V3 சினிமா விமர்சனம் 3.5/5.; கற்பழிப்புக்கு ரெட் சிக்னல்

V3 சினிமா விமர்சனம் 3.5/5.; கற்பழிப்புக்கு ரெட் சிக்னல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு நடு ராத்திரியில் எப்போது பெண் சுதந்திரமாக தனியாக நடந்து செல்கிறாரோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் என்று மகாத்மா காந்தி சொன்னார்.

இதில் தனியாக நடுராத்திரியில் செல்லும் பெண் கற்பழிக்கப்படுகிறார்.. கற்பழிப்புக்கு தீர்வு தண்டனை மட்டுமல்ல என்று மாற்று வழியை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

கதைக்களம்…

ஆடுகளம் நரேன் பேப்பர் ஏஜெண்ட்.

இவர் தனது இரண்டு மகள்களோடு (பாவனா மற்றும் எஸ்தேர்) வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் பாவனாவை ஐந்து வாலிபர்கள் கற்பழிக்கின்றனர்.

இதனால் போலீசுக்கும் ஆளுங்கட்சிக்கும் கடும் கண்டனங்கள் வருகிறது.. மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

இதனால் அவசர அவசரமாக வழக்கை முடிக்க என்கவுண்டர் செய்கிறது போலீஸ்.

இதனால் பாதிப்படைந்த 5 வாலிபர்களின் பெற்றோர் மனித உரிமை கழகத்தை நாடுகின்றனர்.

இந்த வழக்கை விசாரிக்க மனித உரிமை கழகத்தின் உறுப்பினரான (ஐஏஎஸ்) வரலக்‌ஷ்மி நியமிக்கப்படுகிறார்.

அந்த ஐந்து வாலிபர்கள் தான் கற்பழித்தார்களா? உண்மை என்ன? போலீஸ் என்ன செய்தது? ஆளுங்கட்சி என்ன செய்தது? வரலட்சுமி என்ன செய்தார்? பாதிக்கப்பட்ட குடும்பம் என்ன செய்தது? பாவனா என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகியாக நடித்துள்ளார் வரலட்சுமி.. ஒரு பொறுப்பான அதிகாரியாக அவர் நடந்து கொள்ளும் விதம் சிறப்பு.

பாதிக்கப்பட்ட பெண்ணாக பாவனா.. இதுபோன்ற காட்சியில் நடிக்க நிச்சயமாக ஒரு நடிகைக்கு துணிச்சல் வேண்டும். அதை வெகு சிறப்பாக செய்து இருக்கிறார்.

நிஜமாகவே கற்பழிக்கப்படும் பெண்ணின் வேதனைகளை உணர்வு பூர்வமாக காட்டி இருக்கிறார்.

போலீசாக பொன்முடி.. ஆளுங்கட்சிக்கும் மக்களுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் செம. மிரட்டலான நடிப்பையும் கொடுத்துள்ளார்.

பாவனாவின் தந்தையாக ஆடுகளம் நரேன். மனைவியை இழந்த ஒரு கணவரின் வேதனையையும் அம்மா இல்லாத பிள்ளைகளை வளர்க்கும் தந்தை பாசத்தையும் அழகாக காட்டியிருக்கிறார்.

அதுபோல தங்கையாக நடித்துள்ள எஸ்தரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

படத்தின் பின்னணி இசையிலும் ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இந்த படம் ஆரம்பிக்கும் போதே டைட்டில் கார்டில் எண்ணற்ற கற்பழிப்பு காட்சிகளும் அது தொடர்பான பத்திரிக்கை செய்திகளும் காட்டப்படுகின்றன.. அப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவாகிறது.

பொதுவாக இது போன்ற கற்பழிப்பு கொலை கொள்ளை பற்றிய படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள் பார்வைக்கு விட்டு விடுவார்கள்..

ஆனால் இதில் கற்பழிப்புக்கு ஒரு நிரந்தர தீர்வை சொல்லி இருக்கிறார் இயக்குனர். பள்ளிகளில் கட்டாயமாக செக்ஸ் பாடக்கல்வி தேவை.

மேலும் கற்பழிப்பை குறைக்க விபச்சாரத்தை சட்டமயமாக்கனும் என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அமுதவாணன்.

