ரிஷிகேஷில் ரஜினி ரிலாக்ஸ்.; தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் ஆஜர்.!

ரிஷிகேஷில் ரஜினி ரிலாக்ஸ்.; தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் ஆஜர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் முன்னணி நடிகராகவும், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் ரஜினிகாந்த்.

ரஜினி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம்.

 உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார்.

இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டில் ‘காலா’, ‘2.0’ படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார்.

ரஜினிகாந்த்

அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்தார்.

தற்போது ‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ என இருப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த ரஜினி புதன்கிழமை தனது இமயமலை பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரகாண்டின் ரிஷிகேஷியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் உள்ள சாமிகளை சந்தித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த்

rajini visit swamy dayananda saraswathi ashram during himalayas trip

‘மாவீரன்’ மதன் உருவாக்கிய ‘நூடுல்ஸ்’.; விற்பனை செய்யும் ‘மாநாடு’ தயாரிப்பாளர்

‘மாவீரன்’ மதன் உருவாக்கிய ‘நூடுல்ஸ்’.; விற்பனை செய்யும் ‘மாநாடு’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில வருடங்களுக்கு முன் வெளியான ‘அருவி’ படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா ? ‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ‘அருவி’ மதன்.

அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ எனத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) திரு.அருண்பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார் ‘அருவி’ மதன்.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்று பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துவரும் பிரபல நடிகர் ஹரீஷ் உத்தமன் இப்படத்தில் கதை நாயகனாக நடித்திருக்கிறார்.

‘டூ லெட்’, ‘மண்டேலா’ உள்ளிட்ட படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்ற ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களது மகளாக ரவுடி பேபி புகழ் ஆழியா நடிக்க, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா மற்றும் பலர் நடிக்க, ‘அருவி’ மதனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை வினோத் கவனிக்க, படத்தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார்.

நல்ல கதையம்சம் கொண்ட கருத்தாழம் மிக்க படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டம் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘நூடுல்ஸ்’ படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார்.

படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக தனது ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் மூலமாக இந்தப்படத்தை வெளியிடுகிறார். வரும் செப்-1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நூடுல்ஸ்

இப்படத்தின் கதை பற்றியும் படம் உருவான அனுபவம் குறித்தும் இயக்குனர் அருவி மதன் கூறும்போது…

“இரண்டே நிமிடங்களில் பரிமாறக் கூடிய உணவு ‘நூடுல்ஸ்’. இப்படி இரண்டே நிமிடங்களில் நமது தேவையை தீர்க்கக்கூடிய, நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் பல சமயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால், நாயகி செய்த செயலால் அந்தக் குடும்பமே காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.

அதேபோல் கதை நெடுக தொடரும் இன்னும் சில இரண்டு நிமிட நிகழ்வுகளால் என்னென்ன திருப்பங்கள், எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன, இவர்கள் அந்தப் பிரச்சினையிலிருந்து எப்படித் தப்பிப்பார்கள் என்பதை மையப்படுத்தி இந்த ‘நூடுல்ஸ்’ படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது எனவும், குறிப்பாக நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும் நாயகியும் அவர்கள் குழந்தையும் எதிர்பாராத ஓர் சிக்கலில் தெரியாமல் மாட்டிக் கொண்டு படும் பாடும், அந்த நேரத்தில் அவர்களது பிரச்சனையை சரி செய்ய அவர்கள் வீட்டிற்குள் வரும் ஒருவர் செய்யும் உச்சபட்சக் காமெடியும், இதற்கிடையில் அந்தக் குடியிருப்பில் வசிப்போரின் பரிதவிப்பும் என படம் பார்க்கும் அனைவரையும் ஒன்றே முக்கால் மணி நேரமும் மிகுந்த எதிர்பார்ப்பினூடே சிரிப்பும், சுவாரசியமும், உற்சாகமுமாக உட்காரச் செய்யும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது எனவும் கூறினார்.,

சமீபமாக வெளியான ‘போர்த்தொழில்’, ‘குட்நைட்’ படங்கள் வரை நல்ல கதையம்சம் கொண்ட படங்களைப் பார்த்து கொண்டாடிய ரசிகர்கள் ‘நூடுல்ஸ்’ திரைப்படத்திற்கும் அதே வரவேற்பைக் கொடுப்பார்கள் என்று ‘நூடுல்ஸ்’ சிறப்புக் காட்சி பார்த்தவர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

அதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்தப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிட முன்வந்துள்ளது இன்னும் நம்பிக்கை அளிக்கிறது.

