இது தேர்தல் பிரச்சாரம் அல்ல.. சினிமா பிரச்சாரம்.. களத்தில் இறங்கிய ‘ரத்னம்’ இயக்குனர் ஹரி

இது தேர்தல் பிரச்சாரம் அல்ல.. சினிமா பிரச்சாரம்.. களத்தில் இறங்கிய ‘ரத்னம்’ இயக்குனர் ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இது தேர்தல் பிரச்சாரம் அல்ல.. சினிமா பிரச்சாரம்.. களத்தில் இறங்கிய ‘ரத்னம்’ இயக்குனர் ஹரி

ஏற்கனவே ஹரி – விஷால் கூட்டணியில் உருவான தாமிரபரணி பூஜை ஆகிய இரு படங்களை வெற்றி பெற்றன.

தற்போது இவர்களது கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ரத்னம்.

இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷாலின் 34-வது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ள இப்படம் நாளை வெள்ளிகிழமை (ஏப்.26) திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் புரமோஷன் பணிகளை இயக்குனர் ஹரி வித்தியாசமாக செய்து வருகிறார்.. அதாவது தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பது போல் தன் படத்தைக் காண தியேட்டருக்கு வாருங்கள் என இயக்குனர் ஹரி ரசிகர்களை சந்தித்து வருகிறார்.. பொதுமக்களை சந்தித்து படத்தை காண அழைப்பு விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து.. என்னை தெரியுதா? நான் தான் இயக்குனர் ஹரி.. நான் இயக்கிய உள்ள ரத்னம் படம் தியேட்டரில் வருகிறது.. தியேட்டருக்கு வந்து படம் பாருங்கள் என்றார்.

ஒரு சிலர் நிச்சயமாக படம் பார்ப்போம் என்று உறுதி அளித்தனர்.. ஒரு சிலர் டிக்கெட் எடுத்துக் கொடுங்கள் நிச்சயம் பார்க்கிறோம்” என்றனர்.

இப்படியாக வித்தியாசமாக பொதுமக்களை இயக்குனர் சந்தித்து படத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Director Hari movie campaign for Rathnam

—-

மே 10 முதல் அரசியல் பின்னணியில் அதகளம் செய்ய வரும் அமீர்

மே 10 முதல் அரசியல் பின்னணியில் அதகளம் செய்ய வரும் அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மே 10 முதல் அரசியல் பின்னணியில் அதகளம் செய்ய வரும் அமீர்

*மே-10ல் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு…. அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அமீர் நாயகனாக நடிக்க, நாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. PVR Inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது

‘உயிர் தமிழுக்கு’ பட வெளியீடு குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா கூறும்போது…

“ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இந்த வரவேற்பால் படத்தின் நாயகன் இயக்குநர் அமீருக்கும் எனக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சி.

மேலும் அமீர் படம் வந்து நீண்ட நாட்கள் ஆவதால் அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் சூட்டோடு சூட்டாக இப்படி ஒரு அரசியல் காதல் காமெடி படம் வெளியாவதால் நேரடியாக மக்களிடம் 100% கனெக்ட்டாகும்” என நினைக்கிறேன்.

இதுவரை பார்த்திராத ஒரு புது அமீரை ரசிகர்கள் இப்படத்தில் பார்க்கலாம். காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து ஏரியாவிலும் ஒரு மாஸ் எண்டர்டைனராக அதகளப்படுத்தியிருக்கிறார்.

வித்யாசாகரின் இசையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து மில்லியன் கணக்கில் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு உயிர் தமிழுக்கு சரியான விருந்தாக இருக்கும் இது இயக்குநராக, தயாரிப்பாளராக என்னுடைய கேரண்டி” என நம்பிக்கையுடன் கூறினார்.