ஆளுங்கட்சியும் போலீசும் தங்கள் அதிகாரத்தை காட்டுவதற்கு இது போன்ற வழக்குகளை பயன்படுத்திக் கொள்வதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் இந்த தீர்வை அவர் சொல்லும்போது மேலோட்டமாக சொல்லி இருக்கிறார். அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உணர்வுப்பூர்வமாக அழுத்தமாக காட்சிப்படுத்தி இருக்கலாம்.

ஆக வி3.. ஐஏஎஸ் வரலக்‌ஷ்மி நியமிக்கப்படுகிறார்.

Varalaxmi Sarathkumar ( Sivagami)
Paavana ( Vindhya )
Esther Anil ( Viji )
Adukaalam Naren ( Velayutham )
Ponmudi ( Viswanathan)

Visarnai Kathai Asiriyar Chandra Kumar ( logo)
Jai Kumar
Sheeba

Crew

Direction – Amudhavanan
Music – Allen Sebastian
DOP – Siva Prabhu
Editor – Nagooran
Sound design – Udaya Kumar
Colorist – Sreeram Balakrishnan
Stunt – Mirattal Selva
Costumes – Tamil selvan
Make up – Hema – Meera
VFX – Quebec fx – Moses
SFX – Sathish Kumar
Production Manager – Santhosh Kumar | Muthuraman
PRO – Sathish Kumar Siva – Aim
Publicity Designer – NextGen
Executive producer – Pukazhenthi.

Production House : Team A Ventures

V3 movie review and rating in tamil

ராங்கி விமர்சனம் – 3.25/5..; தீவிர(வாதி) காதல்

ராங்கி விமர்சனம் – 3.25/5..; தீவிர(வாதி) காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் கதையில், எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவான ‘ராங்கி’.

சமூக வலைத்தளங்களால் த்ரிஷாவின் அண்ணன் மகளுக்கு (நேரிடை தொடர்பு இல்லை) தீவிரவாத கும்பலுடன் தொடர்பு ஏற்படுகிறது.

அதை பத்திரிக்கையாளர் திரிஷா எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

த்ரிஷா இதில் ஆக்சன் நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். முழுக்க முழுக்க பேண்ட் சட்டை போட்டு சிங்க பெண்ணாக களம் இறங்கி இருக்கிறார்.

18 வயது நிரம்பாத இளம் பெண்ணுடன் சாட்டிங் மூலம் திருமணம் ஆனவர்களும் திருமணம் ஆகாதவர்களும் காமத்தை அள்ளி வீசுகிறார்கள். அதனை கண்டுபிடித்த த்ரிஷா ஒரு ரூம் போட்டு அனைவரையும் வரவழைப்பது வித்தியாசமான சிந்தனை.

மேலும் அவர் சொல்லும் ஆலோசனைகள் ஒரு பத்திரிகையாளரின் முதிர்ச்சியை காட்டுகிறது.

ஆனால் அதே திரிஷா (வேறு பெயரில்) தீவிரவாதியுடன் சாட்டிங் செய்வது புரியாத புதிர். இது இன்வேஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்று சொல்லப்பட்டாலும் அது அழுத்தமாக பதிவாகவில்லை.

த்ரிஷாவின் அண்ணன் மகளாக வரும் அனஸ்வரா ராஜனை வைத்தே கதை.. அவரும் ஒரு பருவப் பெண்ணின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளார்.

ஆலிம் என்ற கேரக்டரில் நடித்துள்ள சிறுவன் ஒரு பக்கம் காதல்.. ஒரு பக்கம் தன் நாட்டிற்காக போராடும் போராள.. என சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

அதுபோல த்ரிஷாவின் அண்ணியாக வருபவரும் கவனம் ஈர்க்கிறார்.

டெக்னீசியன்கள்…

சி.சத்யாவின் இசையில் பாடல்கள் ஓகே.. பின்னணி இசை சிறப்பு சேர்க்கிறது.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் அழகான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேலின் கேமரா சண்டைக் காட்சிகளை சிறப்பாகப் கையாண்டுள்ளது..

