தெய்வமச்சான் விமர்சனம் 3.25/5..; மகிழ்ச்சி மச்சான்

தெய்வமச்சான் விமர்சனம் 3.25/5..; மகிழ்ச்சி மச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர்கள் விமல், நேகா, அனிதா சம்பத், பாலா சரவணன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், தீபா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘தெய்வ மச்சான்’.

கதைக்களம்..

சிறு வயது முதலே விமல் மற்றும் பால சரவணன் இருவரும் பங்காளி முறை. விமலின் தந்தை பாண்டியராஜன். விமல் தூங்கும் போது சில தினங்களில் எதிர்பாராத விதமாக ஒரு கனவு வரும்.

அந்த கனவில் வேல ராமமூர்த்தி வருவார். அவர் குறி சொல்லுவார். இவர் இறந்து விடுவார்.. அவர் இறந்து விடுவார்.. என்பார்.. அவர்களும் ஓரிரு நாட்களில் இறப்பர். விமலின் அம்மா இறந்துவிடுவார் என்பார். அம்மாவும் இறந்துவிடுவார்.

அது ஒரு புறமிருக்க.. தன் தங்கை அனிதாவிற்கு மாப்பிள்ளைகளை தேடிக் கொண்டிருப்பார் விமல்.. ஒவ்வொரு வரனும் ஒவ்வொரு காரணத்தால் தட்டிக் கொண்டே செல்லும்.. ஒரு கட்டத்தில் நல்ல வரன் கிடைக்க பேசி முடிப்பார் விமல்.

அன்று இரவு தூங்கும் போது உன் தங்கைக்கு கல்யாணம் நடைபெற்ற 2வது நாளில்.. உன் தங்கை புருஷன் மச்சான் இறந்து விடுவார் என்பார்.

இதனையடுத்து குழப்பமான விமல் வேறு வழியில்லாமல் தன் மச்சான் எந்த வித பிரச்சனைக்கும் ஆளாகாமல் பார்த்துக் கொள்வார். மச்சானை காப்பாற்ற போராடுவார்.

இறுதியில் என்ன ஆனது.? தன் தங்கை வாழ்க்கை என்ன ஆனது.? மச்சான் இறந்து விட்டாரா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முதல் பாதி முழுவதும் தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் பாசமுள்ள அண்ணனாக வருகிறார் விமல். பின்னர் மச்சானுக்காக உருகி உருகி பத்திரமாக கவனிப்பது என தெய்வமச்சான் ஆக அசத்தியிருக்கிறார்.

ஆனால் இடைவேளை வரை பெரிதாக படத்தில் சுவாரஸ்யம் இல்லை.. பாடல் காட்சிகளும் பெரிதாக கவரவில்லை.

பாலசரவணின் காமெடி சில இடங்களில் மட்டும் கை கொடுக்கிறது. பாண்டியராஜனும் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

தங்கையாக அனிதா சம்பத். படம் முழுவதுமே சோகமாகவே காணப்படுகிறார். கல்யாணத்திற்கு முன்பும் கல்யாணத்திற்கு பின்பும் ஒரே மாதிரியாகவே வருகிறார் எந்த ரியாக்ஷனிலும் பெரிதாக வேறுபாடு இல்லை.

ஆடுகளம் நரேன்.. அவரின் மனைவி, மாமியார்.. ஜமீன் தம்பி என அந்த குடும்பமே கலகலப்புக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.

சில நேரம் தீபா சங்கர் ஓவர் ஆக்டிங்.. அவர் குறைத்துக் கொள்வது நல்லது..

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் அழகை கண்களுக்கு விருந்தாக்கி அளித்துள்ளார்.

முதல் பாதியில் எடிட்டர் நிறைய காட்சிகளை வெட்டி எடுக்கலாம். படம் மிகவும் போர் அடிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் அதனை சரி செய்துள்ளார்.

