தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த பட பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பொது வெளியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து ரஜினி ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்தனர்.
இது தமிழகம் முழுவதும் சர்ச்சையானது.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதால் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் கொடுத்தனர்.
மேலும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் இந்த செயலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டித்தது.
இதனையனுத்து அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகி சுதாகர் அறிக்கை வெளியிட்டார்.
அதில்..
அண்ணாத்த போஸ்டர் மீது சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த அறிக்கை நேரடியாக ரஜினி தரப்பில் வெளியாகாமல் அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் வெளியானது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள அருவருப்பு என்ற வார்த்தை ரசிகர்களை டென்ஷன் ஆக்கியுள்ளது.
தீபாராதனை, பாலாபிசேகம், தேங்காய் உடைத்தல், பொங்கலிடுதல் போல ஆடு, கோழி வெட்டி கொண்டாடுவதும் கடவுள் வழிபாட்டு முறைகள் தான்.
கடவுளுக்கு நிகராக மதித்து செய்ததை.. இப்படி அருவருக்கத்தக்கது என சொல்ல தேவையுமில்லை. அப்டி சொல்வதே கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது போலதான் என ரஜினிக்கு எதிராக அவரது ரசிகர்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.
Fans ask question to his idol Super Star Rajinikanth