இரண்டு மணிநேர படம் என்றாலும் சின்ன கட்டிங் போட்டு இருக்கலாம்.. காரணம் சேட்டிங் செய்வது.. சாட்டிங் ரிப்ளை எதிர்பார்ப்பது என நீண்ட நேரமாக செல்வது போரடிக்கிறது.. சுபாரக் – படத்தொகுப்பு.

ஏ ஆர் முருகதாஸ் கதை எழுத எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி இருக்கிறார்.

முதல் பாதியில்…இளம் பெண்கள் பேஸ்புக் சாட்டிங்.. முகம் தெரியாத நண்பர்களுடன் ஆபாச சாட்டிங் என காட்சிகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்.

இரண்டாம் பாதியில்… எண்ணெய் வளங்களை திருடும் அமெரிக்க நாடுகளை கண்டிப்பதோடு இந்தியாவில் நாளை எது வேண்டுமானாலும் திருடு போகலாம் என்பதையும் எச்சரித்து இருக்கிறார் இயக்குனர் சரவணன்.

சர்வதேச தீவிரவாதி திடீரென இந்தியா வந்து செல்வது எப்படி? ஆகிய லாஜிக் மீறல்கள் உள்ளது.

ஒரு போலி ஃபேஸ்புக் கணக்கினால் உருவாகும் சின்ன சின்ன பிரச்சினை எப்படி உலகளவில் தீவிரவாதம் வரை செல்கிறது என்பதை சொன்ன விதத்தில் முருகதாஸ் பாராட்டு பெறுகிறார்.

ஆக… ராங்கி.. தீவிர (வாதி) காதல்

Raangi movie review and rating in Tamil

காலேஜ் ரோடு விமர்சனம் 4/5.; கண்ணீரில் கல்வி கடன்

காலேஜ் ரோடு விமர்சனம் 4/5.; கண்ணீரில் கல்வி கடன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

உயர்கல்வி படிக்க ஆசை இருந்தும் திறமை இருந்தும் மதிப்பெண் இருந்தும் கல்விக் கடன் மறுக்கப்படும் ஏழை மாணவர்களின் அவல நிலையை சொல்லும் படம் காலேஜ் ரோடு.

கதைக்களம்…

இந்தியாவில் டாப் 10 யூனிவர்சிட்டியில் ஒன்றான ஒரு கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். இவர் வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் (CYBER SECURITY) ப்ராஜெக்ட் ஒன்றின் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்தக் கல்லூரி இருக்கும் அதே சாலையில் ஒரு பெரிய வங்கியில் ஒரு கும்பல் கொள்ளை அடிக்கிறது. அப்போது அதனைப் பார்த்த லிங்கேஷை அடிக்கடி விசாரணைக்கு அழைக்கிறார் கமிஷனர்.

ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து வங்கிகளும் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதற்கு போலீசுக்கு நாயகன் லிங்கேஷ் எப்படி உதவினார்?

அவர் ப்ராஜக்ட் ஆராய்ச்சியில் சாதித்தாரா.? கொள்ளையர்களை கண்டுபிடித்தார்? கொள்ளையர்களின் நோக்கம் என்ன.? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகனாக லிங்கேஷ்.. கல்லூரியில் கொஞ்சமே கலகலப்பாக இருக்கிறார்.. அப்போதே இவரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறுகிறது. அதற்கு ஏற்ற போல் பிளாஷ்பேக் காட்சிகளில் லிங்கேஷ்.. கிங்-கேஷாக தெரிகிறார்.

நாயகி மோனிகா பாத்திரம் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார். பொறுப்பான தோழியாகவும் தன் கேரக்டரை மெருகேற்றி இருக்கிறார்.

மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர்.. ஆகியோர் நம்மை அதிகமாகவே கவர்கின்றனர்.. ஆனந்த்நாகு க்ளைமாக்ஸ் காட்சியில் கைத்தட்டல் பெறுகிறார்.

லிங்கேஷின் கிராமத்து நண்பர்களாக வரும் விக்கி உள்ளிட்ட நால்வரும் நல்ல தேர்வு. உயர்கல்விப்படிக்கு ஏங்குவதும்.. குடும்ப பாரத்தை சுமப்பதும்.. நட்புக்காக துணை நிற்பதும் என சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னீசியன்கள்…

இசை – ஆப்ரோ
ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.
எடிட்டர்- அசோக்.

