கிக் பட விமர்சனம் 1.5/5..; படக்குழுவுக்கு ரசிகர்கள் தரும் உதை

கிக் பட விமர்சனம் 1.5/5..; படக்குழுவுக்கு ரசிகர்கள் தரும் உதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஒய் ஜி மகேந்திரன். இவரது மகன் தம்பி ராமையா.

புதுமையான விளம்பரங்கள் என்ற பெயரில் கொரில்லாவுக்கு காண்டம் என மோசமான விளம்பரங்களை தம்பிராமையா செய்கிறார். இதனால் கடுப்பான ஒய் ஜி மகேந்திரன் தன் சொத்துக்கு மட்டுமே நீ வாரிசு. என்னுடைய விளம்பர நிறுவனத்தின் வாரிசு இனி சந்தானம் தான் என நம்பி அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

சந்தானம் எல்லா குறுக்கு வழியிலும் நுழைந்து தன்னுடைய நிறுவனத்தை முன்னணி நிறுவனமாக நிறுத்துகிறார்.

சந்தானத்தின் போட்டி நிறுவனத்தில் வேலை செய்கிறார் நாயகி தன்யா ஹோப்.

ஒருநாள் சந்தானத்தின் தில்லுமுல்லுகளை வெளிச்சம் போட்டு உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கிறார் தன்யா. இதனை மறைக்க ஒரு மாடல் பெண்ணை வைத்து பிளாக் பஸ்டர் என்ற பிராண்டை விளம்பரப்படுத்துகிறார்.

இதனால் விளம்பர உலகமே பரபரப்பாகிறது. பிளாக்பஸ்டர் என்றால் என்ன என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. ஒரு கட்டத்தில் அதுவும் பொய் என்று தெரிய வருகிறது.

இல்லாத ஒரு பொருளுக்கு சந்தானம் விளம்பரம் செய்கிறார் என மேலும் புகார்கள் வருகின்றன. ஆனால் பிளாக் பஸ்டர் என்ற ஒரு பிராண்ட் இருக்கிறது அதனை சில தினங்களில் அறிவிப்பேன் என்கிறார் சந்தானம்.

அதன் பிறகு என்ன நடந்தது! பிளாக்பஸ்டர் என்ற பிராண்டை நிரூபித்தாரா சந்தானம்? நாயகன் நாயகி இருவருக்கும் மோதல் தொடர்ந்ததா அல்லது காதல் வளர்ந்ததா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…

ஒரு மாதத்திற்கு முன்பு டிடி ரிட்டன்ஸ் என்ற முழு காமெடி படத்தை கொடுத்திருந்தார் சந்தானம். ஆனால் அடுத்த மாதமே ‘கிக்’ என்ற மொக்கை படத்தைக் கொடுத்து ரசிகர்களை சோதித்து விட்டார்.

மொக்கையான காமெடிகள் சுவாரசியம் இல்லாத திரைக்கதை இப்படி பல குளறுபடி உள்ள இந்த கிக் படத்தை இரண்டு காரணங்களுக்காக மட்டுமே பார்க்கலாம். ஒன்று படத்தின் பிரம்மாண்ட பாடல்கள் உருவாக்கம். மற்றொன்று ஒளிப்பதிவு.

இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். சந்தானம் இதுவரை இல்லாத காஸ்ட்லியான உடைகள் அணிந்து ரிச் லுக்கில் வருகிறார். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிவதால் அதற்கு ஏற்ப பிரம்மாண்ட பாடல்களையும் ரிச் லுக்கில் கொடுத்துள்ளனர்.

ஆனால் படத்தின் எந்த ஒரு வசன காட்சியும் ரசிக்கும் படியாக இல்லை என்பதுதான் படத்தின் குறை. சந்தானத்தின் காமெடி ஆகட்டும் தன்யாவின் லுக் ஆகட்டும் இப்படி எதுவுமே எடுபடவில்லை.

