ஃபைட் கிளப் விமர்சனம்..; போதையடி அடிதடி

ஃபைட் கிளப் விமர்சனம்..; போதையடி அடிதடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்…

உறியடி விஜயகுமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சண்முகம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணவேல், வடசென்னை அன்பு, ஜெயராஜ், சார்ட்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின் மற்றும் பலர்.

தயாரிப்பு:ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: லியோன் பிரிட்டோ

இயக்கம்: அப்பாஸ் ஏ ரஹ்மத்

படம் வழங்குவது: லோகேஷ் கனகராஜ் – ஜி ஸ்குவாட்

ரிலீஸ்: சக்தி.பிலிம் ஃபேக்டரி

கதைக்களம்…

சென்னையை அடுத்த பழவேற்காடு பகுதிதான் கதைக்களமாகிறது.

அண்ணன் பெஞ்சமின்.. தம்பி ஜோசப் தம்பியின் கூட்டாளி கிருபா..

அண்ணன் ஒரு பாக்ஸர்.. தன்னால் சாதிக்க முடியாததை தன் பகுதி மக்கள் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அந்த பகுதி இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். இதற்கு ஜோசப்பும் துணை போகிறான்.

ஒரு கட்டத்தில் அண்ணன் – தம்பி பிரச்சனை எழவே அண்ணனை கொலை செய்து விடுகிறான் ஜோசப். இதனால் ஜெயிலுக்கு செல்ல போது தன் கூட்டாளி கூட தன்னை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் கிருபா பெரிய அரசியல்வாதி ஆகிடுகிறான். இதன் பிறகு என்ன நடந்தது? ஜெயிலுக்கு சென்ற ஜோசப் திரும்பி வந்தார்? நண்பருடன் மீண்டும் சேர்ந்து கொண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜோசப் அந்தப் பகுதி இளைஞன் செல்வாவை (விஜயகுமாரை) வைத்து என்னவெல்லாம் செய்தார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

கேரக்டர்ஸ்…

உறியடி படத்தின் மூலம் உரிமைக்காக உரக்க கத்திய விஜயகுமார் இதிலும் அதே துருதுருப்புடன் நம்மை கவர்ந்திருக்கிறார். ஆக்ரோஷ இளைஞராகவும் அதிரடி ஸ்கோர் செய்திருக்கிறார்.

விரோதமான வில்லத்தனம் கலந்த கேரக்டரை செய்திருக்கிறார் அவினாஷ். அரசியல்வாதி கிருபாவைக் கொல்ல போடும் திட்டங்கள் வேற லெவல்.

நாயகி மோனிஷா தேவையில்லாத கேரக்டர் என்றாலும் சில இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

கார்த்தியாக சரவணவேல், வில்லனாக ஜோசப் எனும் அவினாஷ் ரகுதேவன், அரசியல்வாதியாக கஞ்சா வியாபாரி சங்கர்தாஸ் ஆகியோர் கேரக்டர்கள் இப்படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

டெக்னீசியன்ஸ்…

கேமரா மேன் பிரிட்டோ.. வடசென்னை கடந்த பழவேற்காடு போல காட்சியளித்து அதிரடி காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

யாரும் காணாத.. பாடல் நன்றாக ஒர்க் அவுட் ஆன ஒன்றாகும். ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசையால் மிரட்டி இருக்கிறார் கோவிந்த் வசந்தா. அது போல விண்டேஜ் ரசனையான பின்னணி இசையும் சிறப்பு.

இந்தப் படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்றாலும் அவரது வழக்கமான போதைப்பொருள் தான் இந்த படத்தில் ஆணிவேர். இளைஞர்கள் வாழ்வில் போதை நுழைந்து விட்டால் அதில் அரசியலும் நுழையும்… இந்த இரண்டிலும் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் எந்த நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்? சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

கேங்ஸ்டர் கதை என்பதால் பழிவாங்கல் கதை தொடர்கிறது.. இந்த கும்பல் அந்த கும்பலை தாக்க… அந்த கும்பல் இந்த கும்பலை தாக்க இந்த நீளத்தை குறைத்து இருக்கலாம்.

பைட் கிளப் என வைத்து விட்டதால் சண்டைக்காட்சிகள் குறைவில்லை. அதே சமயம் கஞ்சா வாடைக்கும் குறைவில்லாமல் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத்.