இசை பெரிதாக கவரவில்லை.. இது போன்ற காலேஜ் படங்களுக்கு அருமையான காதல் பாடலையும் நட்பு பாடலையும் கொடுத்திருக்கலாம்.. ஆனால் அதனை தவற விட்டுள்ளார் இசையமைப்பாளர் ஆப்ரோ.

ஒளிப்பதிவு கண்களுக்கு கலர்ஃபுல் விருந்து.. முக்கியமாக படத்தின் எடிட்டிங் சிறப்பாக உள்ளது.

இயக்கம் பற்றிய அலசல்..

ஒரு பக்கம் வங்கி கொள்ளை.. ஒரு பக்கம் கல்வி கடன் பிரச்சனை என இரண்டு கதைகள் பயணிக்கும் போது இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல..அது நம் உரிமை என்பதை காலேஜ் கலாட்டா உடன் பேசியிருக்கிறது காலேஜ் ரோடு

கல்வி கடன் கொடுக்கச் சொல்லி அரசு அறிவித்தாலும் வங்கி அதிகாரிகள் கமிஷன் கேட்பதும் கொள்ளை அடிப்பதும் என அப்பட்டமான காட்சிகளை வைத்துள்ளனர்.

மேலும் படிப்பை முடித்த பின்தான் வட்டி + தொகையை கேட்கப்பார்கள்.. ஆனால் சில வங்கிகள் அரசுக்கு தெரியாமல் மாணவர்களை துன்புறுத்தும் காட்சிகள் நம் கண்களை கலங்க வைக்கிறது.. இது நம் வாழ்விலும் நிஜத்திலும் நடப்பது என்பது மறுக்க முடியாத உண்மை..

லட்சம் லட்சமாக பணமிருந்தும் உயர் கல்வி படிக்க நினைக்கும் பணக்கார மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுக்கும் வங்கி அதிகாரிகள் ஏழை மாணவர்களை வஞ்சிப்பதையும் காட்டி இருக்கிறார் இயக்குனர்.

வசனங்களும் நம்மை கவர்கின்றன.. கல்வி கடன் மறுக்கப்பட்ட ஒரு ஏழை மாணவன் பேசும் வசனங்கள் செம.

அதுபோல கல்லூரி கலாட்டா வசனங்களும் ரசிக்க வைக்கிறது… MOONக்கு போன ஆம்ஸ்ட்ராங்கே 3 போட்டோ தான் எடுத்திருப்பார்… முட்டை போண்டா சாப்பிட போற இவளுக 300 போட்டோ எடுக்குறாங்க.. என்ற கிண்டலும் ரசிக்க வைக்கிறது..

ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி ஆகிவிடக்கூடாது என்பதை முதல் படத்திலே பதிவு செய்த இயக்குநர் ஜெய் அமர் சிங் பாராட்டுக்குரியவர்.

நடிகர்கள்… லிங்கேஷ், மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசை – ஆப்ரோ
ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.
எடிட்டர்- அசோக்

MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

ஆக… இந்த காலேஜ் ரோடு.. கண்ணீரில் கல்வி கடன்

College road movie review and rating in tamil

அருவா சண்ட விமர்சனம் 2.75/5..; சாம்பலானது சாதீ

அருவா சண்ட விமர்சனம் 2.75/5..; சாம்பலானது சாதீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

உயர் ஜாதி ஹீரோயின்.. கீழ் ஜாதி ஹீரோ ஆகியோருக்கு இடையே நடைபெறும் வழக்கமான காதல் மோதல் தான் இந்த படத்தின் கதை.

ஆனால் படத்தின் க்ளைமாக்ஸ் வித்தியாசம்..

கதைக்களம்…

கபடி ஆட்டத்தில் ஆர்வம் மிகுந்தவர் சரண்யா பொன்வண்ணன்.. ஒரு கபடி ஆட்டத்தில் தன் கணவரை பறிகொடுக்கிறார்.. ஆனாலும் தன் கணவர் சாதிக்காததை தன் மகன் ராஜா சாதிக்க வேண்டும் என நினைக்கிறார்.