தம்பி ராமையா, கோவை சரளா & மன்சூர் அலிகான் ஆகிய மூவருக்குமே ஓவர் ஆக்டிங் அவார்ட் கொடுக்கலாம். இவர்களால் நமக்கு தலைவலி எரிச்சல் வந்துவிடும் அப்படி ஒரு கடுப்பான நடிப்பை மூவரும் கொடுத்துள்ளனர்.

கூல் சுரேஷ், மனோபாலா, முத்துக்காளை, கிங்காங், சேது ஆகியோர் ஓரிரு காட்சியில் வந்து செல்கின்றனர். சயின்டிஸ்ட் ஆக பிரம்மானந்தம் நடித்துள்ளார்.

ஒரு டஜன் காமெடி நடிகர்களை வைத்து ஒரு காட்சியில் கூட ரசிகர்களை சிரிக்க வைக்கவில்லை என்பதில் இயக்குனர் பிரசாந்த் ராஜ் அவர்களின் தோல்வி தெரிகிறது.

ஆக ‘கிக்’ படத்தை பார்த்த ரசிகர்கள் படக்குழுவினர் உதைக்க ரெடியாக காத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

படம் எப்போது முடியும் என நாம் காத்திருக்கும் போது கடைசியாக கோர்ட் காட்சிகள் வருகின்றன.. இதுவரை தமிழ் சினிமாவில் அப்படி ஒரு காட்சி வந்திருக்குமா ? என்று தெரியவில்லை. ரவுடி போல தோற்றமளிக்கும் ஒருவர்தான் நீதிபதியாக இருக்கிறார். அவர் செய்யும் சேட்டைகளும் சந்தானம் கொடுக்கும் அருவை காமெடிகளும் நமக்கு அதிகப்படியான எரிச்சலை கொடுக்கிறது. தயவு செஞ்சி எங்களை விட்டுடுங்க என்ற மனநிலையில் நாம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

Kick movie review and rating in tamil

கருமேகங்கள் கலைகின்றன 3.5/5.; உறவுகள் உடைகின்றன

கருமேகங்கள் கலைகின்றன 3.5/5.; உறவுகள் உடைகின்றன

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பாரதிராஜாவுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள்.. அதில் ஒரு மகன் வக்கீல் கௌதம் மேனன் மட்டும் தமிழ்நாட்டில் தந்தையுடன் வசிக்கிறார். பணம் கொடுத்தால் எந்த குற்றவாளியையும் வழக்கில் இருந்து விடுவிக்கும் நபர் இவர். இதனால் தந்தை மகன் இருவரும் பத்து வருடங்களாக பேசிக் கொள்வதில்லை.

ஒரு கட்டத்தில் தங்கள் தந்தையின் 75வது பிறந்த நாளை கொண்டாட வாரிசுகள் முடிவு செய்கின்றனர். ஆனால் பிறந்தநாள் விழாவில் பாரதிராஜாவை தவிர வாரிசுகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

அந்த சமயம் பார்த்து 13 வருடங்களாக கிடைக்காமல் இருந்த ஒரு கடிதம் பாரதிராஜாவின் கைக்கு வந்து சேருகிறது. அதனை எடுத்துக் கொண்டு தன்னால் பாதிக்கப்பட்ட தன் முன்னாள் காதலியை தேடி செல்கிறார் பாரதிராஜா.

இந்த கதை ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கத்தில்.. தனக்குப் பிறக்காத மகள் சாரலை தேடி செல்கிறார் யோகி பாபு.

வேலையில்லாத மஹானாவுக்கு உதவுகிறார் யோகி பாபு. அப்போதுதான் மகானா கர்ப்பம் என்பதை அறிகிறார். மகானாவுக்கு பிறந்த பெண் குழந்தையை தன் பிள்ளை போல வளர்க்கிறார் யோகி பாபு .

இந்த நிலையில் பாரதிராஜாவும் யோகிபாபுவும் ஒரு பேருந்து பயணத்தில் சந்திக்க மீதிக்கதை தொடர்கிறது..