இயக்குநர் மார்டின் நிர்மல் குமார்.. ஜாலியாக ஒரு குடும்பக் கதையை சொல்ல வேண்டும் என நினைத்து அதனை திறம்பட கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஆனால் அவர் தேர்வு செய்த கேரக்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்து விட்டது.. முக்கியமாக படத்தின் நாயகி நேகா சுத்தமாக பொருந்தவில்லை.. அனிதாவும் சரியான தேர்வு இல்லை.

கிளைமாக்ஸ் காட்சியில் அந்த மச்சான் யார்.? என்ற கேரக்டர் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

ஆக தெய்வமச்சான்.. மகிழ்ச்சி மச்சான்

Deiva Machan movie review and rating in tamil

சாகுந்தலம் விமர்சனம்..; சமந்தா காதல்.!?

சாகுந்தலம் விமர்சனம்..; சமந்தா காதல்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தின் ஒரிஜினல் படமான ஒக்கடு என்ற படத்தை இயக்கியவர் இந்த குணசேகர்.

மேலும் அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி என்ற சரித்திர கால படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் சாகுந்தலம்.

கதைக்களம்..

விஸ்வாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறக்கும் குழந்தை சகுந்தலை (சமந்தா).

ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் முனிவர்கள் நிறைந்த பகுதியில் இந்த குழந்தையை விட்டுச் செல்கின்றனர். இந்த குழந்தையை பார்க்கும் அங்கு உள்ள மடத்து மாணவர்கள் தங்களது குருவிடம் சொல்கின்றனர்

அதன்பின்னர் கன்வ மகரிஷியின் மகளாக வளர்கிறார். தன்னுடன் இருப்பவர்கள் மட்டும்தான் அன்பையும் பாசத்தையும் காட்டுவார்கள் என சமந்தா நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்நிய தேசத்திலிருந்து வரும் ராஜா இவரை கண்டதும் காதல் கொள்கிறார் துஷ்யந்தனான தேவ் மோகன்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து ரகசிய திருமணமும் செய்து கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர்.

அப்போது சமந்தா கர்ப்பமாகி விடுகிறார். நான் என் நாட்டிற்கு சென்ற பின்னர் உன்னை ராஜ மரியாதையோடு அழைத்துச் செல்கிறேன் என வாக்குறுதி கொடுத்து செல்கிறார்.

இதன் இடையில் சமந்தா ஒரு மாபெரும் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறார்.

என்னை கண்டு கொள்ளாத உன்னை அந்த ராஜாவும் கண்டு கொள்ள மாட்டார் என சாபம் விடுக்கிறார்.

அதன் பிறகு என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் கதை. மகாராணியாக மாறினாரா சமந்தா? ராஜா இவரை கண்டு கொண்டாரா என்பது தான் கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகியாக சமந்தா. மடத்தில் இருக்கும் போது ஆனந்தமாக இருப்பார் என்றால் அப்போதுமே சோக முகத்துடன் காணப்படுகிறார்.. காதலன் கைவிட்டு சென்றபோதும் மிகவும் சோகமாக காணப்படுகிறார்..

ஆக மொத்தம் படத்தில் சமந்தா சிரிக்கும் காட்சிகள் குறைவு. அவரின் வேகமும் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

துஷ்யந்தனாக தேவ் மோகன்.. நல்ல உயரம், விரிந்த தோள்கள், தீர்க்கமான கண்கள் என அரசருக்கே உரித்தான கம்பீரத்தோடு வலம் வருகிறார்.. அவரின் கண்களைப் பார்க்கும் எந்த ஒரு பெண்ணும் காதல் கொள்வாள் என்பதைப் போல காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.

சமந்தா தோழியாக வரும் அதிதி பாலன் ஓகே. துர்வாசராக வரும் மோகன்பாபு நிறைவு.

மேனகையாக மதுபாலா தன் பிள்ளைக்காக கலங்கி நடனம் ஆடி மனதில் நிறைகிறார்.

படகோட்டியாக பிரகாஷ்ராஜ். ஏன் ஒரு பாடலுக்கு மட்டும் வருகிறார்.??