அதன்படி தன் மகனையும் பயிற்சி கொடுத்து தயார் செய்து வருகிறார். இவருக்கு ஒரு கட்டத்தில் உதவி செய்கிறார் நாயகி மாளவிகா.. இதனை பிடிக்காத அவளது முறை மாமன் சௌந்தர்ராஜா எதிர்ப்பு தெரிவிக்கிறார்..

கபடியிலும் சாதி.. காதலிலும் சாதி.. பார்க்கும் பிரமுகராக ஆடுகளம் நரேன்.

இவர்களுக்குள் நடக்கும் போராட்டமே இந்த அருவா சண்டை… இறுதியில் காதல் கைகூடியதா? கபடி போட்டியில் வென்று அம்மாவின் இலட்சியத்தை காப்பாற்றினாரா ஹீரோ? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

நடிகர், நடிகைகள்:

V. ராஜா ( முத்து)
மாளவிகா மேனன் ( ரம்யா)
சரண்யா பொன்வண்ணன் ( வள்ளியம்மா )
ஆடுகளம் நரேன் ( மாயாண்டி )
சௌந்தர்ராஜா ( பாண்டி )
கஞ்சா கருப்பு ( மைனர் )
காதல் சுகுமார் ( சொக்கு )

ஹீரோ ராஜா காதல் காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகளில் அடித்து துவம்சம் செய்து உள்ளார். நாயகிக்கு ரொமான்ஸ் காட்சிகளில் இவரால் ஈடு கொடுக்க முடியவில்லை.

சரண்யா பொன்வண்ணன் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பு போற்றப்படும் வகையில் உள்ளது.

வில்லனாக சௌந்தரராஜா.. கிராமத்து இளைஞனாக முறுக்கிக் கொண்டு மிரட்டி இருக்கிறார்..

டெக்னீஷியன்கள்….

ஒளிப்பதிவாளர் – சந்தோஷ் பாண்டி.
இசை – தரண்குமார்.. எடிட்டர் – வி.ஜே.சாபுஜோசப்.. ஆகியோர் தங்கள் பணிகளில் கச்சிதம்..

பாடல்களை வைரமுத்துவும் இயக்குனர் ஆதிராஜனும் எழுதியுள்ளனர்.. பாடல் வரிகள் சிறப்பு சேர்க்கின்றன.. பாடல் காட்சிகளை படமாக்கிய விதத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்… பாடல்கள் அடிக்கடி வந்து போவது கதையின் ஓட்டத்தை தாமதம் செய்கிறது..

வழக்கமாக சாதி கதை தான் என்றாலும் கிளைமாக்ஸில் ஒரு முக்கியமான கருத்தை சொல்லி வித்தியாசப்பட்டு நிற்கிறார் ஆதிராஜன்..

ஆக.. அருவா சண்ட… சாம்பலானது சாதீ

டிரைவர் ஜமுனா விமர்சனம் – 3.75/5..; ஜம்முன்னு ஒரு த்ரில்லர் ட்ரிப்

டிரைவர் ஜமுனா விமர்சனம் – 3.75/5..; ஜம்முன்னு ஒரு த்ரில்லர் ட்ரிப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஜமுனாவாக ஐஸ்வர்யா ராஜேஷ்.. இவர் ஒரு கால் டாக்ஸி டிரைவர். இவரின் கார் பயணத்தில் கொலைகார கும்பல் ஏறுகிறது. இதனையறிந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன செய்தார்.?

நடிகர் நடிகைகள் :- ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், அபிஷேக், மணிகண்டன், ஸ்ரீ ரஞ்சனி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கின்ஸ்லின்.

ஒளிப்பதிவு :- கோகுல் பெனாய்.

படத்தொகுப்பு :- ராமர்.

இசை :- ஜிப்ரான்.

தயாரிப்பு :- 18 ரீல்ஸ்.

தயாரிப்பாளர் :- SP.சௌத்ரி

கதைக்களம்…

அப்பா மரணத்திற்கு பின் தன் குடும்பத்தை தாங்க வேண்டிய சூழ்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. எனவே அப்பா வழியில் கால் டாக்ஸி டிரைவராக பணிபுரிகிறார் ஜமுனா.

ஒரு நாள் ட்ரிப்பில் இவரது காரில் ஒரு கொலைகார கும்பல் ஒரு பிரபலத்தை கொல்ல திட்டமிடுகிறது.

