தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா.
இவர் கருத்துவேறுபாடு காரணமாக கணவர் அஸ்வினை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு ஒரு விருந்தில் கலந்துக் கொண்டு அதிகாலை 4.30 மணிக்கு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
அப்போது, சென்னை, டி.டி.கே. சாலை வழியாக வந்துக் கொண்டிருக்கும் போது, மௌபரிஸ் சாலை அருகில் நின்ற ஆட்டோ மீது இவரின் கார் மோதியுள்ளது.
இதனால் ஆட்டோ கவிழ்ந்து அதில் இருந்த டிரைவர் மணி என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
உடனே இத்தகவலை தனுஷக்கு சௌந்தர்யா தெரிவித்தாகவும், அவர் நேரில் வந்து ஆட்டோ டிரைவரிடம் சமரசம் பேசியதாக சொல்லப்படுகிறது.
அதன்பின்னர் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்துள்ளாராம்.
இதனால் சௌந்தர்யா மீது எந்த வழக்கும் இல்லாமல் இப்பிரச்சினை முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் நடிகர் அருண் விஜய்யின் கார் மோதி ஒரு விபத்து நடந்ததும், அவரின் தந்தை விஜயகுமார் சமாதானம் செய்ததும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Soundarya Rajini hits an auto with her car Dhanush solve the issues