கேரக்டர்கள்…

பரோட்டா மாஸ்டராக காமெடி செய்யும் யோகி பாபு தன்னுடைய மகளுக்காக உருகும் காட்சிகளில் பரோட்டா மாவை போல நம் மனதை பிசைந்து விடுகிறார்.

முழுமையான ஆதாரம் இல்லாததால் தவறான தீர்ப்பை எழுதி விட்டதாக உருகும் பாரதிராஜா ஒரு கட்டத்தில் தன் காதலியை தேடிச் செல்லும் காட்சிகள் சுவாரஸ்யமானவை.

தனக்கு பிறந்த மகளை பார்த்து பின்சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ஏங்கும் காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார்.

தன் தந்தை பாரதிராஜா தான் என்று தெரிந்த பின்னாலும் தந்தை செய்த துரோகத்திற்காக அதிதி பாலன் அதட்டும் காட்சிகள் பெண்களுக்கே உரித்தான மன அழுத்தத்தை காட்டுகிறது.

விடுதி சிறுமிகளிடம் கூட அதிதி பாலன் எரிந்து விழும் காட்சிகள் நமக்கு கடுப்பை வரவழைக்கிறது. ஆனால் அதற்குப்பின் காட்டப்படும் பிளாஷ்பேக் காட்சிகள் அதிதிபாலனின் எரிச்சலை புரிய வைக்கிறது.

கணவனால் கைவிடப்பட்ட மஹானா தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். தாலியை கழட்டி வீசும் காட்சிகளில் வீரபெண்ணாக உணர வைக்கிறார்.

பாரதிராஜாவின் நண்பனாக வரும் எஸ்.ஏ சந்திரசேகர் கொஞ்ச நேரமே என்றாலும் நட்புக்கு தோள் கொடுத்து இருக்கிறார். சிறுமி சாரல் தன் வயதை மீறிய நடிப்பை கொடுத்துள்ளார்.

குற்றவாளிக்காக வாதாடும் வக்கீலாக கௌதம் மேனன். இவர் தந்தை பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் வார்த்தைகளில் உள்ள வலு நடிப்பில் இல்லை.

டெக்னீசியன்கள்…

ஏகாம்பரம் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளின் இயற்கை அழகு ரசிக்க வைக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்கு உயிரோட்ட உணர்வை கொடுத்துள்ளன.

ஒட்டுமொத்த குடும்பமும் பிரிந்து கிடக்கும் இந்த நவீன டிஜிட்டல் உலகத்தில் உறவுகளுக்கு உணர்வு கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான்.

நாகரீகம் நம் நடுவே ஸ்டைலாக அமர்ந்து கொண்டாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தந்தை – மகன்.. / தந்தை – மகள் /கணவன் – மனைவி உறவுகள் உன்னதமானவை என்பதை கண்ணீரோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான்.

யோகிபாபுவின் காட்சிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் கௌதம் காட்சிகளுக்கு இல்லை என்றே சொல்லலாம். வக்கீல் என்ற அதிகாரத்தில் இருப்பதாலோ என்னவோ தன் தந்தையைத் தேடிச் செல்லும் காட்சிகளில் கூட கௌதம் மேனன் பணிவை காட்டவில்லை. எனவே அது ரசிகர்கள் மனதில் கொஞ்சம் கூட ஒன்றவில்லை.

ஆக கருமேகங்கள் கலைகின்றன.. உறவுகள் உடைகின்றன.

கருமேகங்கள் கலைகின்றன

Karumegangal Kalaigindrana movie review and rating in tamil

பரம்பொருள் விமர்சனம் 3.75/5.. படம் பேசும் பொருளாக மாறும்

பரம்பொருள் விமர்சனம் 3.75/5.. படம் பேசும் பொருளாக மாறும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

சிலை கடத்தலை மையப்படுத்தி அதில் வியாபார யுக்தியை நுழைத்து இருக்கிறார் இயக்குனர்.

