தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: சி. இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், விஜயா, கர்ணராஜா, பசி சத்யா, ஜெயராஜ்,
கதை, வசனம், இசை, இயக்கம்: சி. இளமாறன்.
முன்கதை…
சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் ‘ப்ளூ சட்டை’ மாறன். இவர் ‘ஆன்டி – இண்டியன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
இவரது விமர்சனங்கள் பெரும்பாலும் நெகட்டிவ்வாகவே இருக்கும். எனவே திரையுலகினரும் ரசிகர்களும் ஒரு திரைப்படம் எடுத்துப் பார்? அப்போதுதான் அந்த கஷ்டம் உனக்கு தெரியும் என்றார்கள்.
எனவே ஆவேசம் கொண்டு இவர் இயக்கியுள்ள படம்தான் ஆன்டி இண்டியன்.
கதைக்களம்..
தென்கச்சி கோ சுவாமிநாதனின் புறாக் கதையில் துவங்குகிறது இந்தபடம்.
சுவர் விளம்பர ஓவியக்கலைஞர் பாட்ஷா (இளமாறன்)வை யாரோ கொலை செய்துவிடுகிறார்கள். (அவர்கள் யார்? என கேட்கக்கூடாது ஏனா அது இயக்குனருக்கே தெரியாது).
பாட்ஷாவின் தந்தை இஸ்லாமியர் (இப்ராஹீம்). தாய் இந்து (சரோஜா). பின்னர் அவர் கிறிஸ்தவராக மேரியாக மதம் மாறியிருக்கிறார். (அதுவேறு கதை).
இதனால் பாட்ஷாவின் உடலை எந்த மதப்படி அடக்கம் செய்வது என குழப்பம் ஏற்படுகிறது. மேலும் அந்தத் தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்த சடல விவகாரத்தைப் அரசியல்வாதிகள் தங்கள் கட்சிகளுக்கு சாதகமாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.
அந்த சடலம் என்ன ஆனது? என்பதே மீதிக் கதை.
கேரக்டர்கள்..
ஏழுமலையாக ஜெயராஜ், சரோஜா என்னும் லூர்து மேரியாக – விஜயா மாமி, பள்ளி வாசல் பெரியவராக – நம்பி, காவி பொட்டு வைத்து காவி கட்சி லோக்கல் அரசியல்வாதியாக கர்ணராஜா, கிறிஸ்துவ ஃபாதராக ஸ்னேபா ஆகியோர் நிச்சயம் பாரட்டப்பட வேண்டியவர்கள்.
கருப்பு சட்டை போட்ட (மாறன்) நபர் பேசும் வசனங்கள் சூப்பர்.
படத்தின் நாயகன் ஜெயராஜ் எனலாம். அந்தளவிற்கு அவரே படம் முழுவதும் வருகிறார். ஆனால் இவர் பேசும் கெட்டவார்த்தைகள் மோசமாக உள்ளது. அதை சைலண்ட்டாக (மியூட்டில்) வைத்திருக்கலாம்.
போலீஸ் ஆபிசர்கள் ஆடுகளம் நரேன்.. வழக்கு எண் முத்துராமன், முதல்வராக ராதாரவி, தாசில்தார் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரின் பங்களிப்பு கச்சிதம். அதேபோல் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு சிறப்பு சேர்த்துள்ளது.
இவர்களுடன் பந்தல் போடும் பையனாக விஜய்டிவி பாலா நடித்துள்ளார். இவர் பேசும் வசனங்கள் நச் என்று உள்ளது. அதுவும் பந்தல் போடுவதும் கழட்டுவதும் என செமயாய் கலாய்த்துள்ளார்.
பாட்ஷா என்ற கேரக்டரில் பிணமாக கிடக்கிறார். புளு சட்டை மாறன். வேறு யாரையாவது பிணமாக நடிக்க வைத்திருக்கலாம். எங்கு நாம் நடித்தால் பலரும் கிண்டல் செய்வார்களோ என தெரிந்துவிட்டது போல.
சரி.. இவர் வாழ்ந்த காட்சிகள்.. இவரை கொலை செய்வது யார்? என்பதையாவது காட்டியிருக்கலாம். அப்படியென்றால் படத்தில் நடிக்க வேண்டுமே. அதனால் அந்த காட்சிகளும் இல்லை.
வசனங்கள்..
படத்தின் க்ளைமாக்சில் பேசும் வசனம் நன்றாக உள்ளது. “உங்ககிட்ட ஒரு பொணம் கிடச்சது, அத வச்சு 13 பேர கொன்னீங்க. இப்ப உங்ககிட்ட 13 பொணம் கிடச்சிருக்கு… இத வச்சு என்னல்லாம் பண்ணப் போறானுங்களோ” என ‘பசி’ சத்யா பேசும் வசனம் அப்ளாஸ் அள்ளும்.
இது தூத்துக்குடி ஸ்டெர்ட்லைட் ஆலை கலவரத்தில் நடந்த 13 கொலையை நினைவுப்படுத்துகிறது.
