தேசிய விருது பெற்ற பாடகர் சங்கர் மகாதேவனுக்கு டாக்டர் பட்டம்

தேசிய விருது பெற்ற பாடகர் சங்கர் மகாதேவனுக்கு டாக்டர் பட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் தனது வசீகர குரலினால் பலரையும் வசீகரித்து வருபவர் பாடகர் சங்கர் மகாதேவன்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியவர் சங்கர் மகாதேவன்.

இவர் தமிழில், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இடம்பெற்ற, ‘என்ன சொல்லப் போகிறாய்’, ‘சங்கமம்’ படத்தில் ‘வராஹ நதிக்கரையோரம்’, ‘ராவணன்’ படத்தில் ‘காட்டுச் சிறுக்கி’, ‘மின்சார கனவு’ படத்தில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’, ‘திருமலை’ படத்தில் ‘நீயா பேசியது’ உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், தேவா, எஸ் ஏ ராஜ் குமார், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி ஒவ்வோரு பாடல்களையும் கவனம் பெற வைத்தார்.

பின்னணி பாடகாராக மட்டுமல்லாமல் ‘ஆளவந்தான்’, ‘யாவரும் நலம்’, ‘விஸ்வரூபம்’ போன்ற பல படங்களுக்கு தனது நண்பர்கள் எசான், லாய் ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இடம் பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடலுக்கு சிறந்த பாடகர் என்ற தேசிய விருதினை பெற்றிருந்தார்.

இந்நிலையில், பாடகர் சங்கர் மகாதேவனுக்கு இங்கிலாந்து பார்மிங்ஹாம் நகரப் பல்கலைகழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இசை மற்றும் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்ததற்காக இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

popular singer shankar mahadevan receives honorary doctorate

பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த விஜய் – அஜித் பட நடிகை?

பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த விஜய் – அஜித் பட நடிகை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் சுரேகா வாணி.

இவர் தமிழில் விஜய்யின் ‘மெர்சல்’, ‘ஜில்லா’ படங்களிலும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திலும், தனுஷின் ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி.

இவர் சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

கே.பி.சவுத்ரியுடன் சுரேகா வாணி நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் வெளியானது.

இதனால் போதைப்பொருள் விவகாரத்தில் சுரேகா வாணியை தொடர்புபடுத்தி வலைத்தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

actress surekha vani for supplied drugs to celebrities

அறிமுக இயக்குனர் பைஜு பரவூர் மரணம்; திரையுலகினர் அதிர்ச்சி

அறிமுக இயக்குனர் பைஜு பரவூர் மரணம்; திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் புதுமுக இயக்குனர் பைஜு பரவூர்.

இவர் ‘ரகசியம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வந்தது.

இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை இயக்குனர் பைஜூ பரவூருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருவருக்கு வயது 42.

பைஜூ பரவூர் இயக்கிய முதல் படம் வெளியாகும் முன்பு அவர் மரணத்தை அடைந்தது அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பைஜு பரவூர் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Malayalam director Baiju Paravoor passes away

நிதி மோசடி: ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா வைத்த ஆப்பு.; நடிகர் தலைமறைவு.!

நிதி மோசடி: ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா வைத்த ஆப்பு.; நடிகர் தலைமறைவு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது சில மாதங்களுக்கு முன் அம்பலமானது.

பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்துக்கு 25% – 30% வரை வட்டி தருவதாக கூறியதால் ஏராளமானோர் முதலீடு செய்திருந்தனர்.

ஆனால் சொன்னபடி பணத்தை கொடுக்காததாலேயே ஆருத்ரா மோசடி புகாரில் சிக்கியது.

மக்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 350 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி இருப்பதாக அரூத்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆருத்ரா நிறுவனம் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த ரூசோ என்பவரிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வரையில் பணம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

வெளிநாட்டில் இருக்கும் நடிகர் ஆர்.கே. சுரேஷ் கடந்த 6 மாதமாக சென்னை திரும்பவில்லை.

காவல்துறை விசாரணைக்கு பயந்து அவர் அங்கேயே தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

Aarudhra Gold Scam Russo to RK Suresh bought Rs. 15 crores

ஒரு நாயகன் உதயமாகிறான்.; டிடிஎஃப் வாசன் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ஒரு நாயகன் உதயமாகிறான்.; டிடிஎஃப் வாசன் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் விஸ்வரூபம் எடுத்த பின்னர் அதில் பல பிரபலங்கள் உருவாகி வருகின்றனர்.

ஒரு சிலர் தங்களுடைய திறமையை உலகறிய செய்ய இந்த வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.

இப்படியாக தன் பைக் சாகசங்களை instagram மற்றும் youtube இல் பதிவேற்றம் செய்து பிரபலம் அடைந்தவர் TTF வாசன். இ்வர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

மிக அதிவேகமாக பைக் ஓட்டி அதனை வீடியோ எடுத்து யூடியுப்பில் பதிவேற்றம் செய்வார். இதனால் பல வழக்குகளை சந்தித்து காவல்துறையின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஆனாலும் இதை தொடர்ந்து செய்து மன்னிப்பும் கேட்டு சர்ச்சைகளில் சிக்குவார் இவர்.

இந்நிலையில், யூடியூபர் டி.டி.எப் வாசன் தமிழ் சினிமாவில் நாயகனாக களமிறங்கவுள்ளார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரும் 29-ஆம் தேதி வாசன் பிறந்தநாளில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Youtuber TTF Vasan entry in Tamil Cinema

ஹீரோ & வில்லன்.; தமிழ் – மலையாளம் என இரு குதிரைகளில் சௌந்தரராஜா சவாரி

ஹீரோ & வில்லன்.; தமிழ் – மலையாளம் என இரு குதிரைகளில் சௌந்தரராஜா சவாரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சௌந்தரராஜா.

இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் “கட்டிஸ் கேங்” என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தமிழிலும் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார் சௌந்தரராஜா.

அருள்நிதியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.

விஜய் இயக்கும் இந்த படத்தில் தான் சௌந்தரராஜா வில்லனாக நடிக்கிறாராம்.

இந்த படம் வெளியானவுடன் அதிக படங்களில் வில்லனாக நடிக்க சௌந்தர்க்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் வருகின்றன.

இவையில்லாமல் மலையாள இயக்குனர் அணில் இயக்கும் ‘சாயாவனம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சௌந்தரராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கணவன் மனைவியின் அழகிய உறவை சொல்லும் படமாக வளர்ந்து வருகிது.

Soundararajas upcoming movie in Tamil and Malayalam

More Articles
Follows