கதைக்களம்..

ஹீரோ அமிதாஸ். இவரது தங்கைக்கு ஒரு தீராத வியாதி. இதன் சிகிச்சைக்கு ரூ. 50 லட்சம்+ தேவைப்படுகிறது.

பணத்திற்காக ஒரு கட்டத்தில் போலீஸ் சரத்குமார் வீட்டில் இவர் திருடச் செல்லும் போது மாட்டிக் கொள்கிறார். எனவே அவர் மீது எல்லா வழக்குகளையும் போட சொல்கிறார் சரத்குமார்.

நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் என்னை விட்டு விடுங்கள் என கதறுகிறார் அமிதாஸ். அப்படி என்றால் எனக்கு நீ உதவி செய்தால் உன்னை வழக்கில் இருந்து விடுவிப்பேன் என்கிறார் சரத்குமார்.

அதன்படி இவர்கள் போடு திட்டம் தான் சிலை கடத்தல் வியாபாரம். அதன்படி ஒரு அபூர்வ சிலையை ஒரு பெரிய தொழில் அதிபரிடம் விற்க செல்கின்றனர். ஒரு வழியாக பேரம் பேசி 15 கோடிக்கு வாங்க அந்த தொழிலதிபர் முன் வருகிறார்.

அந்தக் கட்டத்தில் மற்றொரு கும்பலால் சிலை உடைந்து போகிறது.

அதன் பின்னர் என்ன ஆனது? தன் தங்கைக்கு மருத்துவம் பார்க்க என்ன செய்தார் அமிதாஸ்? பணத்தாசை பிடித்த போலீஸ் சரத்குமார் போட்ட திட்டம் என்ன? இவர்கள் திட்டம் நிறைவேறியதா? தொழிலதிபர் அந்த சிலையை வாங்கினாரா? சிலை பரிசோதிக்கப்பட்டதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

‘போர் தொழில்’ படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்த சரத்குமார் இந்தப் படத்திலும் அதே கம்பீரம் அதே தோற்றத்துடன் நடித்திருக்கிறார்.

ஆனால் தடம் மாறி பணத்தாசை பிடித்த அதிகாரியாக நடித்திருக்கிறார். கொஞ்சம் கூட வெட்கப்படமல் லஞ்சம் வாங்குவது.. பேரம் பேசுவது.. திடீரென கோபப்படுவது என வெளுத்துக்கட்டி இருக்கிறார் சரத்குமார்.

நாயகனாக அமிதாஸ்.. இவர் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் வில்லனாக நடித்தவர். தன் தங்கைக்காக உருகுவது.. குடும்பத்திற்காக உழைப்பது.. போலீஸிடம் சிக்கி தவிப்பது.. என பன்முகம் காட்டியிருக்கிறார் அமிதாஷ்.

நாயகியாக கஷ்மீரா.. இவர் கொஞ்ச காட்சியில் வந்தாலும் அந்த அழகு சிலை போல வருகிறார். நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லை.

சிலையை ஆய்வு செய்யும் நபராக பாலாஜி சக்திவேல். அவர் தன்னுடைய கஷ்டத்தை கூறிக் கொண்டே சிலை பரிசோதனைக்கு விலை பேசுவது சுவாரசியமான காட்சி.

வில்லன் கும்பலிடம் சரத்குமார் விலை பேசும் காட்சிகள் நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கும்.

டெக்னீசியன்கள்…

அறிமுக இயக்குநர் அரவிந்தராஜ் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து இருக்கிறார். இவர் இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர் என்பதை தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தால் உணர்த்தி இருக்கிறார்.

யுவனின் படத்திற்கு பின்னணி இசை சிறப்பான உணர்வை கொடுத்துள்ளது. அனிருத் மற்றும் யுவன் இணைந்த பாடல் தேவையில்லாத சொருகல். இந்த படத்திற்கு பாடலே தேவையில்லை என்பதை உணர்ந்து எடிட்டர் வெட்டியிருக்கலாம்.

