ரஜினியாக நடிக்க ஆசை.. கர்வமா இருக்கு.; இளையராஜா பட விழாவில் கமல் முன்னிலையில் தனுஷ் பேச்சு

ரஜினியாக நடிக்க ஆசை.. கர்வமா இருக்கு.; இளையராஜா பட விழாவில் கமல் முன்னிலையில் தனுஷ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியாக நடிக்க ஆசை.. கர்வமா இருக்கு.; இளையராஜா பட விழாவில் கமல் முன்னிலையில் தனுஷ் பேச்சு

இந்திய திரை உலகில் இசை சாம்ராஜ்யத்தை கடந்த 50 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா.

‘அன்னக்கிளி’ படம் முதல் தொடங்கி இன்று வரை ஒரு தன்னிகரற்ற இசை கலைஞராக இந்திய சினிமாவில் இசை ராஜாங்கம் நடத்தி வருகிறார்..

நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் இளையராஜா பாட்டு தான் நமக்கு துணை.

இளையராஜாவின் இசைக்காகவே பாடலுக்காகவே வெள்ளிவிழா கண்ட படங்கள் பல உண்டு..

ரசிகர்களின் உயிரோடு இசையாக கலந்து விட்ட இளையராஜாவை போற்றவும் பாராட்டவும் வார்த்தைகள் இல்லை எனலாம்.

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இளையராஜாவின் வாழ்க்கையை தற்போது திரைப்படமாக உருவாக்க முன்வந்துள்ளனர்.

இந்தப் படத்தை Sriram Bakthisaran
C.K.Padma Kumar
Varun Mathur
Ilamparithy Gajendran
Saurabh மிஸ்ரா ஆகியோர் தயாரிக்கின்றனர்

இந்தப் படத்தில் இளையராஜாவாக கதையின் நாயகனாக நடிக்கிறார் தனுஷ். இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

இவர்களுடன் வெற்றிமாறன், சுகாசினி, பாரதி பாஸ்கர், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலரும் இளையராஜாவுடன் பங்கேற்றனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு இளையராஜா என்று தலைப்பிட்டுள்ளனர்.. சமீபத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கியவர் அருள் மாதேஸ்வரன் என்பது தங்களுக்கு நினைவு இருக்கலாம்.

ஒளிப்பதிவை நீரவ்ஷா மேற்கொள்ள கலைப் பணிகளை முத்துராஜ் கவனிக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

நடிகர் தனுஷ் மேடையில் பேசும்போது..

நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் இருவரின் வாழ்க்கை படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். ஒருவர் இசைஞானி இளையராஜா. மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தற்போது ஒரு ஆசை நிறைவேறி இருக்கிறது.. இளையராஜாவின் பயோபிக் வாழ்க்கை படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த இடத்திற்கு நான் வந்துள்ளது நினைக்கும் போது கொஞ்சம் கர்வமாகவும் இருக்கிறது. இளையராஜாவை பற்றி நிறைய பேச இருக்கிறது.

இது தற்போது படத்தின் தொடக்க விழா என்பதால் குறைவாக பேசிக்கொள்கிறேன். நிறைய பேச வேண்டும். இனி வரும் காலங்களில் இந்த பட விழாக்களில் நிறைய பேசலாம்.

இந்த விழாவிற்கு வந்து பெருமை சேர்த்த கமல்ஹாசன் வெற்றிமாறன் ஆகியோருக்கு நன்றி” என்று பேசினார் தனுஷ்..

I wish to act in Rajini and ilaiyaraja bipoic says Dhanush

Connekkt Media
PK Prime Production
& Mercuri Movies

DHANUSH
As
ILAIYARAAJA

Directed by :
Arun Matheswaran
DOP : Nirav Shah
Production Designer : Muthuraj

Produced by :
Sriram Bakthisaran
C.K.Padma Kumar
Varun Mathur
Ilamparithy Gajendran
Saurabh Mishra

ஆணவக் கொலையில் மறுஜென்ம கதை..; பேயாக மிரட்ட வரும் மஹானா

ஆணவக் கொலையில் மறுஜென்ம கதை..; பேயாக மிரட்ட வரும் மஹானா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆணவக் கொலையில் மறுஜென்ம கதை..; பேயாக மிரட்ட வரும் மஹானா

நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் கங்கா தேவி

குமரன் சினிமாஸ் சார்பில் K.N.பூமிநாதன் தயாரிக்கும் படம் ‘கங்கா தேவி’. ராகவா லாரன்ஸின் சீடரும் ‘சண்டிமுனி’ படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர், க்ரைம் கலந்த திரில்லர் கதையாக இது உருவாகிறது

கதாநாயகியை மையப்படுத்தி உருவாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மஹானா நடிக்கிறார். ‘கருமேகங்கள் கலைகின்றன’, ‘வா வரலாம் வா’ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘அட்டு’ படத்தில் நடித்த ரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கிறார். நளினி முக்கிய வேடத்தில் நடிக்க ஆர்த்தி, கணேஷ் இருவருமே இந்த படத்தில் முதன்முறையாக கணவன் மனைவியாக இணைந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சூப்பர் சுப்பராயன், மொட்ட ராஜேந்திரன், மற்றும் சாய்தீனா ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் மில்கா செல்வகுமார் கூறும்போது…

“ஆணவக்கொலையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது.. ஒரு ஜமீன் குடும்பத்திற்கு மருமகளாக வரப்போகும் பெண் அந்த வீட்டிற்குள் நுழைய, அடுத்தடுத்து பல பிரச்சினைகள் நடக்கின்றன. அதற்கு காரணம் யார் என்பதும் அதை ஜமீன் குடும்பத்தினரும் அந்த பெண்ணும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் தான் இந்த படத்தின் கதை.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் ‘கங்கா தேவி’ படத்தில் ஹாரர், திரில்லிங், காமெடி என எல்லா அம்சங்களுமே கலந்து இருக்கின்றன” என்றார்.

வரும் தமிழ்ப் புத்தாண்டு பிறந்ததும் பழனி அருகே உள்ள நெய்க்காரன் பட்டியில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதை அடுத்து பாலக்காடு அரண்மனை, குற்றாலம், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சென்னையில் ஒரு பாடல் காட்சிக்காக மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

*நடிகர்கள்*

யோகி பாபு, ரிஷி ரித்விக், மஹானா, நளினி, ஆர்த்தி, கணேஷ், மொட்ட ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சாய் தீனா மற்றும் பலர்.

*தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம்*

தயாரிப்பு ; குமரன் சினிமாஸ் – K.N.பூமிநாதன்

இயக்கம் ; மில்கா செல்வகுமார்

இசை ; வித்யா சரண்

ஒளிப்பதிவு ; சுரேஷ்

படத்தொகுப்பு ; ஸ்ரீகாந்த்

பாடல் ; வ.கருப்பன் மதி

நடனம் ; கலா, அசோக் ராஜா, லாரன்ஸ் சிவா

கலை ; முத்துவேல்

சண்டைப் பயிற்சி ; சூப்பர் சுப்பராயன்

தயாரிப்பு நிர்வாகம்: ஆர். ஜி. சேகர்.

காஸ்டிங் : தேஜா

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Mahana Yogibabu starrer Ganga Devi

என் லைப்ல நிறைய… ஆனால் ‘ஆடுஜீவிதம்’ இயக்குனர் வாழ்க்கையில் 16 வருடங்கள் போச்சு.. – பிருத்விராஜ்

என் லைப்ல நிறைய… ஆனால் ‘ஆடுஜீவிதம்’ இயக்குனர் வாழ்க்கையில் 16 வருடங்கள் போச்சு.. – பிருத்விராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என் லைப்ல நிறைய… ஆனால் ‘ஆடுஜீவிதம்’ இயக்குனர் வாழ்க்கையில் 16 வருடங்கள் போச்சு.. – பிருத்விராஜ்

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப் (The Goat Life)- ஆடுஜீவிதம்’ திரைப்படம் 28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை பிளெஸ்ஸி இயக்கியிருக்க பிருத்விராஜ் சுகுமாரன், அமலாபால் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நடிகர் பிருத்விராஜ் பேசியதாவது…

“இந்தப் படம் கிட்டத்தட்ட 16 வருடப் பயணம். 2008ல் இயக்குநர் பிளெஸ்ஸி என்னிடம் வந்து, ‘நஜீப்பாக நீங்கள் தான் நடிக்க வேண்டும்’ எனக் கூறினார்.