டெக்னீஷியன்கள்…

மணிசர்மா வித்தியாசமான இசைக்கருவிகள் மூலம் இசையை அமைத்துள்ளார். மல்லிகா..மல்லிகா.. பாடல் மட்டும் மனதில் நிற்கிறது.

ஜோசப் வி. சேகர் ஒளிப்பதிவு நம்மை பல காட்சிகளில் வியக்க வைக்கிறது.

ஒரு புராண கால கதையை படமாக்குவது மிக எளிதான காரியம் அல்ல. அதற்கு கலை இயக்குனரின் கைவண்ணம் தான் பக்க பலம் கொடுக்கும். இதிலும் அப்படி கொடுத்திருக்கிறார்.

ஆனால் சில காட்சிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது. முக்கியமாக மிருகங்கள் காட்டப்படும் போது.. நிறைய காட்சிகளை கிரீன் மேட் வைத்து எடுத்துள்ளதும் தெரிகிறது. இவைகளை இன்னும் கலை நுணுக்கத்தோடு கவனித்திருக்கலாம்.

பிரம்மாண்ட அரண்மனையை காட்டும்போது பிரமிக்க வைக்கிறது. பாகுபலி படத்தில் கூட இப்படி ஒரு அரண்மனையை நாம் பார்க்கவில்லையே என்ற உணர்வு ஏற்படுகிறது.

இது போன்ற படங்களை 3டியில் படமாக்கி இருந்தால் குழந்தைகளும் நிறைய காட்சிகளை முக்கியமாக விலங்கு காட்சிகளை ரசித்திருப்பார்களே இயக்குனர் குணசேகர்.

Shaakuntalam movie review and rating in tamil

ருத்ரன் விமர்சனம் 2.75/5..; ஓவர் டோஸ்

ருத்ரன் விமர்சனம் 2.75/5..; ஓவர் டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

அப்பா நாசர்.. அம்மா பூர்ணிமா.. இவர்களின் மகன் ராகவா லாரன்ஸ்.. இவரின் காதலி பிரியா பவானி சங்கர். ஒரு கட்டத்தில் மனைவியாகிறார்.

இவர்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் மிகப்பெரிய கடல் பிரச்சினையால் அதிர்ச்சியில் மரணம் அடைகிறார் நாசர். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் கடனை அடைக்க மிகப்பெரிய வேலைக்கு லண்டன் செல்கிறார் லாரன்ஸ்.

அதன் பின்னர் சில நாட்களில் பிரியாவும் வெளிநாடு செல்கிறார். இந்த சூழ்நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் பூர்ணிமா மர்மமான முறையில் இறக்கிறார்.

அதற்கு என்ன காரணம்.? இந்த சூழ்நிலையில் வில்லன் சரத்குமாருக்கும் நாயகன் லாரன்ஸ்க்கும் மோதல் உருவாகிறது..

சரத்குமார் யார்.? அவரிடம் லாரன்ஸ் மோத என்ன காரணம்? இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

சமீபகாலமாக லாரன்ஸ் நடித்த படங்கள் பேய் படங்களாக அமைந்தது.. அவருக்கு வெற்றியை கொடுத்தது.. தற்போது மீண்டும் அவரது வழக்கமான மசாலா சண்டை காட்சிகள் அப்பாவித்தன ரொமான்ஸ் சமூக ஆர்வம் பொதுத்தொண்டு என மீண்டும் வலம் வந்திருக்கிறார்.

இது பார்த்து பார்த்து சலித்து போன விஷயம் என்பதால் நம்மால் படத்துடன் பெரிதாக ஒன்ற முடியவில்லை.

லாரன்ஸின் நடன அசைவுகளும் ஆக்ஷன் காட்சிகளும் வழக்கம்போல கைத்தட்டல்களை அள்ளினாலும் புதிதாக மேற்கொண்டு இருக்கலாமே என்ற எண்ணம் தோன்றுகிறது..