ஒரு கட்டத்தில் இதனையறிந்து கொண்டார் ஐஸ்வர்யா.. அதே சமயம் இந்த குமலபல் பயணிப்பது போலீசுக்கும் தெரிய வருகிறது.

எனவே அவர்கள் காரை துரத்துகின்றனர். கும்பலை போலீஸிடம் ஒப்படைக்க முயல்கிறார் ஐஸ்வர்யா.. ஆனால் அவர்கள் மிரட்டுகின்றனர்.

போலீசுக்கும் கொலைக்காரனுக்கும் நடுவில் மாட்டிக் கொண்ட ஐஸ்வர்யா என்ன செய்தார் என்பதே படத்தின் கதை..

கேரக்டர்கள்…

காரின் நாயகி.. கதையின் நாயகி என அனைத்தையும் சுமந்து நிற்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. கனா படத்திற்கு பிறகு ஓர் சிறப்பான கேரக்டரை செய்து பெண்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் காரில் பயணிப்பவர்களும் இவரின் பெற்றோர்களும் நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஆடுகளம் நரேன், அபிஷேக், மணிகண்டன், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோரும் சிறப்பு.

டெக்னீசியன்கள்…

காரின் வேகத்துக்கும் கதையின் வேகத்திற்கும் தன் இசையை கொடுத்து பயணிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ஒரு காருக்குள் கதையின் ஒட்டுமொத்த காட்சிகளும் நகரும் வகையில் இருந்தாலும் அதற்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்து நம்மை கவர்ந்துள்ளார் ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய்.

படத்தொகுப்பு :- ராமர்… படத்தின் ஆரம்பக் காட்சியில் டாக்ஸி பயணம் தொடங்குகிறது. அது போல கிளைமாக்ஸில் சில திருப்புமுனைகளை கொடுத்து நம்மை கவர்ந்துள்ளார்.

எழுத்து & இயக்கம் :- கின்ஸ்லின்.. ஒரு காருக்குள் கதையை நகர்த்தி இருப்பது புத்திசாலித்தனம்.. அதிலும் நாயகியை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கும் கின்ஸ்லினுக்கு நல்ல தைரியம் தான்.

எனவே காட்சி எங்கும் போர் அடிக்காமல் செல்வது பயணத்தின் கூடுதல் சிறப்பு.

ஆக.. டிரைவர் ஜமுனா… ஜம்முன்னு ஒரு த்ரில்லர் ட்ரிப்

FIRST ON NET செம்பி விமர்சனம் 3.75/5.; செது(சிதை)க்கப்பட்டவள்.!

FIRST ON NET செம்பி விமர்சனம் 3.75/5.; செது(சிதை)க்கப்பட்டவள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

10 வயது சிறுமி செம்பி கற்பழிக்கப்பட குற்றவாளிகளுக்கு போக்சோ சட்டத்தில் தண்டனை கிடைக்க போராடும் ஒரு பாட்டியின் கதை.

கதைக்களம்…

கொடைக்கானலில் உள்ள புலியூர் என்ற காட்டுப்பகுதியில் 10 வயது சிறுமி செம்பி வசிக்கிறாள்.. தாய் தந்தையை இழந்த இவளுக்கு பாட்டி கோவை சரளாதான் உலகமே.

ஒரு நாள் மலைத்தேன் எடுத்துக் கொண்டு காட்டுப்பகுதியில் செம்பி செல்ல அங்கு 3 பணக்கார இளைஞர்களால் கற்பழிக்கப்படுகிறார்.

இதனால் காவல்துறையில் புகாரளித்து குற்றவாளிகளை கைது செய்ய சொல்கிறார் கோவை சரளா.

ஆனால் காவல்துறையோ அந்த கயவர்களுக்கு துணை போகிறது. இதனால் காவலரை அடித்து துவம்சம் செய்துவிட்டு ஒரு பஸ்ஸில் தன் பேத்தி செம்பியுடன் தப்பித்து செல்கிறார் கோவை சரளா.

அந்த பஸ்ஸில் சகப் பயணிகளில் ஒருவராக வழக்கறிஞர் அஸ்வின் மற்றும் கண்டக்டர் தம்பி ராமையா பயணிக்கின்றனர்.