Uyir Tamilzhuku set to release on 10th May

‘மண்டைக்கு சூரு ஏறுதே’… கோடையை இன்னும் சூடேத்த ‘சூது கவ்வும் 2’ பாட்டு

‘மண்டைக்கு சூரு ஏறுதே’… கோடையை இன்னும் சூடேத்த ‘சூது கவ்வும் 2’ பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மண்டைக்கு சூரு ஏறுதே’… கோடையை இன்னும் சூடேத்த ‘சூது கவ்வும் 2′ பாட்டு

சூது கவ்வும் 2’ படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் ‘சூரு’ பாடல் வெளியீடு…

ஏ ஆர் ரஹ்மான் இசைக் கல்லூரி முன்னாள் மாணவரான எட்வின் இசையமைத்துள்ள பாடலை கண்ணன் கணபதி, ஸ்டீபன் ஜக்கரியா, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளனர்*

தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து ‘மண்டைக்கு சூரு ஏறுதே’ எனும் உற்சாகமிக்க பாடல் திங்கட்கிழமை மாலை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ள இப்பாடலை, பிரபல மலேசிய கலைஞர் கண்ணன் கணபதி, முன்னணி சிங்கப்பூர் கலைஞர் ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

பாடலைப் பற்றி பேசிய இசையமைப்பாளர் எட்வின்…

“திரைப்படத்தின் பின்னணியில் வரும் பாடலான இதில், இதுவரை திரையுலகில் பயன்படுத்தப்படாத ‘சூரு’ எனும் தமிழ் வார்த்தையை உபயோகித்துள்ளோம்.

சூரு என்றால் கிராமத்து வழக்கில் அதீத உற்சாகத்தில் இருப்பது என்று பொருள். மலேசியாவிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இந்த பாடலுக்கு இது மிகவும் பொருத்தமாக இருந்ததால் இதை உபயோகப்படுத்தி உள்ளோம்,” என்றார்.

பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக கூறிய இசையமைப்பாளர் எட்வின், மலேசியாவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்டுள்ள கண்ணன் கணபதி, சிங்கப்பூரில் சாதனை படைத்துள்ள ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் இசையமைப்பாளராகவும் உள்ள பிரேம்ஜி அமரன் ஆகியோர் இப்பாடலுக்காக மிகச் சிறப்பான ஒத்துழைப்பு தந்துள்ளதற்கு நன்றி தெரிவித்தார்.

‘சூது கவ்வும் 2’ படத்திற்கு இசையமைப்பதற்கு தனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் சி வி குமாருக்கும் அவர் நன்றி கூறினார்.

‘சூது கவ்வும்’ வெளியாகி 11 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகமான ‘சூது கவ்வும் 2’ தயாராகி உள்ளது.

‘சூது கவ்வும்’ திரைப்படத்தின் முறையான இரண்டாம் பாகமாகவும் நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் சரிவிகிதத்தில் கலந்த பரபரப்பு திரைப்படமாகவும் ‘சூது கவ்வும் 2’ இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

‘சூது கவ்வும் 2’ படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Sooru a sensational song from Soodhu Kavvum 2 released

டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாகி கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா

டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாகி கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாகி கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா

*கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்*

*கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா’ எனும் படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.*

‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் ‘உத்தரகாண்டா’ எனும் படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்

இப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக ‘துர்கி’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பட பட்டியலில் ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’, ‘வடசென்னை’, தேசிய விருது பெற்ற படமான ‘காக்கா முட்டை’, ‘ஜோமௌண்டே சுவிஷேஷங்கள்’, ‘ டக் ஜகதீஷ்’, ‘வானம் கொட்டட்டும்’ என பல வெற்றி படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அவர் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.

‘உத்தரகாண்டா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது பிஜப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது. கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி. ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இயக்குநர் ரோஹித் பதகி இயக்கத்தில் உருவாகி வரும் ‘உத்தரகாண்டா’ திரைப்படத்தில் ‘கர்நாடக சக்கரவர்த்தி’ சிவராஜ்குமார், ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட் , கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தின் கலை இயக்கத்தை விஸ்வாஸ் காஷ்யப் கவனிக்க, பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி இசையமைக்கிறார்.

தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னட திரையுலகில் அறிமுகமாகி அங்கும் தன் முத்திரையை பதித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Aishwarya Rajesh debut in Kannada Cinema

ப்ரஜன் – இவானா நடிப்பில் வலிமை மிகுந்த காதலை சொல்ல வரும் ‘ராஞ்சா’

ப்ரஜன் – இவானா நடிப்பில் வலிமை மிகுந்த காதலை சொல்ல வரும் ‘ராஞ்சா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ரஜன் – இவானா நடிப்பில் வலிமை மிகுந்த காதலை சொல்ல வரும் ‘ராஞ்சா’

*திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர் ‘ராஞ்சா’*

இளம் திறமைகளை தேடிக் கண்டுபிடித்து திரையுலகில் அறிமுகம் செய்து அடையாளப் படுத்துவதில் முதன்மையாக திகழும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ‘ராஞ்சா’ எனும் புதிய திரைப்படத்திற்காக ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் உடன் இணைந்துள்ளது.