Fight Club movie review and rating in tamil

கண்ணகி விமர்சனம்… புரட்சி பெண்கள்

கண்ணகி விமர்சனம்… புரட்சி பெண்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் புரட்சி பெண்ணே.. நியாயத்திற்காக போராடும் துணிச்சல் மிக்க பெண்கள் புரட்சி பெண்களே.. இதை மையப்படுத்தி நான்கு பெண்களின் வாழ்க்கையை திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குனர்.

கண்ணகி படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கதைக்களம்…

வித்யா பிரதீப் – அம்மு அபிராமி – கீர்த்தி பாண்டியன் – ஷாலின் ஜோயா.. இந்தப் பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் கதைகளத்தை திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குனர்.

விவகாரத்துக்கு கேட்கும் கணவன்.. ஆனால் விவகாரத்து மறுக்கும் மனைவியாக வித்யா பிரதீப்..

அடுத்ததாக கீர்த்தி பாண்டியன்.. கர்ப்பத்தை கலைக்க சொல்லும் காதலன் அதனை மறுக்கும் கீர்த்தி.

திருமணத்திற்காக வரன் தேடி காத்திருக்கும் பெண்ணாக அம்மு அபிராமி.

கண்ணகி

திருமண உறவில் நம்பிக்கை இல்லாத ஷாலின் ஜோயா.. ஆனால் லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கையை மேற்கொள்கிறார்.

இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் கதைதான் இந்த படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கீர்த்தி பாண்டியன் திருமணத்திற்கு பின்பு வந்திருக்கும் முதல் படம் இது. வித்தியாசமாக உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

கண்ணகி

தன் 2வது திருமண வாழ்க்கையாவது நன்றாக அமைய வேண்டும் என வித்யா பிரதீப் நினைப்பது விவகாரத்தான பெண்களின் உணர்வை உணர்த்தும்.

நவீன 90s கிட்ஸ் டைப்பில் ஷாலின் ஜோயா. கவனிக்கும்படியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அம்மு அபிராமிக்கு ஒவ்வொரு வரனும் நெருங்கும்போது ஒவ்வொரு ஆண் மகனையும் எப்படி கணவனாக பார்க்க முடியும் என கேட்பது நம்மை கண் கலங்க வைக்கும்.. நம் வீட்டில் திருமணமாகாத பெண் இருந்தால் அவரின் நிலை நமக்கு உணர வைக்கும்.

டெக்னீசியன்ஸ்…

அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்க ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை. ஒளிப்பதிவாளர் நேர்த்தியான உழைப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் எடிட்டர் கொஞ்சமாவது கட்டிங் போட்டு இருக்கலாம் தேவையற்ற காட்சிகள் படத்தின் நீளத்தையும் நம் பொறுமையும் சோதிக்கிறது.

கண்ணகி

தமிழ்நாடு முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது.

இடைவேளைக்கு முன்பு திரைக்கதையின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை. அதில் இயக்குனரின் தடுமாற்றம் தெரிகிறது. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் கீர்த்தி பாண்டியனின் கேரக்டர் திருப்புமுனை எதிர்பாராத ஒன்றாகும்.

ஆனால் அதுவே குளறுபடிக்கும் காரணமாக அமைந்துவிட்டது. அதை கொஞ்சம் தெளிவுப்படுத்தி இருந்தால் இந்த கண்ணகி இன்னும் கவனிக்கப்பட்டு இருப்பாள்.

அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர்… சமூகத்திற்கு பெண்களுக்கான நிலை என்ன அவர்கள் படும் அவஸ்தை என்ன? அவர்கள் செய்யும் ரகளை என்ன? அவர்கள் படும் வேதனை என்ன? அவர்கள் செய்யும் சாதனை என்ன? என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தி இருப்பது கண்ணகி-யின் பெருமையை உணர்த்தியுள்ளது.

கண்ணகி

Kannagi movie review and rating in tamil

கட்டில் மேல் காதல்.. – கட்டில் விமர்சனம் 3.25/5

கட்டில் மேல் காதல்.. – கட்டில் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஈவி கணேஷ் பாபு, சிருஷ்டி டாங்கே, இந்திர செளந்தர் ராஜன், கீதா கைலாசம் மற்றும் பலர்.

பல்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் & மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து ‘கட்டில்’ படத்தை தயாரித்துள்ளது.

நாம் உழைத்து களைத்து வீட்டிற்கு சென்றால் அட கட்டிலில் படுத்து தூங்க மாட்டோமோ என நினைப்பதுண்டு. இது கட்டில் என்று சாதாரணமாக கருதினாலும் ஒவ்வொரு தலைமுறையும் உருவாக இந்த கட்டில் எவ்வளவு உழைத்திருக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் விதமாக இந்த படத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் நாயகனும் இயக்குனருமான கணேஷ் பாபு.