படத்தின் ஒளிப்பதிவும் சிறப்பு. சிலை உருவாகும் காட்சிகள் பேரம் பேசப்படும் காட்சிகள் சிலை உடையும் காட்சிகள் என அனைத்தையும் தத்துரூபமாக படம் பிடித்துள்ளார்.

ஆக இந்த பரம்பொருள்.. படம் பேசும் பொருளாக மாறும்..

Paramporul movie review and rating in tamil

லக்கிமேன் விமர்சனம் 3.5/5 ; லாபம் மேன்.. ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும்.!

லக்கிமேன் விமர்சனம் 3.5/5 ; லாபம் மேன்.. ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன் என நினைக்கும் ஒருவனுக்கு திடீரென அதிர்ஷ்டம் அடிக்க தொடங்கினால்..

கதைக்களம்…

ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் யோகி பாபு. இவரது மனைவி ரேச்சல். இவர்களுக்கு ஒரு மகன்.

உழைத்து சம்பாதித்த பணம் போதவில்லை.. தனக்கு அதிர்ஷ்டம் என்பதே இல்லை என நினைத்துக் கொண்டிருக்கும் யோகிபாபுவுக்கு ஒரு நாள் திடீரென ஒரு பரிசுத் திட்டத்தில் கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது.

ஆனால் காரை நிறுத்த கூட தன் வீட்டில் வசதி இல்லாத நிலையில் பல தெரு ஓரங்களில் இரவு நேரங்களில் நிறுத்தி வருகிறார் யோகி பாபு.

ஒரு கட்டத்தில் அவருக்கு கார் வந்த பின்பு தான் மெல்ல மெல்ல அதிர்ஷ்டம் அடிக்க தொடங்குகிறது. எனவே அந்த ராசியான காரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.

திடீரென ஒரு நாள் அந்த காரை திருடர்கள் திருடி செல்கின்றனர். அதன்பின்னர் யோகி பாபுவின் வாழ்க்கை என்ன ஆனது? கார் கிடைத்ததா? அதிர்ஷ்டத்தை இழந்தாரா? யோகி பாபு என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மண்டேலா படத்திற்குப் பிறகு கதையின் நாயகனாக வலம் வருகிறார் யோகி பாபு. தனது ஒன்லைன் கவுண்டர் காமெடிகளால் சிரிக்க வைக்கிறார். தன் யதார்த்த நடிப்பால் நம்மை கலங்கவும் வைக்கிறார் யோகி பாபு.

இவரது மனைவியாக ரேச்சல். சமீபத்தில் தேசிய விருது பெற்ற கடைசி விவசாயி படத்தில் நீதிபதியாக நடித்திருந்தார் ரேச்சல். கணவனை திட்டி அதேசமயம் பாசம் காட்டும் மனைவியாக வாழ்ந்திருக்கிறார் ரேச்சல்.

இவர்களின் குழந்தையாக சாத்விக். நிஜ வாழ்க்கையில் யோகி பாபுவுக்கு ஒரு குழந்தை இருந்தால் இவனை போல தான் தோற்றமளிப்பார் என்பது போல ஜெராக்ஸ் காப்பி எடுத்து இருக்கிறார் இயக்குனர்.

இவர்களுடன் வில்லனாக வீரா.. ஆனால் இந்த வில்லன் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரி. தன்னுடைய வழக்கமான காமெடியால் திட்டும் யோகி பாபு ஒரு போலீஸ் அதிகாரியை திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கொஞ்ச நேரமே வந்தாலும் நடிகர் சிவாஜி ரசிக்க வைக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் போதை விற்ற குடும்பம் தானே என யோகி பாபு கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது.

யோகி பாபுவின் நண்பராக வரும் அப்துல் யதார்த்த நண்பனாக தோள் கொடுத்து உதவியிருக்கிறார்.

