அண்ணாத்த எங்கள் ஆண்டவன்..; அதான் ரத்த அபிஷேகம்.; அது எப்படி அருவருப்பு..? ரஜினியிடம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

அண்ணாத்த எங்கள் ஆண்டவன்..; அதான் ரத்த அபிஷேகம்.; அது எப்படி அருவருப்பு..? ரஜினியிடம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த பட பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பொது வெளியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து ரஜினி ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்தனர்.

இது தமிழகம் முழுவதும் சர்ச்சையானது.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதால் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் கொடுத்தனர்.

மேலும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் இந்த செயலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டித்தது.

இதனையனுத்து அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகி சுதாகர் அறிக்கை வெளியிட்டார்.

அதில்..

அண்ணாத்த போஸ்டர் மீது சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த அறிக்கை நேரடியாக ரஜினி தரப்பில் வெளியாகாமல் அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் வெளியானது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள அருவருப்பு என்ற வார்த்தை ரசிகர்களை டென்ஷன் ஆக்கியுள்ளது.

தீபாராதனை, பாலாபிசேகம், தேங்காய் உடைத்தல், பொங்கலிடுதல் போல ஆடு, கோழி வெட்டி கொண்டாடுவதும் கடவுள் வழிபாட்டு முறைகள் தான்.

கடவுளுக்கு நிகராக மதித்து செய்ததை.. இப்படி அருவருக்கத்தக்கது என சொல்ல தேவையுமில்லை. அப்டி சொல்வதே கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது போலதான் என ரஜினிக்கு எதிராக அவரது ரசிகர்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

Fans ask question to his idol Super Star Rajinikanth

ஆயுதபூஜை தினத்தன்று ஆர்யா படங்கள் மோதல்.; குஷ்பூ படத்தை வாங்கிய உதயநிதி

ஆயுதபூஜை தினத்தன்று ஆர்யா படங்கள் மோதல்.; குஷ்பூ படத்தை வாங்கிய உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரிமா நம்பி’, ’இருமுகன்’, ‘நோட்டா’ படங்களை இயக்கியவர் ஆனந்த் சங்கர்,.

இவர் விஷால் – ஆர்யா நடிப்பில் ’எனிமி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

இதே நாளில் ஆர்யாவின் மற்றொரு படமான ‘அரண்மனை 3’ படமும் வெளியாகிறது.

இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போது இயக்குனர் சுந்தர்.C, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, கலைஞர் தொலைக்காட்சி CFO S.கார்த்திகேயன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா, Benzz Media CEO R.மதன்குமார் ஆகியோர் இருந்தனர்.

அரண்மனை 3 அக்டோபர் 14 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை, இயக்கம் – சுந்தர்.C
தயாரிப்பு – குஷ்பூ சுந்தர் Avni Cinemax, Benzz Media
இசை C.சத்யா,
வசனம் – பத்ரி
திரைக்கதை – வெங்கட் ராகவன்
ஒளிப்பதிவு – U.K.செந்தில் குமார்
படத்தொகுப்பு – பெனி ஆலிவர்
கலை – குருராஜ்.P
நடனம் – பிருந்தா, தினேஷ்
சண்டைப்பயிற்சி – பீட்டர் ஹெயின், தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அகமது, சதீஷ் (AIM)

Arya 2 films to clash this pooja holidays

அப்பாவிடம் கற்காத இயக்கத்தை விஜய்யிடம் கற்றுக்கொண்ட ‘அனபெல் சேதுபதி’ இயக்குனர்

அப்பாவிடம் கற்காத இயக்கத்தை விஜய்யிடம் கற்றுக்கொண்ட ‘அனபெல் சேதுபதி’ இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம்,
G. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரமாண்டமான காமெடி திரைப்படம் “அனபெல் சேதுபதி”.

விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரைப்படவுலகை சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டமாக, இயக்குநர் சுந்தர்ராஜனும் அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய, தீபக் சுந்தர்ராஜன் இணைந்து பத்திரிக்கையாளர் சந்தித்தனர்.

இந்நிகழ்வில்
இயக்குநர் R சுந்தர்ராஜன் பேசியதாவது..

நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. எனது ஆரம்ப கால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிக்கையாளர்கள் இங்கு உள்ளனர்.

எனது திரைப்பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிக்கையாளர்கள் என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு படத்தின் கதை தெரியாது படம் பற்றி எதுவும் தெரியாது, அவனே வளர்ந்து வரட்டும் என்று அவன் விசயத்தில் எதிலும் தலையிடவில்லை. தயாரிப்பாளர் முழுப்படத்தையும் பார்த்து விட்டு நன்றாக வந்திருப்பதாக போன் செய்து சொன்னார் சந்தோஷமாக இருந்தது.

இங்கு வந்து பாடல்கள் டிரெய்லர் பார்த்த போது அவனிடம் முதல் பட தயக்கம் எதுவும் இல்லாமல், தெளிவாக செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் மகனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் பேசியதாவது….

தயாரிப்பாளர் தான் இந்தப்படம் இவ்வளவு பெரிதாக வரக்காரணம். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மேடம் என இப்படத்தில் என்னை நம்பி நடித்த அனைவருக்கும் நன்றி. இப்படம் ஹாரர் இல்லை. இது ஒரு ஃபேண்டஸி காமெடி படம்.

உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். உங்களது ஆதரவை தாருங்கள். அப்பாவிடம் மனித பண்புகளை தான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் இயக்கத்தை நான் இயக்குநர் AL விஜய்யிடம் தான் கற்றுக்கொண்டேன்.