குறும்படம் இயக்கி கவனத்தை ஈர்த்த சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரஜன் மற்றும் இவானா வருண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அதிரன் சதீஷ், பத்மன் மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சந்தோஷ் ராவணன்…

“ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்ட இந்த கதையில் அவளை சுற்றி தொடர் மரணங்கள் நடைபெறுகின்றன. எதனால் அவ்வாறு நடக்கிறது, இதன் பின்னணியில் உண்மையில் இருப்பது என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லும் வகையில் ‘ராஞ்சா’ உருவாகி வருகிறது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்…

“காதலின் சக்தி அசாத்தியமானது, அபிரிதமானது. ஆக்கும், காக்கும், அழிக்கும் ஆற்றலை கொண்டது அது. இத்தனை வல்லமை மிகுந்த காதலை புதுமையான கோணத்தில், அதே சமயம் அதன் இயல்பு மாறாமல் திரையில் காட்ட முயற்சித்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.

‘ராஞ்சா’ படத்திற்கு ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் ஹரி இசையமைக்க, கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் எடிட்டர் அஷ்வின் ‘ராஞ்சா’ படத்தொகுப்பை கையாளுகிறார்.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி. குமார் மற்றும் ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஞ்சா’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Prajan and Ivana Varun starrer Raanjha

நவீன் இயக்கத்தில் ஆதேஷ்பாலா நடிப்பில் ரஷாந்த் இசையில் ரகுபதி வரியில் ‘தீட்டு’

நவீன் இயக்கத்தில் ஆதேஷ்பாலா நடிப்பில் ரஷாந்த் இசையில் ரகுபதி வரியில் ‘தீட்டு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவீன் இயக்கத்தில் ஆதேஷ்பாலா நடிப்பில் ரஷாந்த் இசையில் ரகுபதி வரியில் ‘தீட்டு’

தீட்டு ஆல்பம் பாடலின் முதற் பார்வை வெளிவந்துள்ளது.

சுபம் புரொடக்சன் சார்பில் நவீன் லக்ஷ்மன் மற்றும்  அருண்குமார் தயாரிப்பில்
நவீன லக்ஷ்மன் இயக்கத்தில் நடிகர் ஆதேஷ் பாலா நடிப்பில், கவிஞர் வி.ஜே.பி ரகுபதியின் வரிகளில் , ராஷாந் அர்வின் இசையில்,பாடகர் கானா பாலா குரலில்  பெண்களின் மாதாந்திர அவஸ்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘தீட்டு’ என்ற ஆல்பம் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

பாடலைப் பற்றி பாடலாசிரியர் கூறியதாவது..

நமது அறிவார்ந்த முன்னோர்கள் பெண்களின் மாதாந்திர காலங்களில் ஏற்படும் அவர்களது அவஸ்தையை புரிந்து கொண்டு பெண்களின் வசதிக்காக ஓய்வு கொடுக்கும் பொருட்டு அவர்களை தனிமை படுத்தினர்.

அதை தவறாக புரிந்து கொண்ட பிற்காலத்தினர் தீட்டு என்ற தீண்டாமை கொடுமையை பெண்களுக்கு காலங் காலமாக இழைத்து வருகின்றனர்.

இதை பற்றிய விழிப்புணர்வை துள்ளல் இசையில் பாடலாக்கி
பெண்மையை போற்றும் பாடலாக உருவாக்கி இருக்கிறோம்.

பாடல் விரைவில் வெளியாக உள்ளது என கூறியுள்ளார்.

இயக்கம் – நவீன் லக்ஷ்மன்
நடிகர்கள் -ஆதேஷ் பாலா, ரதி
ஒளிப்பதிவு -பாலாஜி பாஸ்கரன்
இசை- ரசாந்த் அர்வின்
பாடல் -வி.ஜே.பி ரகுபதி
பாடகர் -கானா பாலா.
தயாரிப்பு -அருண்குமார், மோனிஷா நவீன்.

Theetu album about Ladies mensturation

More Articles
Follows