தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு கும்பல்… பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தகப்பனின் பழிவாங்கும் கதை..
கதைக்களம்…
கோயிலில் வேலை செய்து பிரசாதம் உண்டு பரதேசியாக வாழ்கிறார் செல்வராகவன். இதன் இடையில் சில கொலைகளையும் செய்கிறார் இவர். கொலைகளை தொடர்ந்து செய்ய என்ன காரணம் என்பது ஒரு பக்கம்.
மற்றொருபுறம் தன் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொள்ள அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க புறப்படுகிறார். முன்னாள் ராணுவ அதிகாரி நட்டி…
இவர்கள் சந்தித்த பின் நடக்கும் கதையே இந்த பகாசூரன்.
கேரக்டர்கள்…
தெருக்கூத்து கலைஞராக பீமராசு (செல்வராகவன்). ஒரு யதார்த்த பாசக்கார தந்தையாக காணப்பட்டாலும் பல காட்சிகளில் செல்வராகவனின் நடிப்பு செயற்கைத் தனமாக உள்ளது. முக்கியமாக தெருக்கூத்து கலைஞராக இவர் ஆடும் ஆட்டங்கள் ரசிக்க முடியவில்லை.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நட்டி.. யூடியூப்பில் தன் கிரைம் ஆராய்ச்சிகளை போட்டு வைரலாக்கி வருகிறார்.. இவரை சந்திக்கும் சிலர் இவர் யார் என்று தெரியவில்லை என்கிறார்கள்.. அதன் பிறகு உங்க யூடியுப் வீடியோக்களை பார்த்து இருக்கிறோம் என்கிறார்கள்.. அது என்ன லாஜிக் என்று புரியவில்லை.
செல்வராகவனின் மகளாக நடித்தவர் மனதில் நிற்கிறார்.. எந்த பாவமும் செய்யாத ஒரு நடுத்தர குடும்பத்து பெண்களின் உணர்வை காட்டியிருக்கிறார்.
செல்வராகவனின் மகளின் காதலனாக குணாநிதி நடித்துள்ளார்.. சில காட்சியே என்றாலும் குற்ற உணர்வு மிக்க வாலிபராக தன் கேரக்டரை நிலை நிறுத்தியுள்ளார்.
பாலியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை காட்டும் போது நம் கண்களில் கண்ணீர் வருவது நிச்சயம்.
பெண் புரோக்கராக கூல் சுரேஷ்.. அவர் வரும் காட்சிகள் தியேட்டரில் சிரிப்பலை.. ஆனால் திடீரென படத்தில் காணாமல் போய்விடுகிறார்.
செல்வராகவனின் தந்தையாக கே ராஜன். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.. யூடியுப் பிரபலம் லயா வித்தியாசமான வேடம் ஏற்று கவர்ச்சியில் இளைஞர்களை சூடேற்றுகிறார்.
ஓரிரு காட்சியில் வந்து.. அடடா இந்த பொண்ணா? என நம்மை கவனிக்க வைக்கிறார் விஜய் டிவி புகழ் ரோஜா ஸ்ரீ.
டெக்னீஷியன்கள்…
சாம் இசையில் பின்னணி இசை மிரட்டல்.. ஆனால் பாடல் பெரிதாக கை கொடுக்கவில்லை.. அப்பன் அல்லவா என்ற ஆன்மிக பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் சுத்தமாக தேவையே இல்லை என்னும் அளவுக்கு வெறுப்பேற்றுகிறது.
பகாசூரன் படத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
செல்போனை அதிகமாக பயன்படுத்தும் பிள்ளைகள் தங்கள் அறைகளில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர் கவனிக்க வேண்டும் என்பதையும் ஆன்லைனில் விபச்சாரம் பெருகிவிட்டது என்பதையும் எச்சரிக்கையாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி.
ஆக எப்போதும் உள்ளது போல சாதி கதைகளை கொடுக்காமல் சமூக சிந்தனையை கொடுத்திருப்பது பாராட்க்குரியது.
கல்வி என்ற பெயரில் கல்லூரியில் நடக்கும் கலவிகளை களைய வேண்டும் என சொல்லி எச்சரித்துள்ளார் மோகன் ஜீ.
சில வசனங்கள் அப்ளாஸ் பெறுகின்றன.. “நம்ம புள்ளைங்க ரூமுக்குள்ள என்ன பண்ணுறாங்கன்னு பெத்தவங்க கண்காணிக்கனும்..”
லாஜீக் மீறல்கள்…
ஓய்வுபெற்ற மேஜராக நட்டி ஒரு பக்கம் ஓட.. செல்வராகவன் அசால்ட்டாக பல கொலைகள் செய்கிறார். என்ன செய்கிறது காவல்துறை? என்பது கேள்விக்குறி.?!
நாம் கையில் வைத்திருக்கும் செல்போன் தான் இன்றைய நவீன பகாசூரன் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்..
ஆக… பகாசூரன்… ஆன்ட்ராய்ட் அரக்கன்
Bakasuran movie review and rating in tamil