டெக்னீசியன்கள்…

சந்தீப் கே.விஜயின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் கதையின் ஓட்த்திற்கு ஏற்ப பயணிப்பது சிறப்பு. மதனின் படத்தொகுப்பும் நேர்த்தி.

பாணி பூரி என்ற வெப்சிரீசை இயக்கிய பாலாஜி வேணுகோபால் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவரும் ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார்.

சாமானியனுடன் கனெக்ட் ஆகும் கதையை வடிவமைத்து அதில் நாயகனை பொறுத்தி இருக்கிறார்.

அதிர்ஷ்டம் இல்லாத ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் அடித்தால் அவனது வாழ்க்கை எப்படி மாறும்? என்பதையும் திடீரென அந்த அதிர்ஷ்டம் காணாமல் போனால் என்னவாகும்? என்பதையும் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.

ஆக லக்கி மேன்.. லாபம் மேன் ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும்.!

lucky man movie review and rating in tamil

பாட்னர் விமர்சனம் 1.5/5.. பாவம்ய்யா விட்டுங்க

பாட்னர் விமர்சனம் 1.5/5.. பாவம்ய்யா விட்டுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தன் வீட்டில் உள்ள கடன் பிரச்சனையால் சென்னைக்கு வருகிறார் நாயகன் ஆதி. அங்கு தன்னுடைய நண்பர் ஹைடெக் திருடன் யோகிபாபு உடன் இணைகிறார்.

இவர்கள் பணி புரியும் கம்பெனியில் ஜான்விஜய் ஒரு ப்ராஜெக்ட் கொடுக்கிறார். அதற்கு அட்வான்ஸாக 50 லட்சம் ரூபாய் கொடுக்கிறார். இந்த பணத்தை யோகி பாபு ஒரு கட்டத்தில் அரசியல்வாதி ரவி மரியாவிடம் கொடுத்து.. “நான் வந்து திருப்பி கேட்டால் மட்டும் தான் இந்த பணத்தை கொடுக்க வேண்டும் என கூறி செல்கிறார்.

அதன்படி சயின்டிஸ்ட் பாண்டியராஜனிடம் இருக்கும் ஒரு சிப்பை திருட செல்கின்றனர் ஆதி & யோகிபாபு.. அங்கே தவறுதலாக யோகிபாபுவின் கழுத்தில் ஒரு ஊசி ஏற்றப்படுகிறது. மறுநாள் காலை கண்விழித்ததும் யோகி பாபு ஒரு பெண்ணாக ஹன்ஷிகாவாக மாறிவிடுகிறார்.

அதன் பிறகு என்ன ஆனது.? ஹன்சிகா மீண்டும் யோகிபாபு போல ஆனாரா.? அந்த சிப் திருட வந்தவர்கள் என்ன ஆனார்கள்.? ஆதி கடனை அடைத்தாரா? ரவி மரியா பணத்தை என்ன செய்தார்? ஜான்விஜய் யோகி பாபுவை கண்டுபிடித்தார் ?என்பதுதான் படத்தின் மீதிக்தை

கேரக்டர்கள்…

பல படங்களில் கம்பீரமாக நடித்த ஆதி இதில் ஜாலி கேரக்டருக்கு முயற்சி செய்துள்ளார்.. பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை என்றாலும் ஓரளவுக்கு சமாளித்து இருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகுதான் ஹன்சிகா வருகிறார்.. அவர் வந்தவுடன் படத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் கூடினாலும் திரைக்கதை வேகம் இல்லாத காரணத்தினால் ஹன்சிகாவின் நடிப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது.

யோகிபாபு வழக்கம் போல டேய் என மரியாதை இல்லாமல் பேசி காமெடி செய்ய முயற்சித்துள்ளார்.. சில காமெடி மட்டுமே ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

வில்லனாக ஜான் விஜய், விஞ்ஞானியாக ஆர்.பாண்டியராஜன், ஆதியின் காதலியாக பல்லக் லல்வானி ஆகியோரும் உண்டு.