ஸ்டோரி லைன்…

நாயகன் கணேஷ் பாபு. இவர் அம்மா கீதா கைலாசம் மனைவி சிருஷ்டி டாங்கே மற்றும் 6 வயது மகன்.. அடுத்த குழந்தைக்காக நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் சிருஷ்டி.

ஒரு கட்டத்தில் கணேஷ் பாபுவின் உடன் பிறந்தவர்கள் வெவ்வேறு இடங்களில் செட்டில் ஆகிவிடுகின்றனர். எனவே தங்களின் பரம்பரை வீட்டை விற்க சொல்கின்றனர்.

வீட்டை விற்க மனம் இல்லாத கணேஷ் பாபு வீட்டில் உள்ள தனக்கு பிடித்தமான கட்டிலையும் விற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டை விற்க அனைவரும் சம்மதிக்கின்றனர்.

அப்போது அந்த பெரிய கட்டிலை வைக்க இடமில்லாமல் தவிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்..

தாத்தா, தந்தை, மகன் என 3 தலைமுறை கேரக்டரில் நடித்து இருக்கிறார் கணேஷ்பாபு. வயதுக்கு ஏற்ப உடல்மொழி பாவனை என அனைத்தையும் முடிந்தவரை அழகாகவே செய்திருக்கிறார் நாயகன் கணேஷ் பாபு.

இவரே இயக்குனர் என்பதால் இரண்டு பொறுப்புகளை உணர்ந்து கட்டிலை வடிவமைத்திருக்கிறார் கணேஷ் பாபு.

சிருஷ்டி டாங்கே, கர்ப்பிணி பெண்ணாகவே உணர்ந்து பிரசவ வேதனை போல நமக்கும் வலியை ஏற்படுத்துகிறார்

தாயாக கீதா கைலாசம். யதார்த்த நடிப்பில் கவர்கிறார். அதுபோல பத்திரிக்கையாளர் செந்தில் அவர்களும் தன் கேரக்டரில் கனக்கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

சின்ன கேரக்டரில் விதார்த் சிறப்பு..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவு: ஒய்டு ஆங்கிள் ரவி சங்கரன்

இசை: ஸ்ரீகாந்த் தேவா

இயக்கம் : ஈவி கணேஷ் பாபு.

கட்டில் என்பதால் உறக்கம்.. உறக்கம் என்றால் இசை.. இசை என்றால் தாலாட்டு என்பதற்கு ஏற்ப ஸ்ரீகாந்த் தேவா தன் இசையை தாலாட்டாக கொடுத்திருக்கிறார்.

ஒய்டு ஆங்கிள் ரவி சங்கரனின் ஒளிப்பதிவும் பி. லெனின் படத்தொகுப்பு ரசிக்கும் படி அமைந்துள்ளது. காலத்துக்கு ஏற்ப காட்சிகளை திறமையாக கையாண்டுள்ளனர்.

கட்டில் என்றால் உறக்கம் மட்டும் அல்ல.. அது உறவுகளுக்கு இணையானது.. அதுவும் ஒரு குடும்ப உறவுகள் உருவாக தலைமுறைகள் உருவாக கட்டில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.. அதை உணர்வுடன் கட்டில் மூலம் கதை சொல்லி இருக்கிறார் கணேஷ் பாபு.

கட்டில்

kattil movie review and rating in tamil

DREAM GHOST.. கான்ஜூரிங் கண்ணப்பன் விமர்சனம்

DREAM GHOST.. கான்ஜூரிங் கண்ணப்பன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் காமெடி நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார்.

கதைக்களம்…

கம்ப்யூட்டரில் உருவாகும் விளையாட்டுகளை வடிவமைக்கும் (கம்ப்யூட்டர் கேம் டிசைனர்) நபர் நாயகன் சதீஷ். ஒரு கட்டத்தில் இவரது வீஎட்டு கிணற்றில் வினோதமான பொருள் ஒன்று கிடைக்கவே அது பத்திரப்படுத்தி வைக்கிறார்.

அதில் இருக்கும் இறகை இவர் பறித்த போது அடிக்கடி கனவுலகம் செல்கிறார். கனவில் இவரை பேய்கள் துரத்துகிறது.