தற்போதைய ட்ரெண்டிங் நாயகி ப்ரியா பவானி சங்கர் இதில் நாயகி.. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.. ரீமிக்ஸ் பாடலுக்கு ஆட்டம் போடுகிறார்.. ஆனால் கஷ்டமான அசைவுகளுக்கு லாரன்ஸ் ஆட்டம் போட பிரியா எளிதான அசைவுகளுக்கு மட்டும் நடனம் ஆடுவது என்ன லாஜிக்.? நடனம் ஆட கூட நடிகை முயற்சிக்க மாட்டாரா?

ருத்ரனின் அம்மா, அப்பாவாக பூர்ணிமா – நாசர், நண்பராக காளி வெங்கட், காவலராக இளவரசு என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

சினிமாவில் ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோ ஆனவர் சரத்குமார்.. இந்த படத்தில் மீண்டும் மிரட்டல் வில்லனாக தெறிக்க விட்டுள்ளார் சரத். நாயகனுக்கு நிகராக வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்.

டெக்னீஷியன்கள்…

ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடாத பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பாடல் ஆட்டமும் தாளமும் போட வைக்கிறது. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை சூப்பர்.

சினிமா பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தி பார்க்கலாம்.. ஆனால் ஒரு தனியார் ஆல்பத்தை இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பது இசை அமைப்பாளரின் இசைத்திறனை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவில் படத்தின் மேக்கிங் ரசிக்க வைக்கிறது..

முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்த தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனுக்கு வாழ்த்துக்கள்.

நாலு காட்சி ஒரு பைட்டு.. நாலு காட்சி ஒரு பாட்டு.. நாலு காட்சி ஒரு பைட்டு.. என வருவது ஒரு வகை என்றாலும் தேவையில்லாத இடத்தில் பாடல்கள் வருவது வெறுப்பை ஏற்றுகிறது.. அதிலும் எடிட்டிங் நேர்த்தியாக கையாளப்படவில்லை.

பார்த்து சலித்துப் போன ஃபார்முலாவில் திரைக்கதை அமைத்திருக்கிறார் கதிரேசன்.

தமிழக ரசிகர்களை கவருமோ இல்லையோ.? ஆனால் இந்த படம் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் மாஸாக உள்ளது. ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் இருந்தாலும் எல்லாமே ஓவர் டோஸ் ஆக உள்ளது.

ஆக ருத்ரன்… ஓவர் டோஸ்..

Rudhran movie review and rating in Tamil

சொப்பன சுந்தரி விமர்சனம் 3.5/5.; காரை யாரு வச்சிருக்கா.?

சொப்பன சுந்தரி விமர்சனம் 3.5/5.; காரை யாரு வச்சிருக்கா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு நடுத்தர குடும்பம்.. நோயாளி அப்பா, பேராசை அம்மா தீபா சங்கர்), ஊமையான அக்கா லட்சுமி பிரியா) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் ஒரு நகைக்கடையில் வேலை பார்க்கிறார். அப்போது ஒரு பரிசு கூப்பனில் அவருக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று பரிசாகக் கிடைக்கிறது.

இதை வைத்து தனது அக்கா திருமணத்தை நடத்தி விட நினைக்கிறார் ஐஸ்வர்யா.

அப்போது எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு ஓடி போன அண்ணன் கருணாகரன் வருகிறார்.. அந்த கார் தனக்கே சொந்தம் என்கிறார்.. குடும்பத்தில் பிரச்சனை வரவே போலீசில் புகார் கொடுக்கின்றனர்.

இதன் பிறகு என்ன ஆனது.? கருணாகரன் அப்படி சொல்ல என்ன காரணம்.? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

தனக்கு ஜோடியே இல்லை என்றாலும் தன்னை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இவரது சமீபத்திய படங்கள் க/பெ ரணசிங்கம், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகியவற்றில் இந்த சொப்பன சுந்தரியும் சேரும்.

தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்து சிக்ஸர் அடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவரது அக்கா லட்சுமி பிரியா தனக்கு கொடுக்கப்பட்ட ஊமை கேரக்டரில் தன் நடிப்பால் பேச வைத்துள்ளார்.

தனது கணவரை தீபா சங்கர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் காட்சியில் செம அலப்பறை… அண்ணன் கருணாகரன், மச்சான் மைம் கோபி, போலீஸ் சுனில் ரெட்டி, டூப்ளிகேட் கார் ஓனர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் சிரிப்புக்கு நாங்க கேரண்டி என்கின்றனர்.

டெக்னீஷியன்கள்…

பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலனின் ஒளிப்பதிவு சிறப்பு.. டார்க் காமெடி கதைக்கு ஏற்ப கச்சிதம்.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும்.. அஜ்மல் தஹ்சீன் இசையில் பாடல்களும் பலம் சேர்த்துள்ளன. அடுத்து என்ன நடக்கும்.? என கதைக்கு சுவாரஸ்யம் ஏற்றுகின்றன.

முக்கியமாக பரிச்சயமான நடிகர்களை தேர்ந்தெடுத்து கோடையில் காமெடி மழையில் மக்களை நனைய வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ்.

பம்பர் பரிசில் கார், காருக்கு ஆசைப்படும் கருணாகரன், லட்சுமியை வரதட்சணைக்காக திருமணம் செய்யும் சாரா, காருக்குள் ஒரு சடலம், காமம் கொண்ட காவலர் என கதாபாத்திரங்களை திறம்பட தேர்ந்தெடுத்து வேலை வாங்கி இருக்கிறார்.

பொதுவாக இதுபோன்று பம்பர் பரிசு கிடைக்கும் கூப்பனில் அந்த கடையில் வேலை செய்யும் நபர்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.. அதை இயக்குனர் கவனிக்கவில்லையா.?

கரகாட்டக்காரன் படத்தில் காரை நாம வச்சிருக்கோம்.! இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்கா.? என்பார்கள்.

அதுபோல இந்த கதையில் இந்த காரை யார் வைத்திருக்கிறார்கள்? என்பதற்காகவே டைட்டில் சொப்பன சுந்தரி என்று வைத்துவிட்டார் இயக்குனர்.

ஆக.. சொப்பன சுந்தரி.. நகைச்சுவை சுந்தரி

Soppana Sundari movie review and rating in tamil

ரிப்பப்பரி விமர்சனம் 2.5/5.; பேய்க்கும் ஜாதீ வெறியா?

ரிப்பப்பரி விமர்சனம் 2.5/5.; பேய்க்கும் ஜாதீ வெறியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சத்யராஜ் பாக்யராஜ் பாண்டியராஜ் என பிரபல ஹீரோக்களின் பெயர்களை மகேந்திரனும் அவரது நண்பர்கள் வைத்திருக்கிறார்கள்.. இவர்கள் மூவரும் டியூடுப் சேனல் நடத்துகின்றனர்.

மனிதர்களுக்கு தான் ஜாதி வெறி பிடித்திருக்கிறது என்றால் இதில் பேய்க்கும் ஜாதி வெறி ஊட்டி இருக்கின்றார் இயக்குனர். 2வது நாயகனாக ஸ்ரீனி்.

சாதி – கலப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்கிறது ஒரு பேய். ஒரு கட்டத்தில் அது நாயகன் மகேந்திரனையும் துரத்துகிறது.

