தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோச்சடையான் படத்தை தொடர்ந்து, செளந்தர்யா ரஜினிகாந்த் தனது இரண்டாவது படத்தை இயக்க தயாராகிவிட்டார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை பார்த்தோம்.
இதில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நாயகி சோனம் கபூரும் நடிக்கவிருக்கிறாராம்.
இவர் ஏற்கனவே ரஞ்சனா படத்தில் தனுஷுடன் நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
மேலும் இதில் மோகன்லால் மகன் பிரணவ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.