கோச்சடையான் நஷ்ட ஈடு விவகாரம்.; லதா ரஜினிக்கு கைது வாரண்ட்..?

கோச்சடையான் நஷ்ட ஈடு விவகாரம்.; லதா ரஜினிக்கு கைது வாரண்ட்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

latha rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா கோச்சடையான் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

கடந்த 2014ல் வெளியான இப்படம் ரஜினியின் சினிமா கேரியரில் பெரிய தோல்வி படமாக இடம் பிடித்தது.

இப்படத்தின் கர்நாடக மாநில விளம்பரம் மற்றும் வியாபாரத்தை ஒரு தனியார் நிறுவனம் கவனித்துக் கொண்டது.

படம் வெற்றி பெறாத காரணத்தால் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கூற, லதா ரஜினி அவர்கள் நஷ்ட ஈடு மறுத்துள்ளார்.

இந்த பிரச்சினையில் லதா ரஜினி காட்டிய கணக்கும், அவரது கடிதமும் போலியானது என்று அந்த நிறுவனம், பெங்களூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

மேலும் கோர்ட்டில் ஆஜராகவும் நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் லதா ரஜினிக்கு உத்தரவிட்டது.

தற்போது 3வது முறையாக மே 20ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

ஒருவேறை இதற்கும் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

‘விஸ்வாசம்’ சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா

‘விஸ்வாசம்’ சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)அஜித் நடிப்பில் வெளியான வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என சமீபத்திய படங்களை இயக்கியவர் சிவா.

இதில் விவேகம் தவிர அனைத்து படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்றது.

விரைவில் சூர்யாவின் 39வது படத்தை இயக்கவுள்ளார் சிவா.

இசையமைப்பாளர் டி.இமான், எடிட்டர் ரூபன் ஆகியோர் இந்தபடத்திலும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்த நிலையில், இதில் நயன்தாரா நாயகியாக்க முடிவு செய்துள்ளாராம் சிவா.

தர்பார், விஜய் 63வது ஆகிய படங்களை முடித்துவிட்டு, சூர்யா படத்தில் நடிப்பார் நயன்தாரா என கூறப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து; காந்தி கொள்ளுபேரன் கமல் பேச்சு

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து; காந்தி கொள்ளுபேரன் கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Independent India's First Terrorist Godse Says Kamalhaasanதமிழகத்தில் 4 தொகுதிகளில் வருகிற மே 19ஆம் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

எனவே தன் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் கமல்ஹாசன்.

இதில் அரவக்குறிச்சி தொகுதி பிரச்சாரத்தில் கமல் பேசும்போது…

இந்த தொகுதியில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளதால் நான் அவர்களுக்கு ஆதரவாக பேசவில்லை.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவன் தான் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். என்று பேசினார் கமல்.

தற்போது கமலின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

Independent India’s First Terrorist Godse Says Kamalhaasan

சிம்புவின் மணப்பெண் ரகசியத்தை லீக்காக்கிய கூல் சுரேஷ்

சிம்புவின் மணப்பெண் ரகசியத்தை லீக்காக்கிய கூல் சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் உஷா தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இவர்களின் சிம்புவின் தங்கை இலக்கியா மற்றும் தம்பி குறளரசன் ஆகியோரும் திருமணம் நடந்துவிட்டது.

ஆனால் மூத்தவரான சிம்புக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை

தற்போது சிம்புக்கு வரன் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்புவின் நெருங்கிய நண்பரும் நடிகருமான கூல் சுரேஷ் அவர்கள் சிம்புவின் திருமணம் குறித்து அந்த நிமிடம் பட விழாவில் பேசியுள்ளார்.

“சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. மணப்பெண் யார்? எப்போது கல்யாணம்? என்று எனக்குத் தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம்” என பேசியுள்ளார்.

டி.ராஜேந்தர் நடத்தி வரும் கட்சியில் முக்கிய பொறுப்பில் கூல் சுரேஷ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் பெர்ஃபெக்ட் இல்ல.; என்னை ஸ்டாராக்கி வீட்டீர்கள் .. தனுஷ் அறிக்கை

நான் பெர்ஃபெக்ட் இல்ல.; என்னை ஸ்டாராக்கி வீட்டீர்கள் .. தனுஷ் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Dhanushதனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படம் கடந்த 2002ம் ஆண்டு மே 10ம் தேதி வெளியானது.

