தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர்கள் விமல், நேகா, அனிதா சம்பத், பாலா சரவணன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், தீபா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘தெய்வ மச்சான்’.
கதைக்களம்..
சிறு வயது முதலே விமல் மற்றும் பால சரவணன் இருவரும் பங்காளி முறை. விமலின் தந்தை பாண்டியராஜன். விமல் தூங்கும் போது சில தினங்களில் எதிர்பாராத விதமாக ஒரு கனவு வரும்.
அந்த கனவில் வேல ராமமூர்த்தி வருவார். அவர் குறி சொல்லுவார். இவர் இறந்து விடுவார்.. அவர் இறந்து விடுவார்.. என்பார்.. அவர்களும் ஓரிரு நாட்களில் இறப்பர். விமலின் அம்மா இறந்துவிடுவார் என்பார். அம்மாவும் இறந்துவிடுவார்.
அது ஒரு புறமிருக்க.. தன் தங்கை அனிதாவிற்கு மாப்பிள்ளைகளை தேடிக் கொண்டிருப்பார் விமல்.. ஒவ்வொரு வரனும் ஒவ்வொரு காரணத்தால் தட்டிக் கொண்டே செல்லும்.. ஒரு கட்டத்தில் நல்ல வரன் கிடைக்க பேசி முடிப்பார் விமல்.
அன்று இரவு தூங்கும் போது உன் தங்கைக்கு கல்யாணம் நடைபெற்ற 2வது நாளில்.. உன் தங்கை புருஷன் மச்சான் இறந்து விடுவார் என்பார்.
இதனையடுத்து குழப்பமான விமல் வேறு வழியில்லாமல் தன் மச்சான் எந்த வித பிரச்சனைக்கும் ஆளாகாமல் பார்த்துக் கொள்வார். மச்சானை காப்பாற்ற போராடுவார்.
இறுதியில் என்ன ஆனது.? தன் தங்கை வாழ்க்கை என்ன ஆனது.? மச்சான் இறந்து விட்டாரா? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
முதல் பாதி முழுவதும் தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் பாசமுள்ள அண்ணனாக வருகிறார் விமல். பின்னர் மச்சானுக்காக உருகி உருகி பத்திரமாக கவனிப்பது என தெய்வமச்சான் ஆக அசத்தியிருக்கிறார்.
ஆனால் இடைவேளை வரை பெரிதாக படத்தில் சுவாரஸ்யம் இல்லை.. பாடல் காட்சிகளும் பெரிதாக கவரவில்லை.
பாலசரவணின் காமெடி சில இடங்களில் மட்டும் கை கொடுக்கிறது. பாண்டியராஜனும் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.
தங்கையாக அனிதா சம்பத். படம் முழுவதுமே சோகமாகவே காணப்படுகிறார். கல்யாணத்திற்கு முன்பும் கல்யாணத்திற்கு பின்பும் ஒரே மாதிரியாகவே வருகிறார் எந்த ரியாக்ஷனிலும் பெரிதாக வேறுபாடு இல்லை.
ஆடுகளம் நரேன்.. அவரின் மனைவி, மாமியார்.. ஜமீன் தம்பி என அந்த குடும்பமே கலகலப்புக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.
சில நேரம் தீபா சங்கர் ஓவர் ஆக்டிங்.. அவர் குறைத்துக் கொள்வது நல்லது..
டெக்னீஷியன்கள்…
ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் அழகை கண்களுக்கு விருந்தாக்கி அளித்துள்ளார்.
முதல் பாதியில் எடிட்டர் நிறைய காட்சிகளை வெட்டி எடுக்கலாம். படம் மிகவும் போர் அடிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் அதனை சரி செய்துள்ளார்.
இயக்குநர் மார்டின் நிர்மல் குமார்.. ஜாலியாக ஒரு குடும்பக் கதையை சொல்ல வேண்டும் என நினைத்து அதனை திறம்பட கொடுத்துள்ளார் இயக்குனர்.
ஆனால் அவர் தேர்வு செய்த கேரக்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்து விட்டது.. முக்கியமாக படத்தின் நாயகி நேகா சுத்தமாக பொருந்தவில்லை.. அனிதாவும் சரியான தேர்வு இல்லை.
கிளைமாக்ஸ் காட்சியில் அந்த மச்சான் யார்.? என்ற கேரக்டர் சுவாரஸ்யம் கூட்டுகிறது.
ஆக தெய்வமச்சான்.. மகிழ்ச்சி மச்சான்
Deiva Machan movie review and rating in tamil