பின்னர் நிஜ வாழ்க்கைக்கு வருகிறார். இதற்காக அவர் மருத்துவர் ரெடின் கிங்சிலியை சந்திக்கும்போது அவரும் ஒரு இறகை பறிக்க அவரும் கனவுலகுக்கு செல்கிறார். அடுத்ததாக ஆனந்தராஜ் இப்படியாக.. இவர்கள் அனைவரும் கனவுலகில் பேய்களால் துரத்தப்படுகிறார்கள்.

நிஜ வாழ்க்கைக்கும் கனவுல வாழ்க்கைக்கும் இவர்கள் சிக்கிக் கொண்டு தவிக்க எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நாய் சேகர் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் சதீஷ். அந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரித்துள்ளது. பயம் பதட்டம் குழப்பம் என பரிதவிப்பை காட்டியிருக்கிறார் சதீஷ்.

கொஞ்ச நேரமே வந்து செல்லும் கேரக்டரில் நாயகி ரெஜினா.. இவர் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நவீன அம்மா சரண்யா சில நாட்கள் லீவு விட்டு இருந்தார். இதில் மீண்டும்.. யூடியூப்பராக அலப்பறை.

இவர்களுடன் ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், நமோ நாராயணா, ஆதித்யா கதிர் என ஒரு பட்டாளமே உள்ளனர்.

ஆனந்தராஜ் எப்போதுமே தன்னுடைய கேரக்டர் மூலம் ரசிகர்களை ஆனந்த படுத்துவார். இதிலும் அவர் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

ஏழுமலையாக பேய் ஓட்டும் நிபுணராக நாசர்.

டெக்னீசியன்ஸ்…

இசை : யுவன் சங்கர் ராஜா. பேய் படத்திற்கு ஏற்ப பேயாக உழைத்து பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

அதுபோல கனவுலகம் நிஜ உலகம் என இரண்டு காட்சிகளுக்கும் ஏற்ப ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா மற்றும் படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.

கலை இயக்குனர் மோகன மகேந்திரன் தன் கைவண்ணத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார். கன உலகம் & நிஜ உலகம் என வித்தியாசம் காட்டி வியப்பிக்க வைத்துள்ளார்

அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர். அறிமுகம் என்றாலும் ஒரு வித்தியாசமான ஜர்னரில் பேய்க்கதாய் கொடுக்க முயற்சித்துள்ளார். முக்கியமாக பேய்களால் உறங்க விடாமல் செய்வதும்.. உறங்கினால் கனவு வருமே.. அதிலிருந்து தப்பிப்பதும் என குழப்பமான கதையாக இருந்தாலும் அதை குழப்பமின்றி தெளிவான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார்.

Conjuring Kannappan movie review and rating in tamil

நாடு விமர்சனம் 4/5.. மருத்துவரை நாடு

நாடு விமர்சனம் 4/5.. மருத்துவரை நாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சக்ரா & ராஜ் இணைந்து தயாரித்து எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன் – மஹிமா நம்பியார் நடித்த படம் ‘நாடு’.

இவர்களுடன் சிங்கம்புலி, ஆர் எஸ் சிவாஜி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்..

கொல்லிமலையில் உள்ள தேவநாடு. அங்கு மலைவாழ் கிராம மக்கள் வசிக்கின்றனர். இங்கு மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. முக்கியமாக மருத்துவ வசதிகள் இல்லாத கிராமம் இது. விபத்துக்கள் ஏற்படும் நிலையில் எந்த உயிரையும் காப்பாற்ற முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் மக்கள் போராடி டாக்டர் மகிமா நம்பியாரை அங்கு வர வைக்கின்றனர். ஆனால் அவருக்கு அந்த ஊரில் தங்க விருப்பமில்லை ஆனாலும் மருத்துவ சேவைகளை செய்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்.

இதனால் மக்கள் அவரை தெய்வமாக கொண்டாடுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர் டிரான்ஸ்பர் (பணியிடம் மாற்றி) செல்ல நினைக்கிறார். மக்கள் இதனை தடுக்க பல சதி திட்டங்களை செய்கின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக கதை

கேரக்டர்ஸ்…

பிக் பாஸ் தர்ஷன் இந்த படத்தின் நாயகனாகவும் மகிமா நம்பியார் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஒரு பக்கம் மருத்துவ வசதி மற்றொரு பக்கம் தன்னுடைய வசதி என இரு மனநிலை வேறுபாடுகளை அழகாக தன் நடிப்பில் காட்டி இருக்கிறார் மகிமா நம்பியார்.. தர்ஷன் எதார்த்த மனிதராக சினிமா தனம் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

தர்ஷனின் அப்பாவாக ஆர் எஸ் சிவாஜி மற்றும் ஊர் தலைவராக சிங்கம் புலி நடித்துள்ளனர்.. ஆர்.எஸ். சிவாஜி தற்போது காலமாகிவிட்டார் ஆனால் இந்தப் படத்தில் அவரது நடிப்பு பேசப்படும் வகையில் உள்ளது.

