தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மேற்கு ஆஸ்திரேலியா டெர்பி மாநில டிராபிக் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு நபர் அதிக போதையில் வாகனத்தை ஓட்டியுள்ளார்.
அவரை பரிசோதித்தபோது அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த அளவு மயக்க மருந்தானது ஒருவர் கோமா நிலையில் இருப்பது சமம் அல்லது ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது கொடுக்கும் மருந்திற்கு சமம் என்று போலீசார் கூறியுள்ளனர்.
அதனை குறிப்பிடும் வகையில் ரஜினியின் 2.0 படத்தில் வரும் வசனம் உள்ள காட்சியை இதற்கு படமாக பதிவிட்டு ஒரு படத்தை டிசைன் செய்துள்ளனர்.
இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் அந்த பதிவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.