தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்டோரி..
அப்பா : ஆடுகளம் நரேன்
மகள் : கதாநாயகி பிரத்யங்கிரா ரோஸ்
தாய் இல்லாமல் வளர்க்கப்பட்டவள் தந்தை கண்டிப்பில் வளர்கிறார் பூமணி..
ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைக்க வேண்டும்.. வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் மகள்.. பழைய பஞ்சாங்கத்தை கட்டிக் கொண்டு… பெண்கள் சமையலறையில் தான் இருக்க வேண்டும் என தத்துவம் பேசும் தந்தை. இவர்களின் மோதல் தான் இந்த படத்தின் கதைக்கரு.
இந்த சூழ்நிலையில் நாயகி மீது கொலை பழி.. இதன் பின்னணியில் நடந்தது என்ன?
தந்தையின் எதிர்ப்பை மீறி சாதித்தாரா மகள்.? மகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டாரா தந்தை? என்பதுதான் படத்தின் மீதி கதை.
கேரக்டர்ஸ்…
நந்தகுமார், பிரத்யங்கிரா ரோஸ், செளந்தர்யா வரதா, ஆடுகளம் நரேன், சீனி பாட்டி, ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார், கிரேன் மனோகர், நாகராஜ் சோழன், சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தனபாலன்
கதாநாயகி பிரத்யங்கிரா ரோஸ்.. தன் இலட்சிய தடைகளை உடைத்தெறியும் சிங்க பெண்ணாக நடித்திருக்கிறார். எதையும் துணிந்து எதிர்க்கும் பக்குவப்பட்ட பெண்ணாகவும் அதே சமயம் கொலை வழி தன் மீது விழுந்த பின்னர் உடைந்து நொறுங்கும் காட்சிகளிலும் கவனம் பெறுகிறார்..
நாயகனாக நந்தகுமார். நாயகிக்கும் கதை ஓட்டத்திற்கும் உதவியாக இருந்து நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நாயகியின் தந்தையாக ‘ஆடுகளம்’ நரேன். பழைய பஞ்சாங்க அடக்குமுறை தந்தையாக நரேன் ரசிக்க வைக்கிறார். தந்தை கேரக்டருக்கு வலுவான பலம் சேர்த்திருக்கிறார்.
இவர்களுடன் ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார், கிரேன் மனோகர், நாகராஜ சோழன், சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தன்பாலன் உள்ளிட்டோரும் உண்டு.. ஆங்காங்கே கொஞ்சம் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றனர்.
டெக்னீசியன்ஸ்…
இசை : ராஜயோகி
ஒளிப்பதிவு : வேல் முருகன்
இயக்கம் : வேல்விஸ்வா
தயாரிப்பு : எஸ்.பாஸ்கர்
இணை தயாரிப்பு : ஹேமா மூவிஸ் இண்டர்நேஷ்னல் என்.என். மணிபாலன்
ராஜயோகி இசையில் பாடல்கள் தாளம் போடவும் வைக்கின்றன.. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
வேல் முருகனின் ஒளிப்பதிவில் வறட்சி கிராமம் எதார்த்தமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட லொகேஷன்கள் இல்லாமல் வாழ்வியலோடு கலந்த லொக்கேஷனில் படம் பிடித்திருப்பது சிறப்பு.
என்னதான் 2024 ஆண்டுகளை நாம் எட்டி விட்டாலும் இன்னும் சில பெண்கள் அடக்குமுறைக்கு பயந்து வீட்டில் வாழ்கிறார்கள்.. பெரும்பாலும் பெண்கள் புகுந்த வீட்டில்தான் சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆனால் பிறந்த வீட்டிலேயே ஒரு பெண் அடிமைப்பட்டு கிடக்கிறாள் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். அதை எல்லாம் மீறி அவளால் எப்படி சாதிக்க முடிந்தது என்பதையும் இயக்குன சொல்லி இருப்பது பல பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
திருமணத்திற்கு முன்பு தந்தைக்கும் திருமணத்திற்கு பின்பும் கணவனுக்கும் கட்டுப்பட்டு வாழும் பெண்கள் மத்தியில் தன்னை நம்பினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.. இந்த உலகத்தில் வாழ முடியும் என சொல்லி இருக்கிறார் இயக்குனர் வேல் விஷ்வா.
எனவே இந்த ‘எட்டும் வரை எட்டு’.. எட்டு திசைக்கும் எட்டட்டும்.. வாழ்த்துக்கள்
Ettum Varai Ettu movie review and rating in tamil