தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை பாடகி என பன்முகத் திறமையாளர் ஆண்ட்ரியா.
தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் இவர்.
பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.
சமீபத்தில் புஷ்பா படத்தில் ஆண்ட்ரியா பாடிய… ” ஊ சொல்றியா மாமா…” பாடல்… சூப்பர் ஹிட்டானது.
தற்போது மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் நாஞ்சில் இயக்கும் ‘கா’ என்ற படத்தில் புகைப்பட கலைஞராக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
இத்துடன் NO ENTRY படமும் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது.
இயக்குநர் அழகு கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
‘நீயா 2’ படத்தை தயாரித்த ஜம்போ சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது,
ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்கரவர்த்தி, இசையமைப்பாளராக அஜிஸ், எடிட்டராக பிரதீப் ஈ.ராகவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இதில் ஆண்ட்ரியா உடன் ரண்யா, மும்பை சாக்ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ், ஆதவ் கண்ணதாசன், டில்லி, கோகுல் ‘மானாட மயிலாட’ மானஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முக்கிய காட்சிகளுக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. சிரபுஞ்சியில் 45 நாட்கள் தங்கி முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு.
இந்த நிலையில் நாளை NO ENTRY படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.
Andrea starrer no entry album will be out tomorrow