மோகன்லால் சார், மம்முட்டி சார் என மலையாளத்தில் பெரிய ஸ்டார்கள் எல்லோரும் பிளெஸ்ஸியுடன் ஒரு படமாவது செய்து விட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படியான முன்னணி இயக்குநர்தான் பிளெஸ்ஸி. அவர் ஒரு படத்திற்காக 16 வருடம் செலவிட்டது என்பது அவருடைய கமிட்மெண்டை காட்டுகிறது.

2009 ல் இந்தப் படம் செய்யலாம் என முடிவெடுத்து அதன் பிறகு படப்பிடிப்புக்கு செல்ல பத்து வருடங்கள் ஆனது. ஏனெனில், மலையாள சினிமாவில் அதற்கான கேமரா, இன்னும் சில விஷயங்கள் அப்போது சாத்தியமே இல்லாமல் இருந்தது. படம் ஆரம்பிக்கும்போது யார் இசை என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது. ரஹ்மான் சார் மற்றும் ஹேன்ஸ் ஸிம்மர் இருவருடைய பெயர்கள் தான் நாங்கள் நினைத்திருந்தோம்.

ஹேன்ஸ் ஸிம்மர் அணியில் இருந்து எங்களுக்கு ரிப்ளை வந்தது. ஆனால், அந்த சமயத்தில் ரஹ்மான் சாரை எப்படித் தொடர்பு கொள்வது என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. ரஹ்மான் சார் இசை மக்களுக்கு இன்னும் நெருக்கமானதாக இருக்கும் என நம்பினோம். பின்பு, அவரும் நாங்கள் பெரிதாக எதையோ செய்யப் போகிறோம் என்பதைப் புரிந்து கொண்டு எங்களுக்கு சம்மதம் சொன்னார். அவர் பெயர் எங்கள் படத்துடன் சேர்ந்ததும் மக்களிடம் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. அவருக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

மூன்று, நான்கு வருடங்கள் பாலைவனத்தில் சிக்கிய ஒருவரின் வாழ்க்கையை இந்த கதை கூறுகிறது. அப்படி இருக்கும் பொழுது படத்தின் ஆரம்பத்தில் நன்றாக எடை கூடினேன்.

கேரளாவில் படப்பிடிப்பு முடித்த பின்பு ஏழெட்டு மாதங்கள் படப்பிடிப்பை நிறுத்தி விட்டார்கள். எனக்கு உடல் எடை குறைய பிளெஸ்ஸி அவகாசம் கொடுத்தார். பின்பு 2020ல் ஜோர்தான் சென்று படப்பிடிப்பு தொடங்கினோம்.

ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய கொஞ்சம் நாட்களிலேயே, கொரோனா வந்ததால் மூன்று மாதங்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் மொத்த குழுவும் அங்கேயே சிக்கினோம். அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா, இந்த படம் இனி நடக்குமா என எதுவுமே தெரியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு முறையான அனுமதி பெற்று நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அல்ஜீரியா, சஹாரா பாலைவனத்திற்கு சென்று படப்பிடிப்பு நடத்தினோம். பின்பு ஜோர்தான் சென்று அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாதவற்றை ஷூட் செய்தோம். பின்பு, கேரளா வந்தோம். 2022 இல் இருந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு ஒன்றரை வருடம் ஆனது.

இந்தப் படத்திற்கு நான் ஓகே சொன்ன 2008 சமயத்தில் எனக்கு திருமணம் ஆகவில்லை, தயாரிப்பாளர், டிஸ்ட்ரிபியூட்டர் என்று எந்த முகமும் அப்போது எனக்கு இல்லை. இத்தனை வருட பயணத்தில் எனக்கு இன்னொரு முகமாக இந்தப் படம் இருக்கிறது. சினிமாவுக்கு குறிப்பாக மலையாள சினிமாவுக்கு இப்போது நல்ல நிலைமை.

இது போன்ற சமயத்தில் எங்கள் படம் வருவது மகிழ்ச்சி. படத்தை தமிழகத்தில் டிஸ்ட்ரிபியூட் செய்ய ஒத்துக்கொண்ட உதயநிதி சாருக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் நன்றி. இந்த படம் நஜீப் என்ற மனிதனின் போராட்டத்தையும் அவரது தன்னம்பிக்கையும், அவரை போல இருக்கக்கூடிய பலருக்குமான அர்ப்பணிப்பு. திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள்” என்றார்.

பாடலாசிரியர் மஸூத் ரஹ்மான்..

