முதன்முறையாக ரஜினியுடன் இணையும் சமுத்திரக்கனி

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Samuthirakaniகடந்த நான்கு தினங்களாக தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு, தான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் போட்டோ சூட்டில் கலந்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

ரஞ்சித் இயக்கவுள்ள இதன் படப்பிடிப்பு வருகிற மே 28ஆம் தேதி தொடங்கவுள்ளது.

நாயகியாக ஹீமா குரோஷிமா நடிக்க, தனுஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர் ரஜினிகாந்துடன் இணைவது இதுதான் முதன்முறையாகும்.

தனுஷின் தயாரித்த விசாரணை, விஐபி, விஐபி 2 உள்ளிட்ட படங்களில் சமுத்திரக்கனி நடித்திருந்தார் என்பது இங்கே கவனித்தக்கது.

Samuthirakani to play an important role in Rajinis Thalaivar161

ரஜினி அரசியலுக்கு வரலாமா.? நண்பர் ராஜ்பகதூர் ரியாக்சன்

ரஜினி அரசியலுக்கு வரலாமா.? நண்பர் ராஜ்பகதூர் ரியாக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini in Immense Pressure To Join Politics says his friend Raj Bahadurகர்நாடகாவில் ஒரு பேருந்தில் நடத்துனராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி இன்று இந்தியாவே போற்றும் அளவுக்கு ஒரு மாபெரும் மனிதராக வளர்ந்து இருக்கிறார்.

1968ஆம் ஆண்டுகளில் ரஜினியுடன் சேர்ந்து போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்தவர் ராஜ்பகதூர்.
இன்றுவரை இவர்களது நட்பு தொடந்துக் கொண்ருக்கிறது.

புகழின் உச்சிக்கே போனாலும் இன்றும் மாறாத நட்பை அவர் மீது கொண்டிருப்பவர் ரஜினி.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நண்பர் ராஜ்பகதூர்தன் அண்மையில் பேட்டியில் கூறியதாவது…

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகம் மற்றும் மக்களின் எதிர்காலம் குறித்து அடிக்கடி ரஜினி பேசுவார்.

அவர் அரசியலுக்கு வர வேண்டும் என மக்களும் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் ஒரு விழாவில் ரஜினியை சந்தித்தேன். அப்போது பதட்டமாக இருந்தார்.

என்னெவென்று கேட்டபோது, அரசியலில் ஈடுபடுவது குறித்து பேசினார்.

அவர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.

Rajini in Immense Pressure To Join Politics says his friend Raj Bahadur

‘ரஜினி தலையில் ஒன்னுமில்ல…’ முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

‘ரஜினி தலையில் ஒன்னுமில்ல…’ முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ex Supreme Court Judge Markandey Katju oppose Rajinis entry in politicsகடந்த 25 வருடங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன் பேசிய ரஜினியோ, தான் அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதை போல மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

இதனால் பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.

ஒரு சிலர் ரஜினியின் அரசியல் வருகையை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜுவின் முகநூல் பதிவில் அவர் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

அதில்…

‘தென்னிந்தியர்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம். ஆனால், அவர்கள் நடிகை, நடிகர்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதுதான் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஏன் இப்படி சினிமா நட்சத்திரங்களை மிகைப்படுத்துகிறார்கள்?

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசனின் படம் ஒன்றைப் பார்க்கச் சென்றேன்.

படத்தின் துவக்கத்தில், சிவாஜி கணேசனின் காலை மட்டும்தான் காட்டினார்கள். அதற்கே ரசிகர்கள் அரங்கையே அதிரவைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ரஜினிகாந்த் ரசிகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும்… அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும்?

வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்று நினைக்கிறேன்.

அமிதாப்பச்சன் போன்று ரஜினி தலையிலும் ஒன்றும் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

Ex Supreme Court Judge Markandey Katju oppose Rajinis entry in politics

Ex Supreme Court Judge Markandey Katju oppose Rajinis entry in politics

அஜித்துக்காக ஓர் ஆப்பு கதை; அல்போன்ஸ் புத்திரனின் ஆசை இது

அஜித்துக்காக ஓர் ஆப்பு கதை; அல்போன்ஸ் புத்திரனின் ஆசை இது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Premam Director Alphonse Puthrens dream is to direct Ajithநேரம் மற்றும் பிரேமம் என இரண்டே இரண்டு படங்கள்தான் இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

ஆனால் அதற்குள் இளைஞர்களிடையே படு பாப்புலராகிவிட்டார் இவர்.

இந்நிலையில் அஜித்தை இயக்க ஆசைப்பட்டேன் என தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது…

ஒன்பது, 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.ஏ.இ. கல்லூரியில் படித்தபோது நானும் என் நண்பர் ஐபி கார்த்திகேயனும் அஜீத்தை பார்க்க அவர் வீட்டுக்கு சென்றோம்.

அஜீத் வீட்டு வாசலில் 3 மணிநேரம் காத்து கிடந்தும் அவரை பார்க்க முடியவில்லை.

ஒருவேளை அந்த காத்திருப்பு சிறந்த படத்திற்காக என்று நான் நினைக்கிறேன்.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா படத்தை பார்த்து, அது போன்ற கதையில் அஜித்தை இயக்க ஆசைப்பட்டேன்.

அப்படத்திற்கு நான் வைத்த தலைப்பு ‘ஆப்பு- 100 சதவீதம் கேரன்டி’ என்று தெரிவித்துள்ளார்.

Premam Director Alphonse Puthren’s dream is to direct Ajith

ரஜினிக்கு அடுத்து விஜய்யை தேர்ந்தெடுத்த சன் நிறுவனம்

ரஜினிக்கு அடுத்து விஜய்யை தேர்ந்தெடுத்த சன் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun Pictures selected Vijay after Rajinikanthடிவி உலகில் இந்தியளவில் பிரபலமான நிறுவனம் சன் டிவி.

இந்த நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற படத்தை விநியோகம் செய்து திரையுலகில் காலடி வைத்தது.

அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த வேட்டைக்காரன் மற்றும் சுறா, அஜித் நடித்த மங்காத்தா, சூர்யா நடித்த அயன் உள்ளிட்ட 23 படங்களை சன் பிக்சர்ஸ் விநியோகம் செய்துள்ளது.

ஆனால் அந்நிறுவனம் தயாரித்த ஒரே படம் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான எந்திரன் தான். இப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது.

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு விஜய், ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி62 படத்தை தயாரிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Sun Pictures selected Vijay after Rajinikanth

ரஜினி-ரஞ்சித் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்

ரஜினி-ரஞ்சித் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oscar Winner join with Pa Ranjith in Thalaivar Rajini movie2.0 படத்தை முடித்துவிட்டு தனது அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

தனுஷ் தயாரித்து, ரஞ்சித் இயக்கவிருக்கும் இதன் சூட்டிங் மே 28ஆம் தொடங்கவுள்ளது.

இதில் ரஜினியின் ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷிமா நடிக்கிறார்.

இப்படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இடம்பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே, Life of Pi படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவரும், பாகுபலி-2 படத்தில் VFX பணிகளை செய்தவருமான பெட்டா டிராப்பர் இணைகிறாராம்.

Oscar award Winner joins with Pa Ranjith in Thalaivar Rajini movie

More Articles
Follows