வரும் செப்-1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார் இயக்குநர் நடிகர் அருவிமதன்.

நூடுல்ஸ்

Actor Aruvi Madhans debut directorial Noodles

ரஜினிக்கு வாழ்த்து.; ஜெயிலருக்கு முதல்வர் பாராட்டு.; நெகிழ்ச்சியில் நெல்சன்

ரஜினிக்கு வாழ்த்து.; ஜெயிலருக்கு முதல்வர் பாராட்டு.; நெகிழ்ச்சியில் நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் நேற்று ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், சுனில், தமன்னா உள்ளிட்ட பல இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

மேலும் நேற்று வெளியான நாள் முதலே படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ளன.

நெல்சா நீ ஜெயிச்சிட்ட.. தலைவர் நிரந்தரம்.. என்ற கோஷங்களை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களிலும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி ‘ஜெயிலர்’ படத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திரையரங்கில் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்தபின் இந்த படத்தின் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

முதல்வர் தன்னை நேரில் பாராட்டியதால் நெகிழ்ச்சியில் இருக்கிறார் நெல்சன்.

மேலும் :ஜெயிலர்’ படத்தின் மெகா வெற்றிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் இருப்பதால் அவர் சென்னை திரும்பியதும் முதல்வரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு ரஜினி நன்றி தெரிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

TN CM Stalin appreciated Jailer Rajini and Team

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையில் ‘சந்திரமுகி 2’ பட முதல் பாடல் வெளியானது

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையில் ‘சந்திரமுகி 2’ பட முதல் பாடல் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.

ஆக்சன் + காமெடி + ஹாரர் ஜானரில்
‌தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் வேட்டையனாக தோன்றும் ராகவா லாரன்ஸின் கேரக்டர் லுக்கும், சந்திரமுகியாக நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தின் கேரக்டர் லுக்கும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ ஸ்வகதாஞ்சலி …’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியின் மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் சைதன்ய பிரசாத் எழுத, பின்னணி பாடகி ஸ்ரீநிதி திருமலா பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத் ஆடும் நடனத்தை டான்ஸ் மாஸ்டர் கலா வடிவமைத்திருக்கிறார்.

இந்தப் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் இணையத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைக்கா- ராகவா லாரன்ஸ்- கங்கணா ரணாவத்- பி வாசு -எம். எம். கீரவாணி கூட்டணியில் தயாராகி, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Swagathaanjali first single from Lycas Chandramukhi 2 released

JUST IN சத்யராஜின் தாயாரும் சிபிராஜின் பாட்டியுமான நாதாம்பாள் காலமானார்

JUST IN சத்யராஜின் தாயாரும் சிபிராஜின் பாட்டியுமான நாதாம்பாள் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை மாவட்டத்தை சேர்ந்த சத்யராஜ் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வில்லனாக உயர்ந்தார் .

அதன் பின்னர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக வளர்ந்து 100க்கும் மேற்பட்ட படங்களின் நடித்துள்ளார்.

தற்போது சத்யராஜின் மகன் சிபிராஜும் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். சத்யராஜின் மகள் திவ்யா டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக காலமானார். நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். வயது 94.

நாதாம்பாள்

சிபி நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தில் சத்யராஜ் தயாரித்திருந்தார். இந்த பட நிறுவனத்திற்கு நாதாம்பாள் என்று பெயரிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று ஆகஸ்ட் 11 (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

தாயார் மறைவு செய்தியறிந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.

நாதாம்பாள்

Actor Sathyarajs mother passes away

‘கிக்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சர்டிபிகேட்.; ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்.!

‘கிக்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சர்டிபிகேட்.; ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, மன்சூர் அலி கான், செந்தில், பிரசாந்த் ராஜ், மனோபாலா, தம்பி ராமையா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ளது.

பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு தணிக்கை குழு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.

‘கிக்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘கிக்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

கிக்

Santhanam’s ‘Kick’ movie to release in September

More Articles
Follows