“இந்தப் படத்தில் ‘பெரியவனே…’ என்ற பாடல் நான் எழுதியிருக்கிறேன். ரஹ்மான் சார் இசையில் இதுவரை நான்கைந்து பாடல் எழுதியிருக்கிறேன். சமீபத்திய பாடலாக ‘லால் சலாம்’ ஜலாலி பாடலைக் குறிப்பிடலாம். ‘ஆடுஜீவிதம்’ படத்தின் இந்தப் பாடல் எனக்கு இன்னும் ஸ்பெஷல்.

ஏனெனில், ரஹ்மான் சாரின் மெலோடிக்கு பாடல் எழுதி இருக்கிறேன். இந்த பாடலின் இசையே எனக்கு தேவையான சொற்களை கொடுத்தது. ரஹ்மான் சாருக்கு நன்றி. பிருத்திவிராஜ் சாரின் ‘மொழி’ படம் எனக்கு எப்போதுமே பிடித்தமானது. இந்தப் படமும் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.

பாடலாசிரியர் சிநேகன்…

“வரலாற்று சிறப்புமிக்க இந்த மேடையில் இருப்பதற்கு நான் ரஹ்மான் சாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘ஆடுஜீவிதம்’ நாவல் நிறைய பேர் படித்திருப்போம். பல லட்சம் பிரதிகள் விற்பனையான அற்புதமான ஒரு கதை. பிருத்திவிராஜ் சார் சொன்னது போல மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு வாழ்வியல் களம். அப்படியான ஒரு கதையை படமாக எடுத்த பிளெஸ்ஸி சாரின் முயற்சி போற்றுதலுக்குரியது.

இது ஒரு எழுத்தாளருக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். இந்தப் படத்தில் நானும் ஒரு புள்ளியாக இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. படத்தில் இசை ஒரு கதாபாத்திரமாக நகர்ந்து கொண்டே இருக்கும். நஜீப், நடை பிணமாக படத்தில் இருக்கும் பொழுது அவனுக்குள்ளும் உணர்வு இருக்கிறது என்பதை ரஹ்மான் சாரின் இசை கடத்திக் கொண்டே இருக்கும். படத்தை பெரிய திரையில் பார்க்க ஆவலாக உள்ளேன். நன்றி”.

இசையமைப்பாளர் ரஹ்மான்…

“இந்தப் படம் ஒத்துக்கொள்ளும் பொழுது சீக்கிரம் முடிந்து விடும் என்று நினைத்தேன். ஆனால், ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படத்தில் வேற லெவல் நடிகராக பிருத்விராஜ் உள்ளார்.

பிளெஸ்ஸி சிறப்பான இயக்கத்தை கொடுத்துள்ளார். சிலர் என்னிடம் கேட்டார்கள். ‘இந்த படம் ‘மரியான்’ போல இருக்குமா என்று!’. ‘மரியான்’ ஃபிக்‌ஷன். ஆனால் இது உண்மையான கதை.

இந்த படத்தின் கதையான ‘ஆடுஜீவிதம்’ புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. அப்படி என்றால் அதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று அர்த்தம். அது என்னவென்று நீங்கள் படம் பார்த்து கண்டுபிடித்து சொல்லுங்கள்”.

இயக்குநர் பிளெஸ்ஸி…

“இந்த படத்தைப் பற்றி நான் பேசுவதை விட இந்த படம் தான் பேச வேண்டும் என்று நினைப்பேன். கடந்த 20, 25 வருடத்தில் ரஹ்மான் சார் போல ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை.

ஏனெனில், இந்த கதை ஆரம்பிக்கும் பொழுது என்னிடம் பெரிய தயாரிப்பு நிறுவனமோ மற்ற எதுவுமே இல்லை. நஜீப் என்ற கதாபாத்திரத்தின் ஆழம் மட்டுமே இருந்தது. அதை புரிந்து கொண்டு ரஹ்மான் சார் இந்த படத்திற்குள் வந்தார். 2017 ஆம் வருடத்தில் இருந்து இந்த படத்திற்காக ட்ராவல் செய்திருக்கிறார். அவருடைய அர்பணிப்புக்கு நன்றி.

பிருத்திவிராஜ் இப்பொழுது என்னுடைய தம்பி போல. அவர் சொன்னது போல இந்த 16 வருடத்தில் அவருக்கு திருமணம், குழந்தை, தயாரிப்பாளர் என பல விஷயங்கள் பார்த்துவிட்டார்.