ரோபோ சங்கர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, ‘டெம்பிள் மங்கீஸ்’ அகஸ்டின், யோகி பாபுவின் காதலியாக ‘மைனா’ நந்தினி, ஹெச்.ஆராக வரும் முனிஷ்காந்த், அமைச்சர் அக்னி குஞ்சாக வரும் ரவி மரியா ஆகியோருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை.

டெக்னீசியன்கள்…

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் ஹிட் ஆல்பமான ‘ராட்டி’ பாடலை இந்தப் படத்தில் வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

பொண்ணுங்க தம் அடிப்பாங்க; தண்ணி அடிப்பாங்க. கோவம் வந்தா புருஷனைப் போட்டு அடிப்பாங்க. கேட்டா ஃபெமினிசம்னு சொல்லுவாங்க’ என்று யோகிபாபு பேசும் டயலாக்கில் பெண்ணுரிமை வாதிகளுக்கு என்ன சொல்ல வருகிறார்.?

ஷபீர் அகமதுவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.

இயக்குனர் மனோஜ் தாமோதரன்… இயக்கியுள்ளார்.. லாஜிக் பார்க்காமல் படத்தை காமெடியாக கொடுக்க முயற்சி செய்துள்ளார்.. ஆனால் காமெடியாவது அதிகம் இருந்தால் லாஜிக்கை மறந்து இருக்கலாம்.. படத்தின் நீளம் மட்டுமே குறைவு என்பதால் ஓரளவுக்கு பொறுத்துக் கொள்ள முடிகிறது..

யோகி பாபுவாக மாறுகிறார் ஹன்சிகா. அதற்கு ஆண் குரல் கொடுத்து இருக்க வேண்டும்… ஆனால் டப்பிங் கலைஞர் சவிதாவின் குரலை கொடுத்து இருக்கிறார்கள்.. அவர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.. ஹன்சிகா தன்னுடைய பாடி லாங்குவேஜ் ஆண்களுக்கு ஏற்ப மாற்றி இருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் யோகிபாபுவின் பாடி லாங்குவேஜ் கொண்டு வந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆக பார்ட்னர்.. ரசிகர்கள் பாவம்மய்யா

partner movie review and rating in tamil

அடியே விமர்சனம் 3.25/5 .; Scientific Love

அடியே விமர்சனம் 3.25/5 .; Scientific Love

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

டைம் ட்ராவல் டைம் லுப் உள்ளிட்ட பல படங்களின் கலவைதான் இந்த ‘அடியே’

டைம் ட்ராவல் கதைகளில் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செல்ல முடியும். ஆனால் இதில் ALTERNATE REALITY & UNIVERSAL PARALLEL என்பதையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

அதாவது அந்நியன் படத்தில்.. “அம்பியாக இருக்கும் விக்ரம் திடீரென ரெமோவாக மாறி இருப்பார். ஆனால் மற்றவர்கள் அப்படியே தான் இருப்பார்கள். ஆனால் இந்த கதையை பொருத்தவரை ட்டைம் டிராவல் போல கடந்த காலத்திற்கு செல்லும் நாயகன் மட்டுமல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட சில நபர்களும் செல்கின்றனர்.

மேலும் 12B படத்தில் வருவது போல பஸ்ஸை பிடித்து ஏறி இருந்தால் ஒரு கதை. பஸ்ஸை தவறவிட்டால் மற்றொரு கதை. ரியாலிட்டியை மீறிய மற்றொரு ரியாலிட்டி தான் ஆல்டர்னேட் ரியாலிட்டி.

கதைக்களம்…

பள்ளி பருவத்திலேயே தன்னுடைய பெற்றோர்களை ஒரு விபத்தில் இழந்தவர் ஜிவி பிரகாஷ். அதன் பின்னர் நண்பர்கள் உதவியால் படித்தாலும் வாழ்க்கையின் விரக்தித்தின் காரணமாக தற்கொலை செய்ய முயற்சிக்கிறார்.