கலெக்டராக அருள்தாஸ் சிறப்பான நடிப்பு. சிங்கம் புலியின் மகனாக நடித்தவரின் காமெடி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

டெக்னீசியன்ஸ்..

சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசையமைத்துள்ளார். இருவரின் பணியும் பாராட்டுபடியான வகையில் உள்ளது.

என்னதான் உயர்தர சிகிச்சை என நாம் பேசிக் கொண்டிருந்தாலும் இன்றளவிலும் பல கிராமங்களில் அடிப்படை வசதி கூட இல்லாத பல கிராமங்கள் இருப்பதை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.

அதே சமயம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் மருத்துவ வசதி இல்லாத ஒரு நாடு நாடே அல்ல என்பதையும் இந்த படம் சித்தரிக்கிறது.

என்றைக்கு கல்வியும் மருத்துவமும் வியாபாரம் ஆனதோ அன்றே மருத்துவர்கள் தங்களுடைய சுயநலத்தை மட்டுமே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். மருத்துவ படிப்புகள் எளிதானால் மட்டுமே நல்ல மருத்துவர் இந்த நாட்டுக்கு கிடைப்பார்கள் என்பதையும் திரைக்கதையில் உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

‘எங்கேயும் எப்போதும்’ என்ற அழகான படத்தை கொடுத்த எம் சரவணன் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆக நாடு… மருத்துவரை நாடு

naadu movie review and rating in tamil

அக்ரஹார சிக்கன் பிரியாணி..; அன்னபூரணி விமர்சனம் 3/5

அக்ரஹார சிக்கன் பிரியாணி..; அன்னபூரணி விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்ரஹாரத்து பொண்ணு மாமிசம் சமைக்கும் மாமியாக வளர்ந்த கதை இது.

கதைக்களம்…

ஸ்ரீரங்கம் கோயிலில் சமைக்கும் தன் தந்தை போன்று தானும் பெரிய சமையல்காரராக வரவேண்டும் என்று நினைக்கிறார் சிறுமி நயன்தாரா.

இவரும் பல வகையான உணவுகளை ருசிக்க தொடங்கி சிறப்பான சமையலையும் கற்றுக் கொள்கிறார்.

ஆனால் இவரை அனைவரும் சமையல் காரி சமையல்காரி என கிண்டல் செய்ய அதையெல்லாம் தாண்டி ஸ்டார் ஹோட்டலில் பணிபுரியும் CHEFவாக உயர நினைக்கிறார்.

சிறுவயதில் நயன்தாராவின் ஆசைக்கு ஓகே சொன்ன தந்தை நீ செஃப்பாக மாறினால் இறைச்சிகளை சமைக்க வேண்டும் என தடை விதிக்கிறார். இதனால் வெறுத்துப் போகும் நயன்தாரா எடுத்த முடிவு தான் என்ன? தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டாரா? தன் லட்சிய கனவை அடைந்தாரா? அதற்காக என்ன செய்தார் இந்த ‘அன்னபூரணி’ என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து நிறைவு செய்து இருக்கிறார் அன்னபூரணி நயன்தாரா. ஆனால் இன்னும் மெனக்கெட்டு பயிற்சி பெற்று அக்ரஹாரத்து பாஷை பேசியிருந்தால் கூடுதல் கவனம் பெற்று இருப்பார்.

நயன்தாரா அருகில் ஜெய் போன்ற ஸ்மார்ட்டான நாயகன் இருந்தும் இருவருக்கும் எந்த ஒரு கனெக்சனும் இல்லாமல் திரைக்கதையை அமைத்திருப்பது ஏனோ?

‘தனி ஒருவன்’ படத்தில் சாதிக்கும் வரை காதலுக்கு இடமில்லை என ஜெயம்ரவி சொன்னாலும் அதில் நயன்தாராவிடம் ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் நயன்தாரா சாதிக்கும் வரை சாதித்த பின்னும் ஜெய்யுடன் எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை என்பது வருத்தமே.

தயிர்சாதத்தில் வைத்த ஊறுகாய் போல நயன்தாரா படத்தில் ஜெய் கேரக்டர் உள்ளது.