ஆனாலும் இந்த படம் தொடங்கியது போலவே இப்போது வரை அதே ஈடுபாட்டோடு இருக்கிறார். ஒளிப்பதிவாளர் சுனில் நான் நினைத்ததற்கும் மேலாக படத்தை திரையில் கொண்டு வந்துள்ளார். ஜிம்மியும் சிறப்பாக நடித்துள்ளார். நமது தென்னிந்தியாவில் நிறைய பேர் சவுதி, குவைத் என பல இடங்களுக்கு சென்று கஷ்டமும் பட்டுள்ளனர்.

சாதனைகளும் புரிந்து பணமும் சம்பாதித்துள்ளனர். இப்படியான அனைவருக்குமே இந்த படம் கனெக்ட்டடாக இருக்கும். நம் வாழ்வில் எவ்வளவு கஷ்டமும் மன அழுத்தமும் இருந்தாலும் உள்ளே ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நம் வாழ்வில் வெற்றியை பார்க்க முடியும் என்பது தான் இந்த கதை. படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

Prithiviraj emotional speech at The Goat life event

‘தமாகா’ வெற்றியை தொடர்ந்து ‘திருட்டு பாடம்’.: கரம் கொடுத்த விஜய்சேதுபதி

‘தமாகா’ வெற்றியை தொடர்ந்து ‘திருட்டு பாடம்’.: கரம் கொடுத்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமாகா’ வெற்றியை தொடர்ந்து ‘திருட்டு பாடம்’.: கரம் கொடுத்த விஜய்சேதுபதி

விஜய் சேதுபதி வெளியிட்ட திருட்டு பாடம் டீசர், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திருட்டு பாடம்

இயக்குநர் திரிநாதா ராவ் நக்கினா மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டமனேனி இணைந்து ‘திருட்டு பாடம்’ என்ற படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் திரிநாதா ராவ் தயாரிப்பாளர் பணியை மேற்கொள்ள, கார்த்திக் கதையை வித்தியாசமாக எழுதி இருக்கிறார்.  முன்னதாக இந்த கூட்டணி உருவாக்கிய ‘தமாகா’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

‘திருட்டு பாடம்’ படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார். டீசரின் படி இந்த படத்தின் கதை எப்படி பயணிக்கும் என்பதையும் கதையை நகர்த்தும் விதமும் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்டவையும் தெரியவந்துள்ளது.

கதையில் நான்கு சிறு திருடர்கள் இணைந்து அவர்களது கிராமத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். கதையின் நாயகன் இந்திரா ராம் தனது குழுவை கொள்ளையடிக்க வழிநடத்துகிறார். இதற்காக இவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களை கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

டீசரில் ஒரு நண்பர்கள் குழுவில் நடக்கும் சம்பவங்கள் பொழுதுபோக்காக இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தின் நாயகி பயல் ராதாகிருஷ்ணாவின் கதாபாத்திரம் கதையில் சுவாரஸ்யத்தை ஏற்றுகிறது.

அறிமுக இயக்குநர் நிகில் கொள்ளமாரி கதையை சிறப்பாக கையாண்டு பல்வேறு எதிர்பாரா திருப்பங்கள் மூலம் காமெடியை கொண்டு வந்திருப்பது டீசரில் வெளிப்பட்டு இருக்கிறது. ‘திருட்டு பாடம்’ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ள ‘திருட்டு பாடம்’ ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும். திரிநாதா ராவ் நக்கினா மற்றும் கார்த்திக் கட்டமனேனி கூட்டணியில் மற்றும் ஓர் வெற்றி படமாக இது அமையும்.

Thiruttu Paadam first look launched by Vijaysethupathi

The promising #Thiruttupaadam Teaser launched by Makkal Selvan @VijaySethuOffl 🌟

Watch ▶️ https://youtu.be/gfjNf2zIiTA

🌟ing @indhraram @payal_radhu

@NGollamari @TrinadharaoNak1 @Karthik_gatta @Srinagendra_Art @davzandrockz @uthuraa @NNOffl_ @Iconmusicsouth @prosathish

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் : STEM துறைகளில் பெண்கள் குறித்து சர்வதேச மாநாடு

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் : STEM துறைகளில் பெண்கள் குறித்து சர்வதேச மாநாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனித பரிமாண வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என STEM துறைகளின் பங்கு முக்கியமானது. உலகளவில் STEM துறைகளில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, STEM துறைகளில் பெண்கள் எனும் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு சென்னை அண்ணா பல்கலைகழக விவேகானந்தா அரங்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அகரம் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் அண்ணா பல்கலைகழகம், முல்லை கல்வியியல் நிறுவனம் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றனர். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் மாநாட்டில் தொடக்க உரையாற்றினார். நிகழ்வில் அகரம் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா சிறப்புரை வழங்கினார்.