இப்படம் வெளியாகி 17 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் தளுஷ்.

அதில்… ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகி விட்டது. என்னால் நம்பவே முடியவில்லை.

எதுவும் தெரியாத சின்ன பையனாக இருந்த எனக்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறீர்கள்.

நடிகனாகக்கூட முடியாது என்று நினைத்த என்னை ஒரு ஸ்டாராக மாற்றி இருக்கிறீர்கள், எல்லாம் நேற்று நடந்தது போலவே உள்ளது.

என்னுடைய வெற்றி தோல்வி எல்லாவற்றிலும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். நான் சரியான மனிதன் கிடையாது ஆனால் உங்களுடைய அளவுகடந்த அன்பு, என்னை பண்படுத்தியுள்ளது.

இந்த அன்பு எப்போதும் வேண்டும், அன்பை பரவச் செய்யுங்கள் அன்பு மட்டும் உலகத்தை உருவாக்கும்” என தனுஷ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆர்கே சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கிக் கலக்கும் தமிழ் ,மலையாளப் படம் ‘ கொச்சின் ஷாதி அட் சென்னை 03’

ஆர்கே சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கிக் கலக்கும் தமிழ் ,மலையாளப் படம் ‘ கொச்சின் ஷாதி அட் சென்னை 03’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectவில்லனாக அறிமுகமாகி கதைநாயகனாக வளர்ந்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கி இரு மொழிப் படமொன்றில் நடித்திருக்கிறார்.. இது தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் .

அமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பேசுகிற இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார்.

படத்தின் கதை கேரளாவில் உள்ள கொச்சினிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது .
இப்படத்தின் கதையில் வரும் பாத்திரங்கள் 70% தமிழும் 30% மலையாளமும் பேசுகின்றன.
ஒரு பெரிய இடத்துப் பிள்ளையின் காதல் லீலைகளின் விளைவு அடுக்கடுக்கான காதல்கள், அவனிடம் காதலில் விழுந்து கருவுறுகிறாள் ஒரு ஏழை மகள் ஷாதி என்கிற ஷாதிகா.

தன் தாயிடம் சென்னைக்கு வேலைக்கு இண்டர்வியூவுக்குச் செல்வதாகக் கூறிக் கருவைக் கலைக்கச் செல்கிறாள். போகிற வழியிலும், சென்னை சென்ற பின்னும் அவளுக்கு என்ன நேர்கிறது? அவள் எவற்றையெல்லாம் சந்திக்கிறாள் என்பதே மீதிக் கதை.சின்ன தடுமாற்றத்தில் விழுந்த அவளது வாழ்க்கையின் திசை மாற்றத்தைச் சொல்வதே ‘.கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ படம்.

இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் ,வினோத் கிருஷன் ,சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா ,அக்ஷிதா, இரத்தினவேல், ஷஷாத் அப்துல்லா திப், அபு பக்கர், நடித்துள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு :ஐயப்பன் என், இசை: சன்னி விஸ்வநாத் ,கதை: ரிஜேஷ் பாஸ்கர்.
ஆர்யா ஆதி இண்டர்நேஷ்னல் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட்
தயாரித்துள்ளார்.
படப் பிடிபபு கேரளாவின் பாலக்காடு, கொச்சின், குருவாயூர், நாகர்கோயில் , மார்த்தாண்டம், கோவை, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

பொள்ளாச்சி சம்பவங்கள் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந் நேரத்தில் பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி எச்சரிக்கிறது படம்.

பெண்களைப் பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு தரும் படியும், பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும்படியும் காதல் என்கிற வலை பெண்களைச் சுற்றிப் பின்னம்படும் விதத்தையும் கூறி அறிவுறுத்தி காட் அலர்ட் தரும்படியும் இப்படம் இருக்கும் என்று நம்புகிறார் இயக்குநர் .

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.

More Articles
Follows