தொடர்ந்து காமெடி படங்களே செய்ய ஆசை இல்லை, வித்தியாசமான களங்களில் படங்கள் செய்வேன். நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை, தொடர்ந்து படங்கள் இயக்குவதில் தான் கவனம் செலுத்தவுள்ளேன் என்றார்.

“அனபெல் சேதுபதி” திரைப்படத்தை PASSION STUDIOS சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரித்துள்ளனர். இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி பண்ணு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா சரத்குமார், வெண்ணிலா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, யோகி பாபு, மதுமிதா, ராஜ சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், ராஜ்குமார், சுனில், சுரேகா வாணி, லிங்கா, ஹர்ஷதா, இந்து ரவி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் உத்ரா , யுவனேஷ் மற்றும் அஷ்வின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்

கௌதம் ஜார்ஜ் (ஒளிப்பதிவு), பிரதீப் E ராகவ் (எடிட்டர்), கிருஷ்ணா கிஷோர் ( இசை ), வினோத் ராஜ்குமார் N (கலை), பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பாளர்), தினேஷ் (நடனம்), தினேஷ் காசி (ஸ்டண்ட்), N உதய் குமார் (ஒலி கலவை ) Sync Cinemas ( ஒலி அமைப்பு ) R மணிகண்டன் (VFX Supervisor), சந்தோஷ் (ஸ்டில்ஸ்), Tuney John 24 AM (விளம்பர வடிவமைப்பு), K சக்திவேல் (புரடக்சன் எக்ஸியூட்டிவ்), A குமார் (எக்ஸியூட்டிவ் புரடியூசர்),சுரேஷ் சந்திரா, ரேகா D’One (மக்கள் தொடர்பு).

Director Deepak Sundar Raj speech at Annabelle sethupathi press meet

அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மக்கள் அலட்சியம்.. மீண்டும் ஊரடங்கு.!?

அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மக்கள் அலட்சியம்.. மீண்டும் ஊரடங்கு.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா 3வது அலை மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. கொரோனா தொற்றின் வேகமும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்த மாதங்களில் ஒன்றன்பின் ஒன்றாக வருவதால் ஷாப்பிங் மால்களில் & தெரு கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இதனால் சமூக இடைவெளியை மக்கள் காற்றில் பறக்கவிடுகின்றனர். இதனால் கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது.

எனவே ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் பகுதிகளில் மீன் வியாபாரத்துக்கு தடை விதிப்பது குறித்து, சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறதாம்

மேலும் தி.நகர் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் மக்கள் கூடுவதால், தடுப்பு வேலிகளை அமைத்து, கட்டுப்பாடுகளை விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகர நல அலுவலர் ஜெகதீசன் கூறியதாவது..

சென்னையில் தினசரி, 22 ஆயிரம் முதல், 25 ஆயிரம் பேருக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது.

ஒரு குடும்பத்தில், ஒருவர் பாதிக்கப்பட்டால், அக்குடும்பத்தில் மூன்று பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இதனால் குடும்ப தொற்று அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறது.

எனவே, வெளியே செல்லும் போது, தங்கள் பாதுகாப்பை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஏற்ப, கட்டுப்பாடுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு சென்னை மாநகர நல அலுவலர் ஜெகதீசன் கூறினார்.

Covid restriction again in chennai city ?

கணவரின் காதலி சாய் பல்லவிக்கு மட்டும் சமந்தா வாழ்த்து..; டைவர்ஸ் கன்பார்ம்..?

கணவரின் காதலி சாய் பல்லவிக்கு மட்டும் சமந்தா வாழ்த்து..; டைவர்ஸ் கன்பார்ம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தாவின் காதல் கணவர் நாக சைதன்யா நடித்து வரும் படம் ‘லவ் ஸ்டோரி’.

இந்த லவ் ஸ்டோரி -யில் நாக சைதன்யாவின் காதலியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

அண்மையில் இப்பட ட்ரைலர் வெளியானது. இதனைப் பார்த்த சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் சாய் பல்லவியின் பெயரை மட்டும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார் சமந்தா.

இதனையடுத்து சில ரசிகர்கள் ஏன் நாக சைதன்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை?? என கேள்வி எழுப்பினர். ஆனாலும் அதற்கு சமந்தா பதிலளிக்கவில்லை.

ஆனால் சமந்தாவுக்கு நாக சைதன்யா நன்றி தெரிவித்துள்ளார்.

விரைவில் நாக சைதன்யா சமந்தா இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவிருப்பதாக பேசப்படும் நிலையில் இந்த லவ் ஸ்டோரி விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Samantha wishes to Sai Pallavi creates controversy

SPB நினைவு நாளில் ரஜினிகாந்த் படக்குழுவினர் கொடுக்கும் கௌரவம்

SPB நினைவு நாளில் ரஜினிகாந்த் படக்குழுவினர் கொடுக்கும் கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியானது.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 25 மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி. இறந்தநாளை முன்னிட்டு அவர் மறைவுக்கு முன் பாடிய கடைசி பாடலை சிங்கிள் ட்ராக் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இது ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் அறிமுகப்பாடலாக அமைந்துள்ளதாம்.

Annaatthe First single track is planned to be out on September 25th.

Rajinikanth’s peppy intro track sung by legendary singer late SPB coming on his first year death anniversary

More Articles
Follows