மாநாட்டில் சூர்யா பேசியதாவது…

அகரத்திற்கு இன்று ரொம்ப முக்கியமான நாள். முதல் முறையா Academic Focus பண்ணி STEM தொடர்பா ஒரு Conference நடத்துறோம். கடந்த பதினைந்து வருட அகரம் விதைத் திட்ட பணிகளில் இதுவரைக்கும் 52௦௦-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிச்சிருக்காங்க.. படிச்சிட்டு இருக்காங்க… அதில் 70% பேர் தங்கைகள்… பெண்கள் தான் படிக்கிறாங்க… அது முக்கியமான பங்களிப்புன்னு நினைக்கிறேன். தொடர்ச்சியா பெண்கள் கல்விக்கு உறுதியா நிற்க முடிஞ்சது பெரிய achievement-ஆ பார்க்குறேன்.

இவ்வளவு பெண் பிள்ளைகளுக்கு Support பண்றோம்.. பெண்கள் படிச்சிர்றாங்க… அப்படின்னு யோசிச்சாலும் அதுக்குள்ள வேற என்ன பண்ணனும்? வேற என்ன பண்ணனும்னு யோசிக்கும் போது தான் Realise பண்ண விஷயம்.. ஒரு Science சம்மந்தப்பட்ட துறைகளிலையோ, படிப்புகளிலோ.. அதற்கு அப்புறமா அது சம்மந்தப்பட்ட வேலைகளையோ.. Science-னா, Science மட்டுமில்லை Science, Engineering, Technology, Mathematics; அந்த STEM துறைகள்ல படிக்கிறதும்; அது சார்ந்த பணிகள்-ல Continue பண்ணறதும் ரொம்ப குறைவா இருக்கு. ஏன் இப்படி இருக்கு அப்படின்னு பார்க்கும் பொழுது, இது அகரம் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல. உலகம் முழுக்கவே இந்த Challenge இருக்கு 30% பெண்கள் தான் STEM சம்பந்தப்பட்ட துறைகள்ல உலகம் முழுக்க பங்கேற்காங்குறாங்க.. ஏறக்குறைய 12 மில்லியன் பெண்கள் உலகம் முழுக்க STEM சம்மந்தப்பட்ட துறைகள்ல வேலை செஞ்சிட்டு இருக்கிறாங்க. ஆனா.. எப்படி பார்த்தாலும் அது ஆண்களை விட மிக மிக மிக குறைவு தான்.

ஏன் பெண்களின் பங்கு குறைவா இருக்குங்கறதுக்கு உலகளவுல நிறைய ரிப்போர்ட் இருக்கு. பெரிய அளவுல பாகுபாடு காட்டப்படுது காரணமா சொல்லப்படுது. வீட்ல ஆரம்பிச்சு குழந்தைகள் பிறந்து வளரும் சூழல்.. ஆண் பெண் விளையாட்டு பொருள் வாங்கி கொடுக்குறதுல இருந்தே பாகுபாடு இருந்துகிட்டே இருக்கு… STEM துறைகள்ல பெண்கள் வர்றதுக்கு இந்த பாகுபாடான அணுகுமுறை தடையா இருக்கு. இந்த பாகுபாடு குறித்து பேசணும், அத புரிஞ்சுக்கணும்.. அத உடச்சி தகர்த்து வெளிய வரணும்னு தோணிச்சி..

STEM-ங்கறது Science, Engineering, Technology, Mathematics மட்டுமல்ல. அது ஒரு Creativity, Problem Solving, Innovation சம்மந்தப்பட்டது. Resilience, Problem Solving Capability, Creative-ஆ யோசிக்கிறது, innovative இருக்கிறது பெண்களுக்கு இயல்பா இருக்கு. ஆனா, அத தாண்டி அவங்களுக்கான Space ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கு. அதுக்கு ரொம்ப முக்கியமான காரணம்-னு Research என்ன சொல்லுதுன்னா.. பெண்களுக்கான Roll Model; அவங்கள மாதிரியே அவங்க பார்க்கவேண்டிய Roll Model ரொம்ப குறைவா இருக்கிறாங்க. Roll Models இல்லாததாலேயே அதுக்குள்ள போகுறதுல தயக்கமும், மனத்தடையும் இருக்குன்னு சொல்றாங்க.

