தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் ரஜினி நடித்த கோச்சடையான் மற்றும் தனுஷ் நடித்த விஐபி 2 படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தன் முதல் கணவர் அஸ்வினை விவகாரத்து செய்த நிலையில் நடிகர் விசாகன் என்பவரை 2தாக திருமணம் செய்து கொண்டார்.
சௌந்தர்யாவுக்கு ஏற்கனவே வேத் என்ற ஒரு மகன் இருக்கிறார்
இந்த நிலையில் சௌந்தர்யா தாய்மை அடைந்து இருந்தார். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சௌந்தர்யாவுக்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
எனவே ரஜினி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் சௌந்தர்யா, விசாகன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தன் 2வது குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயரிட்டுள்ளார் சௌந்தர்யா.
ஏற்கனவே ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
தற்போது சௌந்தர்யாவுக்கும் வேத் மற்றும் வீர் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக ரஜினிகாந்துக்கு பேரன்கள் மட்டுமே உள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Soundharya Rajini again blessed with boy baby