இவர் என்ன செய்தார்.? இந்த பேய்க்கும் நாயகனுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

மகேந்திரன் நடிப்பு படு செயற்கையாக இருக்கு. ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார் மகேந்திரன். ரிப்பப்பரி விழாவில் தன் கேரக்டர் 10 மடங்கு மாஸ்டர் படத்தைப் போல இருக்கும் என்றார். ஓவர் பில்டப் ஏன் செய்தார் என்பது தான் தெரியவில்லை. நடனத்தில் குறை வைக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

இவரது காதலியாக மலையாள மங்கை ஆரத்தி பொடி. இவர் சில காட்சிகளில் வந்து அழகில் நம்மை கவர்கிறார். 2வது நாயகனாகவும் பேயாகவும் வந்து கலக்கி இருக்கிறார் ஸ்ரீனி. இவரது காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

இரண்டாம் பாதியில் தான் இவர் வருகிறார். இடைவேளை வரை தியேட்டரில் அமரவே முடியவில்லை என்பதுதான் உண்மை.

பிளாஷ்பேக்கில் வரும் டிவி நடிகை காவ்யா அறிவுமணி நடிப்பு சிறப்பு சேர்க்கிறது.. சென்டிமென்ட் காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார்.

யுகே என்ற பெயரில் உண்மை காதலன் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.. மகேந்திரனின் நண்பர்களாக வருபவர்கள் மாரியும், நோபிள் ஜேம்ஸும் அவர்கள் நினைத்தால் நம்மை சிரிக்க வைப்பார்கள் என்பது போல அவ்வப்போது காமெடி செய்கின்றனர்.

இவர்கள் தவிர இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தியாக வரும் செல்லா, நக்கலைட்ஸ் தனம் என பலரும் உள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

இசையமைப்பாளர் திவாகர தியாகராஜன்.. ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம்.. படத்தொகுப்பாளர் முகேன் வேல்.. இவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

இறுதிக்காட்சியில், தேவையில்லாமல் ‘பூவே உனக்காக’ பட ஆனந்தம்.. ஆனந்தம் பாட்டு.. விஜய் ரெஃபரன்ஸ் வேற.. படம் ஓடிடும் நினைச்சாங்களோ.?

பொதுவாக பேய் படங்களில் பேய்க்கு என்ன வேலை.. பழிவாங்கல் தான்.. ஆனால் இந்த படத்தில் பேய்க்கும் ஜாதி வெறியை ஊட்டி பழி வாங்குவதாக கதை அமைத்திருக்கிறார்.. ஜாதி மேல் கோபமா.? பேய் மேல் கோபமா..? என தெரியவில்லை. என்ன இயக்குநர் அருண் கார்த்திக்.. சொல்லுங்க.?!

பேய் அருகில் இருந்தால் டமாரம் அடிக்கும் போலீஸ் நாய் ஒன்றின் ஆவி அடைக்கப்பட்ட குரங்கு பொம்மை.. (என்ன லாஜிக் தெரியல.?!)

ப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் படம் துணிந்து நிற்கிறது.

Ripupbury movie review and rating in tamil

முந்திரிக்காடு விமர்சனம் 2.5/5.; சாதிக்கு சாவு வராதா.?

முந்திரிக்காடு விமர்சனம் 2.5/5.; சாதிக்கு சாவு வராதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘முந்திரிக்காடு’.

இதில் சீமான் போலீஸ் அதிகாரியாக நடிக்க நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் ஆவார்.

நாயகியாக சுபபிரியா நடிக்க இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

நாயகன் புகழ் போலீஸ் அதிகாரியாக நினைத்து அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாயகி சுபபிரியா ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என நினைத்து அதற்காக படித்துக் கொண்டிருக்கிறார்.

நாயகி மேல் ஜாதியை சேர்ந்தவர் நாயகன் கீழ் ஜாதியை சேர்ந்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் அடிக்கடி சந்திக்கின்றனர்.

இவர்கள் அடிக்கடி சந்திப்பதால் இவர்கள் காதலிப்பதாக நினைத்து மேல் ஜாதியினர் காதலை எதிர்க்கின்றனர். ஒரு கட்டத்தில் இதனால் வெறுத்துப் போகும் நாயகி நாம் இருவரும் காதலித்தால் என்ன.?

