தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2011 ஆம் ஆண்டில் திடீர் உடல் நலக்குறைவால் ரஜினிகாந்த் சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் உயர்தர சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அப்போது அவர் நடிக்க இருந்த ‘ராணா’ என்ற திரைப்படம் நிறுத்தப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்னர் பூரண குணமடைந்து 2011 ஜூலை 13ஆம் தேதி சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
அதன் பின்னர் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது இளைய மகள் சௌந்தர்யா ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
கே எஸ் ரவிக்குமார் திரைக்கதை அமைத்து வசனங்கள் எழுதியிருந்தார். இந்த படம் அனிமேஷன் என்ற போதிலும் திரைக்கதைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதுவே முழு படமாக அமைந்திருந்தால் பெரும் வரவேற்பு பெற்று இருக்கும் என ரசிகர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கடந்த 2014-ல் வெளியானது. அப்போதே இந்த படத்தில் சரியான சம்பளம் வழங்கப்படவில்லை என பிரச்சனை எழுந்தது.
இப்படத் தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆட் பீரோ அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடமிருந்து, இப்படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான முரளி மனோகர் கடன் பெற்றதாகவும், இதற்காக லதா ரஜினி உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் முரளி மனோகர், ஆட் பீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிர்சந்த் நஹாருக்கு கடந்த 2014-ல் வழங்கிய ரூ.5 கோடிக்கான காசோலை பணமின்றி திரும்பியது.
இதனையடுத்து முரளி மனோகருக்கு எதிராக அபிர்சந்த் நஹார் சென்னை அல்லிக்குளத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதி்த்து கடந்த 2021 டிச.4 அன்று தீர்ப்பளித்தது.
மேலும் அபிர்சந்த் நஹாருக்கு வழங்க வேண்டிய ரூ. 5 கோடிக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டி வீதம் ரூ. 7.70 கோடியை வழங்க வேண்டுமெனவும் முரளி மனோகருக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் பெங்களூரு உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து விளம்பர நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Rajinis Kochaidaiyaan Advertisement case issue Court order