படத்தின் இசையை புளுசட்டை மாறனே செய்துள்ளார்.
நான் தினந்தோறும் ரிக்சா ஓட்டி பிழைக்கிறேன்.. அதுல சம்பாரிச்சதை சாராயத்துல அழிக்கிறேன்… என்ற ஒரு கானா பாடல் வருகிறது. இந்த பாடல் கூட ஏற்கெனவே நாம் கேட்ட பாடல்தான். புதுப்பாடல் போட தெரியலையா?
மேலும் இதுபோன்ற கானா பாடல்கள் படத்தில் சில உள்ளன. அவை காட்சியாகும்போது ஒரே ஆங்கிளில் எடுத்துள்ளார். அதை மேடைக் கச்சேரி பார்ப்பது போல உள்ளது.
முக்கியமாக பின்னணி இசை பற்றி சொல்ல வேண்டும். ஒரு மாதா கோயில் பற்றி காட்டினால் நாம் ஏற்கனவே கேட்ட ஆலய மணி ஓசையை அடிக்கிறார். இழவு வீடு என்பதால் இழவு ஓசையை இசைக்கிறார். அதுசரிதான். ஆனால் இது எல்லாம் ஏற்கெனவே கேட்ட இசையாகவே உள்ளது. நீங்கள் என்ன புதுமையாக செய்துள்ளீர்கள் மாறன்..?
புளு சட்டை மாறனிடம் இன்னும் சில கேள்விகள்…
எல்லாரையும் கதை திருட்டு என வெளுத்துக் கட்டும் ப்ளு சட்டை மாறன் சொந்த கதையை எடுக்காமல் 7 வருடங்களுக்கு முன் ரிலீசான ஒரு வடஇந்திய படத்தை காப்பியடித்துள்ளது ஏனோ.?
ஆர்ட்டிஸ்ட் பாட்ஷா கொல்லப்படுகிறார். அது இயற்கை மரணமாக இருந்தால் அதை யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால் படுகொலை செய்யப்பட என்ன காரணம்? அப்படி படுகொலை செய்யப்படும் அளவுக்கு பாட்ஷாவுக்கு விரோதி யார்? என ஒரு ப்ரேமில் கூட காட்டவில்லையே சார்?
சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்த மாநாடு படத்தை புளு சட்டை மாறன் விமர்சனம் செய்திருந்தார். அதில்… முதல்வர் எஸ்ஏசி நல்லவரா? கெட்டவரா? என காட்டவில்லை. எனவே அவரை கொலை செய்தால் என்ன? என ரசிகர்களுக்கே எண்ணம் வருகிறது என்றார்.
சிம்புவின் நோக்கம்.. தன் மதத்திற்கு கெட்ட பெயர் வந்துவிட கூடாது என்பதுதான். மேலும் ஒரு உயிரை கொல்வது அதுவும் ஒரு முதல்வரை கொல்வது சரியான விஷயமா? இதை நியாயப்படுத்தும் விதமாக விமர்சனம் செய்திருந்தார் மாறன்.
அப்படியிருக்கையில் ஆன்டி இண்டியன் படத்தில் பாட்ஷா (மாறன்) உடலை கடலில் வீசி எறிந்தால் என்ன? அவர் உடலை புதைக்க ஏன் இவ்வளவு கஷ்டம்? அவர் என்ன பெரிய..—-? என கேட்கத் தானே தோன்றுகிறது..
ஒரு படத்தின் கதையை கூட சொந்தமாக எடுக்க முயற்சிக்கவில்லை. இதில் பலரை விமர்சனம் செய்கிறார்?
18 நாள்களில் இதை படமாக்கியதாக சொல்கிறார் இயக்குநர். எனவே அவரை பாராட்டலாம்.
அமைதிக் குழுவுடன் தாசில்தார் போலீஸ் பேசும் பேச்சுவார்த்தை காட்சிகள்.. அதன் பிறகு வரும் வன்முறைக்காட்சி நன்றாக உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை நடிகர் கபாலி என்ற பெயரில் படம் முழுக்க அழைக்கிறார்கள். அவர் எந்த கட்சிக்கு இடைத்தேர்தலில் ஆதரவளிக்க போகிறார் என்ற காட்சியும் வருகிறது.
அதுபோல் கபாலி நடிகர் 25 வருடங்களாக ரசிகர்களை ஏமாற்றி வருகிறார் என்ற வசனமும் உள்ளது. நிஜத்தில் அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்தார் ரஜினி என்பதால் அந்த படக்காட்சிகளை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் 3 வருடங்களாக தான் அரசியலுக்கு வருவதாக சொன்னார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.)
ஆக நல்ல நடிகர்கள் துணையுடன் ‘ஆன்டி இண்டியன்’ என்ற படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் மாறன். இது போதாது புளு சட்டை மாறன் சாரே….
Blue Sattai Maran’s Anti Indian movie review and rating in Tamil