நாம் கலப்புத் திருமணம் செய்தால் சாதி பிரச்சனைக்கு விடிவு காலம் கிடைக்கும் என சொல்கிறார். ஆனால் நாயகன் மறுக்கிறார். இதனால் என் குடும்பத்திற்கு பிரச்சினை வரும்.. நான் போலீஸ் அதிகாரி ஆக முடியாது என்கிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க முடிவு எடுக்கின்றனர். மேல் சாதியினர் இவர்களை என்ன செய்தனர்.?

இந்த நிலையில் சாதியால் பிரிந்து கிடக்கும் ஊர் மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார் போலீஸ் சீமான். இறுதியில் என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

நாயகன் புகழ் ஒரு அப்பாவி இளைஞனாக வருகிறார். அவர் போலீஸ் ஆன பிறகு கம்பீரமாக காணப்படுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் அனைவரையும் நடிப்பில் ஓவர் டேக் செய்துள்ளார் நாயகி சுபபிரியா. காதலுக்காக மேல் சாதியை எதிர்க்க இவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் அப்ளாசை அள்ளுகிறது.

நாயகியின் அப்பா சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.. அதுபோல காதலை கொல்லத் துடிக்கும் சாதி வெறியர்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றனர்.. அப்படி ஒரு நடிப்பை அவர்கள் கொடுத்துள்ளனர்.

ஆனால் அதே காட்சிகள் மீண்டும் மீண்டும் திரும்ப வருவதால் எப்படா முடியும்? என்பது போல் இருக்கிறது.

சீமான் போலீஸ் அதிகாரியாக வந்து அவர் சொல்லும் ஆலோசனைகள் அனைத்தும் சிறப்பு.. மேல் சாதியினர் சுவாசிக்கும் காற்றை கீழ் சாதியினர் சுவாசிக்கவில்லையா.? கீழ் சாதியநேர சுவாசிக்கும் காற்றை மேல் சாதியினர் சுவாசிக்கவில்லையா.? அப்போது சாதி கலக்கவில்லையா? என்று அவர் பேசும் வசனங்கள் சூப்பர்.

அது போல நாயகி பேசும் வசனமும் சூப்பர்.. நாம் காதல் திருமணம் செய்தால் நம்மை அவர்கள் கொல்ல வாய்ப்பு உண்டு. ஆனால் அடுத்த தலைமுறை நமக்காக யோசிக்கும்.. அதற்கு அடுத்த தலைமுறை சாதியை எதிர்த்து போராடும்.. அதற்கு அடுத்த தலைமுறை கண்டிப்பாக சாதியை வெல்லும் காதலாக வளர்ந்து நிற்கும்.. என சொல்லும் வசனங்கள் மனதை கவர்கின்றன.

டெக்னீஷியன்கள்…

பல வெற்றிப் படங்களை கொடுத்து சாதித்த மு.களஞ்சியம் சாதிக்காக ஒரு படம் எடுத்துள்ளார்.. இன்னும் இந்த படத்தை சிறப்பாக கொடுத்து இருக்கலாம்.

ஆனால் சாதி சாதி சாதி என படம் முழுவதும் சாடியுள்ளதால் எரிச்சலை உண்டாக்குகிறது. இப்படி எல்லாம் மனிதர்கள் இன்னும் வாழ்கிறார்களா.?

எந்நேரமும் வேலைக்கே போகாமல் காதலர்களை துரத்திக் கொண்டே இருப்பார்களா.? என்ற போன்ற கேள்விகள் எழுகின்றன.

சாதிக்காக கொலைகள் செய்யும் அவர்களை போலீஸ் ஒன்றுமே செய்யாதா.? என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன.

ஒளிப்பதிவு – ஜி.ஏ.சிவசுந்தர், இசை – ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு – எல்.வி.கே.தாஸ், பாடல்கள் – கவிபாஸ்கர், கலை – மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் – லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை – டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மு.களஞ்சியம்.

ஆக முந்திரிக்காடு.. சாதிக்கு சாவு வராதா.?

Munthirikkaadu movie review and rating in tamil

More Articles
Follows