இங்க நம்ம முன்னாடி இருக்கிற உதாரணங்கள் எல்லாம் Actually அவ்வளோ பெண்கள் STEM-ல சாதிச்சிருக்காங்க. ஆனா நமக்கு வெளியில தெரியறது கிடையாது. உதாரணத்திற்கு நிறைய முன்னோடி பெண்கள் வரலாறு முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். இன்னக்கி நாம புழங்குற பல விஷயங்கள் கண்டுபிடிச்சவங்க பெண்கள் தான்.

அடுத்த இரண்டு நாள் நாம பார்க்கப்போற, உரையாடப் போற Resource Persons எல்லாமே STEM துறைகள்ல சிறந்த பங்களிப்புகளை வழங்கிய வழங்க இருக்கின்றவர்கள். பல ஆய்வுகள செஞ்சிட்டு இருக்கிற ஆளுமைகள். இவங்களோட நீங்க பேசணும், உரையாடனும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கணும். உலகம் பரந்து இருக்கிறது அதில் இருக்கும் வாய்ப்புகளை நீங்கள் எல்லோரும் தெரிஞ்சிக்கணும்.. புரிஞ்சுக்கணும் தான் இந்த Empower’-ஒட முக்கியமான purpose. STEM குறித்த விழிப்புணர்வை ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வி கூடங்களில் பரவலாக உருவாக்கவேண்டும்.

சமீபத்தில் Interesting ஆய்வு குறித்து பேசிட்டு இருந்தோம். அந்த ஆய்வு Harvard பல்கலைகழகத்தில் Engineering படிக்கிற ஆண்கள், பெண்கள் மத்தியில் நடத்தப்பட்டது அந்த ஆய்வுல என்ன சொல்றாங்கன்னா பெண்களும் இஞ்சினியர்ஸ்-ஆ இருக்காங்க; ஆண்களும் இஞ்சினியர்ஸ்-ஆ இருக்காங்க. ஆனால் அதிகபட்சமா இங்க ஆண்கள் தான் இஞ்சினியரிங் வேலைகளுக்குள்ள இருக்காங்க. பெண்கள் இஞ்சினியரிங் வேலைகளுக்குள்ள வந்தாங்கன்னா, என்ன செய்வாங்க? என்ற அந்த ஆய்வோட முடிவு என்ன சொல்லுதுன்னா… பெண்கள் வந்தாங்கன்னா இவங்க ரொம்ப ரொம்ப சமூகப் பொறுப்போட Socially Conscious இருப்பாங்க. பெண்கள் பிரச்சனைகளை ரொம்ப realistic-ஆ அணுகுவாங்க. பிரச்சனைக்கு இவங்க யோசிக்க கூடிய தீர்வு.. அதை விட ரொம்ப யதார்த்தமாகவும், செயல்படுத்த கூடியதாகவும், மக்களுக்குரியதாகவும் இருக்கும். அது வெறும் பணம் சம்பாதிக்கதுக்குரியதாக இல்லாம மக்களுக்கானதாக இருக்கும்-னு அந்த ஆய்வு சொல்லுது. அதனால் தங்கைகள் ஒவ்வொருவரும் தொடர்ச்சியாக Research, கண்டுபிடிப்புகளுக்குள்ளும், STEM சம்மந்தப்பட்ட துறைகளில் உங்களை தொடர்ந்து இயக்குங்கள். இதுல Career, வாய்ப்பும், தேவையும் நிறைய இருக்கு.. முயற்சி செய்திங்கனா நீங்கள் கண்டிப்பா சாதிக்க முடியும். STEM துறைகளில் பெண்களின் பங்கேற்ப்பு குறித்த உரையாடலை, செயல்பாட்டை தொடங்க வேண்டும் என்பதற்கே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாடு நடக்கறதுக்கு காரணமாக இருகின்ற முனைவர் விஜய அசோகன், இதனை முதல் நாளில் இருந்து கையில் எடுத்து செயல்வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் அகரம் Volunteers ஒவ்வொருவருக்கும், Academicians, இந்த மாநாட்டை நடத்த இடம் வழங்கி முன் நிற்கும் அண்ணா பல்கலைகழகத்திற்கும் அதன் Registrar, துணைவேந்தர், பேராசிரியர்கள் அனைவருக்கும் நன்றி..