சத்யராஜ் இடைவேளை சமயத்தில் தான் வருகிறார்.. அவர் வந்த பிறகு திரைக்கதை சமையலைப் போல சூடு பிடிக்கிறது.

சத்யராஜுக்கும் அவரது மகன் கார்த்திக் குமாருக்கும் தந்தை மகன் உறவு சரியாக காட்டப்படவில்லை. வேறு யாரோ போல இருக்கிறார்கள்..

நயன்தாராவின் நண்பர்கள் வரிசையில் ஜி டிவி புகழ் திடியன் மற்றும் ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்டோரும். சிலநேரம் இவர்கள் கவனிக்க வைக்கிறார்கள்.

அன்னபூரணி

சமையல்காரர் அண்ணாமலையாக கேஸ் எஸ் ரவிக்குமார். கொஞ்ச நேரமே வந்தாலும் ஆயில் இல்லாமல் நெருப்பு இல்லாமல் (NO BOIL NO OIL) இவர் சமைக்க சொல்லிக் கொடுக்கும் முறை நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

அச்யுத் குமார், ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி, குமாரி சச்சு ஆகியோரும் நடித்துள்ளனர்.

இதில் அச்யுத் குமாருக்கு சிறப்பான வேடம். அவரும் அக்ரஹாரத்து அங்கிளாக கவனிக்க வைக்கிறார். பாட்டி சச்சு சொல்லும் நிலை..”தன் கனவுகளை துறந்து புகுந்து வீட்டுக்குள் வாழும் ஒவ்வொரு பெண்களின் நிலையை சொல்லும்.”

டெக்னீசியன்ஸ்…

தமன் இசையமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்து இருக்கிறார். அக்ரஹாரத்தில் இசை தொடங்கி ஹைடெக் வரை (கார்ப்பரேட் வரை) பயணிப்பது ரசிக்க வைக்கிறது. அது போல நயன்தாராவின் கனவு காட்சிகளுக்கு கிராபிக்ஸ் செய்து கொடுத்திருப்பது நல்ல கற்பனை.

ஒவ்வொரு முறையும் நயன்தாரா வாழ்க்கைப் படியில் ஏறுவதும் பின்னர் இறங்குவதும் அதற்கான இசையை கொடுத்து தமன் கவனிக்க வைத்துள்ளார்.

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஆயிரமாயிரம் ஹோட்டல்களில் உணவை ருசித்தாலும் அம்மா கை பக்குவம் எங்கும் கிடைக்காது.

ஆனாலும் வீட்டில் சமைக்கும் பெண்களுக்கு வீடு மட்டும் தான் உலகம் அவர்களின் கை பக்குவத்தை இந்த உலக அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அன்னபூரணி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதற்கு ஏற்ற கேரக்டரை நயன்தாரா மூலம் தேர்வு செய்திருப்பதும் புத்திசாலித்தனம்.

ஆனால் படம் முழுவதும் சமையல் சமையல் போட்டி என திரும்ப திரும்ப காட்டப்படுவதால் விளம்பரங்களையும் சீரியல்களையும் பார்ப்பதாகவே தோன்றுகிறது.

பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவு நேர்த்தி..

அருள் சக்தி முருகனின் எழுத்துக்களில் வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.. பிரியாணியை எந்த மதத்தைச் சார்ந்தவர் சமைத்தால் என்ன? அதற்கு ஏது ஜாதி ஏது மதம்? என்ற வசனங்களும்… எந்தக் கடவுளும் சைவ சாப்பாடு தான் வேண்டும் என கேட்பதில்லை என்ற வசனமும் கைதட்ட வைக்கிறது.

சைவம் அசைவம் சாப்பிடுவது எல்லாம் அவரவர் விருப்பம்.. சபரிமலைக்கு மாலை போட்டவர் மீன் விற்பதில்லையா? கறி வெட்டுவதில்லையா? அதுபோல அக்ரஹாரத்து பெண் சிக்கன் சமைத்தால் என்ன என்ற வசனங்களும் கவனிக்க வைக்கிறது.

கலை இயக்குநர் துரைராஜின் கலை வண்ணத்தில் அக்ரஹாரத்தின் அனைத்தும் அருமை.

ஆக இந்த அன்னபூரணி.. தற்போது பரபரப்பாக பேசப்படும் உணவு அரசியலையும் தொட்டு ருசி பார்க்க வைத்திருக்கிறது..

அன்னபூரணி

Annapoorani movie review and rating in tamil

More Articles
Follows