‘கோச்சடையான்’ விவகாரம்.; லதா ரஜினி தொடர்பான வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

‘கோச்சடையான்’ விவகாரம்.; லதா ரஜினி தொடர்பான வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2011ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டபோது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பின்னர் குணமடைந்து வந்தபின் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.

அப்போது அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தில் சில தினங்கள் நடித்துக் கொடுத்தார்.

இந்த படத்தை அவரது இளைய மகள் சௌந்தர்யா இயக்கி இருந்தார்.

‘கோச்சடையான்’ படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது.

இப்படத்திற்காக ஆட்புரு அண்ட் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார்.

ஆனால் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.8½ கோடியை லதா ரஜினி திருப்பி செலுத்த வேண்டும்.

எனவே இது தொடர்பாக ஆட்புரு அண்ட் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் வழக்கு தொடுத்தது.

இதனையடுத்து 2014ஆம் ஆண்டு பெங்களூர் நீதிமன்றத்தில் லதா ரஜினி அவர்கள் ‘கோச்சடையான்’ படத்தின் நிதி விஷயங்கள் குறித்து தயாரிப்பு நிறுவனம் கருத்துக்கூற தடை உத்தரவு பெற்றார்.

இதனை எதிர்த்து பெங்களூரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் புகார் ஒன்றை அளித்தது.

அந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினி பெற்ற தடை உத்தரவை நீக்கியதுடன், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு கர்நாடக ஹைகோர்ட் லதா ரஜினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர அனுமதியும் வழங்கியது.

இந்த நிலையில் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டுமென கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் லதா ரஜினி.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் லதா ரஜினிக்கு எதிராக ஏமாற்றுதல் & தவறான தகவல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ’கோச்சடையான்’ படத்திற்கு கடன்பெற்ற விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு விசாரணையில் இருந்து லதா ரஜினிகாந்துக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என கர்நாடகா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Court verdict in the case related to Latha Rajinikanth on Kochadaiyyaan issue

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘கட்டம் சொல்லுது’ பட ரிலீஸ் மீம்ஸ்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘கட்டம் சொல்லுது’ பட ரிலீஸ் மீம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதியவர்களின் புதிய முயற்சியில் வித்தியாசமான கதைக் களததில் உருவான படம் ‘கட்டம் சொல்லுது’.

இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார் எழிலன்.

இந்த படத்தில் தீபா ஷங்கர், எழிலன், சின்னதுரை, திடியன் சகுந்தலா, ராஜா அய்யப்பன் மணிவாசகம் ராணி ஜெயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமீம் அன்சாரி இசையில் சபரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் நாளை ஆகஸ்ட் 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாவுள்ளது.

இந்த நிலையில் ‘கட்டம் சொல்லுது’ படம் தொடர்பாக மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘Kattam Solluthu’ movie release memes going viral on social media

முதன்முறையாக ரஜினிகாந்துடன் டூயட் பாட ரெடியாகும் தமன்னா

முதன்முறையாக ரஜினிகாந்துடன் டூயட் பாட ரெடியாகும் தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார் என பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளப் போகிறாராம்.

இந்த நிலையில் இதில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இது உறுதியானால் ரஜினியுடன் தமன்னா இணைவது முதன்முறையாகும்.

விஜய் அஜித் விக்ரம் சூர்யா தனுஷ் விஷால் ஆகிய முன்னணி நடிகர்களுடன் தமன்னா நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Tamannah to play female lead in Jailer ?

பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி – கமல் – அமிதாப்.; எப்போ.? எங்கே.?

பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி – கமல் – அமிதாப்.; எப்போ.? எங்கே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’.

தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பான் இந்தியா படங்களுக்கு சவால் விடும் வகையில் தமிழ் சினிமாவில் மிகப்பிரமாண்டமாக பான் இந்தியா படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல்பாகம் செப்டம்பர் 30-ம் தேதி ரிலீசாகிறது.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஜெயராம் விக்ரம் பிரபு பார்த்திபன் சரத்குமார் ஆதேஷ் பாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மேலும் பொன்னி நதி என்ற சிங்கிள் ட்ராக் பாடலும் வெளியானது இதற்கும் ஒரு விழா நடத்தியது படக்குழு.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செனரனையில் பிரம்மாண்டமாக செப்டம்பர் 6-ல் நடைபெறுகிறதாம்.

இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொள்வார்கள் என தெரிய வந்துள்ளது.

Rajini – Kamal – Amitabh at Ponniyin Selvan’s Festival; When? Where?

இரட்டை வேடங்களில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும்.; நாயகியாக ரிது வர்மா!

இரட்டை வேடங்களில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும்.; நாயகியாக ரிது வர்மா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், ’மார்க் ஆண்டனி’.

எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இதில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘ பட நாயகி ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாடலும் ஆக்‌ஷனும் சேர்ந்த காட்சியை படக்குழுவினர் படமாக்கி வந்தனர்.

நேற்று நடந்த படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சியில் பங்கேற்ற போது நடிகர் விஷாலுக்கு அவரது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இப்போது ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘லத்தி’ படத்தின் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பின்போதும் நடிகர் விஷால் சில முறை காயமடைந்திருந்தார்.

Vishal and SJ Suriya in dual roles. Ritu Varma as the heroine!

விருமனில் மதுர வீரன் அழகுல’ பாடலை பாடிய ஷங்கர் மகள்.; பாடகி ராஜலட்சுமி தந்த விளக்கம் இதோ…

விருமனில் மதுர வீரன் அழகுல’ பாடலை பாடிய ஷங்கர் மகள்.; பாடகி ராஜலட்சுமி தந்த விளக்கம் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘விருமன்’.

இதில் அதிதி சங்கர், சூரி, மனோஜ் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிக்க யுவன் இணையமைத்துள்ளார்.

இப்படம் நாளை மறுநாள் ஆகஸ்ட் 12-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘மதுர வீரன் அழகுல’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் – அதிதி ஷங்கர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

இந்த பாடலை முதலில் பாடகி ராஜலட்சுமி பாடினார். ஆனால், அதிதி குரலில் தற்போது இப்பாடல் வெளியானதால் ராஜலட்சுமியை நீக்கிவிட்டு ஷங்கர் மகள் அதிதியைப் பாட வைத்துவிட்டார்கள் என சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், ராஜலட்சுமி அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

“இதில் எந்த வருத்தமும் கிடையாது. அதிதி நன்றாகவே பாடியுள்ளார். எனது குரல் செட் ஆகாமல் இருந்திருக்கலாம். அதற்காக கூட அதிதியை மாற்றி பாட வைத்திருக்கலாம்.

விருமன் இசை விழாவில் கூட அதிதி பாடியது நன்றாகவே இருந்தது.” என ராஜலட்சுமி விளக்கம் அளித்து பேசியுள்ளார்.

விருமன்

Singer Rajalakshmi opens up about Viruman song controversy

More Articles
Follows