தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக 40 வருடங்களாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் என்னதான் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தாலும் தன் மகள்களை நடிப்பு துறையில் இறக்கி விடவில்லை.
மாறாக ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரையும் இயக்குனர்களாக இயங்க அனுமதித்துள்ளார்.
மூத்த மகள் ஐஸ்வர்யா ‘3’ & ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார்.
ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா அவர்கள் ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ மற்றும் தனுஷ் நடித்த ‘விஐபி 2’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இதில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க நோவா ஆபிரஹாம் இயக்குகிறார்.
இத்தொடருக்கு ‘கேங்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர். இதன் படப்பிடிப்புடன் பூஜையுடன் தொடங்கியது.
Soundarya Rajini and Ashok Selvan teamsup for GANGS