வேலை.

நாம் தமிழர் என்பது ஒரு அரசியல் கட்சி கிடையாது. அது தமிழ் இனத்தின் அடையாளம்.

தவம் படம் விவசாயப் புரட்சியை பற்றி பேசியுள்ளது. படம் நன்றாக வந்துள்ளது.” என்று பேசினார் சீமான்.

Naam Tamilar is not a political party says Seeman at Thavam Audio launch

thavam audio launch seema

IRON LADY ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நித்யா மேனன்

IRON LADY ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நித்யா மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nithya Menon playing as Iron Lady in Jayalalitha biopicதமிழக மக்களால் அம்மா என அன்புடன் அழைக்கப்பட்டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

நடிகையாக பிரபலமாகி அரசியலில் ஆளுமையாக உயர்ந்தவர் இவர்

அவர் மரணமடைந்து இன்றுடன் (5-12-18) 2 ஆண்டுகள் ஆகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க உள்ளதாக இயக்குனர் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் தனி தனி படமாக எடுப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில் ப்ரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ‘THE IRON LADY’ என அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகியுள்ளது.

இன்று ஜெயலலிதாவின் நினைவு நாள் என்பதால் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘THE IRON LADY’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஜெயலலிதா தோற்றத்தில் நித்யா மேனன் படம் இடம் பெற்றுள்ளது.

Nithya Menon playing as Iron Lady in Jayalalitha biopic

Nithya Menon playing as Iron Lady in Jayalalitha biopic

60 வருட சினிமா வாழ்க்கைக்கு கமல் முற்றுப்புள்ளி; இந்தியன்-2 தான் கடைசி!

60 வருட சினிமா வாழ்க்கைக்கு கமல் முற்றுப்புள்ளி; இந்தியன்-2 தான் கடைசி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian 2 movie will be my last movie says Kamalhassanகுழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் கமல்ஹாசன்.

எம்ஜிஆர் – சிவாஜி என அனைவருடனும் நடித்துவிட்டார்.

கிட்டதட்ட 60 ஆண்டுகளாக சினிமாவில் புகழோடு நிலைத்து நிற்கிறார் கமல்ஹாசன்.

தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

எனவே தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

அண்மையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்தித்தார்.

இந்நிலையில், கேரளாவில் கீழகம்பளம் பஞ்சாயத்தில் டுவென்டி-20 திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 37வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் துவக்கவிழாவில் பங்கேற்க கமல்ஹாசன் கேரளா சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது…

அடுத்த வருடம் 2019ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ம் தேதி துவங்குகிறது.

இந்தப்படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கமாட்டேன்.” என தெரிவித்தார்.

இதனிடையில் கமல் தயாரித்து நடித்து இயக்கியுள்ள சபாஷ் நாயுடு திரைப்படம் அதற்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அரசியல் காரணத்துக்காக தன் நடிப்பை கமல் நிறுத்தினாலும் கமல் போன்ற உன்னத கலைஞர் இல்லாத சினிமாவை என்ன சொல்வது..?.

Indian 2 movie will be my last movie says Kamalhassan

57000 திரைகளில் ரஜினியின் *2.0*; சைனாவை அதிர வைக்கும் லைகா

57000 திரைகளில் ரஜினியின் *2.0*; சைனாவை அதிர வைக்கும் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DtlE3AEUUAE_aMjரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘2.0’.

ஷங்கர் இயக்கிய இப்படத்தை ரூ. 600 கோடியில் லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 15000 திரைகளில் வெளியாகி இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், இந்தப் படம் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் சீனாவில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளது லைகா.

இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

“சோனி, வார்னர் பிரதர்ஸ், யூனிவர்சல், டிஸ்னி உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களின் படங்களைத் தொடர்ந்து சீனாவில் வெளியிட்டு வரும் HY நிறுவனம், லைகாவுடன் இணைந்து 2.0 படத்தை சீனாவில் வெளியிடுகிறது..

2019-ம் ஆண்டு மே மாதம் இப்படம் 10000 திரையரங்குகளில், 57000 திரைகளில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகும்.

இதில் சுமார் 47000 திரைகள் 3டி திரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் படங்களில் சீனாவில் மிக அதிகமாக 3டி திரையில் வெளியாகும் படமாக ‘2.0’ இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்கள்.

மாரி 2 ரிலீஸை தள்ளிப் போட முடியாது. விஷாலுக்கு தனுஷ் பதிலடி.?

மாரி 2 ரிலீஸை தள்ளிப் போட முடியாது. விஷாலுக்கு தனுஷ் பதிலடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and vishalதனுஷ் தயாரித்து நடித்துள்ள மாரி2 படம் டிசம்பர் 21ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

இன்று இப்பட டிரைலர் வெளியானது.

இதனிடையில் தனுஷ் தயாரிப்பு நிறுவனமான ஃவுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

இரண்டு, மூன்று நாட்களாக இன்றைக்கு மீட்டிங் என்று தினேஷ் போன் பண்ணுவார். மீட்டிங்க்கிற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, தலைவருக்கு (விஷாலுக்கு) உடம்பு சரியில்லை அதனால் மீட்டிங் கேன்சல் என்று சொல்லுவார்.

இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

இது வேண்டுமென்றே செய்வது போல் தெரிகிறது. ‘காலா’ சமயத்திலும் இப்படித்தான் அமைந்தது.

இதனால், ‘மாரி 2’ படத்தை டிசம்பர் 21-ம் தேதி வெளியிடுவது என முடிவு பண்ணியிருக்கோம்.

இரண்டு மாதத்துக்கு முன்பாக கடிதம் கொடுத்துவிட்டோம். தணிக்கையும் ஆகிவிட்டது.

ரூ. 33 கோடி பட்ஜெட் ஆகியுள்ளதால், மாதம் 1 கோடி வரை வட்டிக் கட்ட வேண்டியுள்ளது.

கவுன்சிலுக்கு கட்டுப்பட்டு போக வேண்டும் என்று தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம்.

எந்தவொரு பதிலுமே யாருமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள். இதனால் எங்களுடைய முடிவு இது தான்.

இவ்வாறு அந்த ஆடியோ பதிவில் பேசியுள்ளார்கள்.

இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

More Articles
Follows