தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவில் தனது வசீகர குரலினால் பலரையும் வசீகரித்து வருபவர் பாடகர் சங்கர் மகாதேவன்.
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியவர் சங்கர் மகாதேவன்.
இவர் தமிழில், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இடம்பெற்ற, ‘என்ன சொல்லப் போகிறாய்’, ‘சங்கமம்’ படத்தில் ‘வராஹ நதிக்கரையோரம்’, ‘ராவணன்’ படத்தில் ‘காட்டுச் சிறுக்கி’, ‘மின்சார கனவு’ படத்தில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’, ‘திருமலை’ படத்தில் ‘நீயா பேசியது’ உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், தேவா, எஸ் ஏ ராஜ் குமார், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி ஒவ்வோரு பாடல்களையும் கவனம் பெற வைத்தார்.
பின்னணி பாடகாராக மட்டுமல்லாமல் ‘ஆளவந்தான்’, ‘யாவரும் நலம்’, ‘விஸ்வரூபம்’ போன்ற பல படங்களுக்கு தனது நண்பர்கள் எசான், லாய் ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இடம் பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடலுக்கு சிறந்த பாடகர் என்ற தேசிய விருதினை பெற்றிருந்தார்.
இந்நிலையில், பாடகர் சங்கர் மகாதேவனுக்கு இங்கிலாந்து பார்மிங்ஹாம் நகரப் பல்கலைகழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இசை மற்றும் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்ததற்காக இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
popular singer shankar mahadevan receives honorary doctorate