காவல் அதிகாரியை அடித்த குற்றத்திற்காக கோவை சரளாவை போலீஸ் தேடுகிறது.

ஒரு கட்டத்தில் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு கோவை சரளா யார் என்ற பின்னணி தெரிகிறது.

அதன் பிறகு என்ன ஆனது? மக்கள் யார் பக்கம்? செம்பியை கற்பழித்தவர்களுக்கு துணை போனார்களா.? அராஜக போலீசை அடித்த கோவை சரளாவுக்கு துணை நின்றார்களா.? நீதி யார் பக்கம் நின்றது என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

ஒட்டு மொத்த படத்தையும் ஒரே ஆளாக தோளில் சுமந்திருக்கிறார் கோவை சரளா. பேத்தி மீது பாசம் காட்டுவதாகட்டும்.. நீதிக்கு போராடி போலீசை எதிர்த்துப் பேசுவதாகட்டும்.. கற்பழிப்பை கண்ணீர் கதற சொல்லும் காட்சி ஆகட்டும் என ஒவ்வொரு பிரேமிலும் கோவை சரளா தன் நடிப்பில் மிரள வைத்துள்ளார்.

இந்த படத்திற்கு சரளாவுக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

செம்பியாக நடித்துள்ள 10 வயது சிறுமி செல்ல குழந்தை. பாதிக்கப்பட்ட பின் அவரை பார்க்கும் போது நம் கண்களில் கண்ணீர் வரும்.

பஸ்ஸில் பயணத்தின் போது ஒரு வயதான பெண்மணி கற்பழிப்பு சம்பவத்தை எதிர்த்து போராடும் போராளிகளுக்காக உணவு சமைப்பதாக சொல்லும் காட்சிகள் நிச்சயம் கண்கலங்க வைக்கும்.

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அஸ்வின் குமார்.. சில நேரம் காமெடி செய்து சில நேரம் கடுப்பேத்துகிறார் தம்பி ராமையா.

இவர்களுடன் பணக்கார திமிர் பிடித்த இளைஞர்கள் மூணு பேர்
& நாஞ்சில் சம்பத் ஆகியோரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.

முக்கியமாக போலீஸ் அதிகாரிகள் & நாஞ்சில் சம்பத் வழக்கறிஞரும் கவனிக்க வைக்கிறார்.

பஸ்ஸில் பயணிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.. அது நம் மக்களின் மனநிலையை காட்டுகிறது..

டெக்னீசியன்கள்…

செம்பி படத்தை செழிப்பாக காட்டி கண்களுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜீவன்.

மலைப்பகுதி காட்சிகளை ஜீவனாக காட்டி ரசிக்க வைக்கிறார். குடுவையில் தேன் ஒழுகும் காட்சிகள் கூட சிறப்பு.

தான் கற்பழிக்கப்பட்டோம் என்பதை கூட உணராமல் குடுவை உடைந்து விட்டது என்ற சிறுமி செம்பி கூறும் போது கோவை சரளாவுடன் சேர்ந்து நமக்கும் கண்ணீர்..

காட்டுக்குள் கோவை சரளா ஓடிச் செல்லும் காட்சிகள் நம்மை பதைபதைக்க வைக்கிறது. படத்தின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை பாராட்டும்படியாக உள்ளது.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.. எடிட்டிங் பணிகளை புவன் மேற்கொண்டுள்ளார்.

வழக்கமான பிரபு சாலமன் பட பாணிதான்… ஆனால் இதில் சிறுமி கற்பழிப்பு.. போக்சோ சட்டம் விழிப்புணர்வு.. மக்கள் அரண் என வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அந்த காட்டுப் பகுதியை விட்டு என்றுதான் நாட்டிற்கு வருவாரோ பிரபு சாலமன் தெரியவில்லை.?

முக்கியமாக பஸ் பயணக் காட்சிகள் நமக்கு மைனா படத்தையே நினைவுப்படுத்துகின்றன.

ரவீந்திரன் படத்தை தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.. இந்த படம் நாளை டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது..

ஆக இந்த செம்பி… செது(சிதை)க்கப்பட்டவள்..

Sembi movie review and rating in tamil

More Articles
Follows