Actor Suriya speaks about STEM at Students meet

போதை கடத்தலுடன் தொடர்பா.? அவதூறுக்கு ஆபத்து.; 5 கோடி நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பாளர்

போதை கடத்தலுடன் தொடர்பா.? அவதூறுக்கு ஆபத்து.; 5 கோடி நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போதை கடத்தலுடன் தொடர்பா.? அவதூறுக்கு ஆபத்து.; 5 கோடி நஷ்டஈடு கேட்கும் தயாரிப்பாளர்

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்கள், ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர்

மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மாலிக் பின் தஸ்திகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முக தன்மை கொண்டவர் இவர்.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல ஆயிரம் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்.

இவருடைய சமூக சேவையை பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சர்வ தேச அளவில் ‘மாஸ்டர் கிளாஸ் தொழில் முனைவோர்‘ என்ற விருதும் பெற்றுள்ளார்.

கடின உழைப்பு மூலம் இளம் வயதிலே பல சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ள அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டது.

அதில், சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் திரு.ஜாபர் சாதிக் என்பவருக்கும் திரு.அப்துல் மாலிக் அவர்களுக்கும் தொடர்பு உண்டு என்ற அவதூறு செய்தி வெளியானது.

உண்மைக்கு புறம்பாக அவதூறு செய்தி வெளியீட்ட ஆதன் தமிழ் மீடியா பிரைவேட் லிமிடெட், திரு,மாதேஷ், திரு.வராகி, திரு.சவுக்கு சங்கர் உட்பட சில யு.டியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் 18.03.2024 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்து .அப்துல் மாலிக் பின் தஸ்திகீர் அவர்களின் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது…

திரு.அப்துல் மாலிக் மலேஷியாவில் புகழ் பெற்ற தொழிலதிபர். அவருடைய நிறுவனங்களில் ஒன்றான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சினிமா தொடர்புடைய பல வர்த்தகம் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ் படங்களைவை மலேஷியாவில் விநியோகம் செய்து வருகிறார். இணை தயாரிப்பாளராக பல தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பல உதவிகளையும் தன்னலம் பார்க்காமல் செய்து வருகிறார். அவருடைய இந்த சேவைகளை பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதை கொடுத்து கெளரவித்துள்ளது.
தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொள்ளும் பல நட்சத்திர கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மலேஷியா வரும்போது சினிமா சார்ந்து பல ஆலோசனைகளையும், வழிநடத்துதலையும் திரு.அப்துல் மாலிக்கிடம் கேட்பதுண்டு.
இதன் காரணமாக திரு.அப்துல் மாலிக்கின் வளர்ச்சியை பிடிக்காத சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தீய நோக்கத்துடன் சில வீடியோக்களை வெளியீட்டுள்ளனர்.

குறிப்பாக ஆதன் மீடியாவைச் சேர்ந்த திரு.மாதேஷ், திரு.வராகி பாலாஜி மற்றும் திரு.சவுக்கு சங்கர் ஆகியோர் எந்தவித ஆதரமும், ஆவணங்களும் இல்லாமல் அப்துல் மாலிக் அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்துவதோடு அதன் மூலம் மறைமுக ஆதயாம் தேட வேண்டும் என்ற நோக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

அதை அடிப்படையாக கொண்டு மேலும் பல யு-டியூப் சேனல்கள் செவி வழி செய்தியை உண்மை என்று நம்பி எந்தவித விசாரணை, முன் அனுமதியும் இல்லமால் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

மேற்கண்ட வீடியோ பதிவுகள் அப்துல் மாலிக் அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்தியிருப்பதோடு, மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

அதை சட்டபூர்வமாக அணுகும் விதமாக பொய் வீடியோ வெளியிட்ட நிறுவனங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனுவும் அளித்துள்ளோம்.

அந்த புகாரில், அவதூறு வீடியோக்களை நீக்குவதோடு, பொதுவெளியில் திரு.அப்துல் மாலிக் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது, இந்திய மதிப்பில் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்’’ என்றனர்.

Producer Abdul Maalick filed case against Youtubers

More Articles
Follows