தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டாரை இயக்க பல இயக்குனர்கள் காத்திருக்கும்போது தன் முதல் படமான கோச்சடையான் படத்தில் ரஜினியை இயக்கியவர் சௌந்தர்யா.
இதனையடுத்து இவர் தனது அக்கா கணவர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி2 (விஐபி2) படத்தை இயக்கினார்.
இப்படம் அண்மையில் வெளியாகி வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் சௌந்தர்யாவின் 3வது படம் என்ன? அதில் நடிக்கவுள்ள ஹீரோ யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறும்போது…
என் அப்பாவை இயக்குவேன் என ஒரு போதும் நினைக்கவில்லை. அது நடந்தது என் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அடைந்துவிட்டதை போன்ற உணர்வு.
அடுத்து தனுஷ் என்ற மிகப்பெரிய நடிகரையும் இயக்கிவிட்டேன்.
3வது படத்தை உடனே இயக்கிவிடு என அப்பா கூறியுள்ளார்.
அதற்கான கதையை அமைக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.