அப்போது தனக்கு பிடித்தமான பெண் பாடகி கௌரி டிவியில் ஒரு பேட்டி அளிக்கிறார். அதில் எனக்கு ஒரு முதல் ரசிகன் இருக்கிறார் அவரை நான் காதலிக்கிறேன் அவரை இதுவரை பார்த்ததில்லை என்கிறார்.

இதனை கேட்ட ஜிவி பிரகாஷ் கௌரியை சந்திக்க நினைக்கிறார்.. “நான் தான் உங்களது முதல் ரசிகன்” என சொல்ல முயற்சித்து செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார். காலை எழுந்ததும் வேறு உலகத்தில் இருக்கிறார்.

அதில் மனைவியாக கௌரி வருகிறார். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என புரியாமல் தவிக்கிறார் ஜிவி பிரகாஷ். ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் தன்னுடைய பழைய உலகத்திற்கே வந்து விடுகிறார். இதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை.?

கேரக்டர்கள்…

தாடி வைத்த கல்லூரி இளைஞனாக ஜிவி பிரகாஷ். அதே சமயம் தாடி மீசை இல்லாத பள்ளி மாணவன்.. என இரண்டு இரண்டு தோற்றங்களிலும் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார்.

வேறு உலகத்திற்கு சென்றவுடன் இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. ஆனால் இவரது முகத்தை அடிக்கடி க்ளோசப் சாட்டில் காட்டிக் கொண்டிருப்பது போர்.

பள்ளி மாணவி – பாடகி – மனைவி என ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஏற்ப அழகும் குறும்புத்தனமும் கலந்து கொடுத்திருக்கிறார் நாயகி கௌரி.

நாயகன் ஜிவி பிரகாஷிடம் இவர் என்னை பிடிக்கவில்லையா? என்று கேட்கும் அழும் காட்சிகளில் கண் கலங்க வைத்து அருமையான நடிப்பை கொடுத்துள்ளார் செந்தாழினியான கௌரி.

ஆர் ஜே விஜய் வழக்கம் போல சீரியஸான படங்களுக்கு கலகலப்பு ஊட்டி செல்கிறார். இவரது கேரக்டர் பெயரே ரசிக்க வைக்கிறது அதை வைத்தும் காமெடி செய்து இருக்கிறார்.

மற்றொரு உலகத்தில் கெளதம் மேனனாக வெங்கட் பிரபு, தன்னை தானே நக்கல் அடித்துக் கொண்டு நம்மை சிரிக்க வைக்கிறார்.

டெக்னீசியன்கள்…

இயக்குநர் மணிரத்னம் கிரிக்கெட் கோச்.. பயில்வான் ரங்கநாதன் இசையமைப்பாளராக.. கூல் சுரேஷ் ஊமையாக அதுவும் தனுஷ் ரசிகராக.., ஹுண்டாய் நிறுவனம் பேஸ்ட், பிரதமராக விஜயகாந்த் என ALTERNATIVE REALITY கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

ஒரு சிலருக்கு கேரக்டர்கள் பெயரை மாற்றிய இயக்குனர் செந்தாழினி என்ற கேரக்டர் பெயரை மட்டும் எல்லா உலகத்திற்கு ஒரே மாதிரி காட்டி இருப்பது ஏன்? அது போல அவரது செல்போன் நம்பரும் மாறாமல் இருப்பதன் அவசியம் என்ன.?

கோகுல் பினோய் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும் சரி, பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கவிதையாகவே பாடலை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

அறிவியல் காதல் இரண்டையும் கலந்து வித்தியாசமான கோணத்தில் கதை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு 30 நிமிடங்கள் குழப்பமான திரைக்கதையை கொடுத்துள்ளது.

அதை எல்லாம் கிளைமாக்ஸ் காட்சிகளில் விளக்கம் கொடுத்து நிவர்த்தி செய்து இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

ஆக இந்த அடியே… அறிவியல் காதல்

Adiyae movie review and rating in tamil

More Articles
Follows