தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ரெமோ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வெளியானது.
இப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாது அமெரிக்கா, மலேசிய உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எனவே, இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா நடத்தப்பட்டது.
இதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது….
ரஜினிமுருகன் படத்தின் ரிலீஸ் நாள் அன்று கூட அது ரிலீஸ் ஆகுமா? என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் இந்த ரெமோ படத்தை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் என் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.
நான் 18 மணி நேரம் உழைத்துவிட்டு வீட்டில் என் குழந்தையுடன் விளையாட சென்றுவிடுவேன்.
ஆனால் அவர் வீட்டிற்கு சென்றே பல நாட்கள் ஆகிவிட்டது. சரியான உறக்கம் அவருக்கு இல்லை.
நாங்கள் இணைந்து ஒரு நல்ல ஜாலியான படத்தை கொடுக்க நினைக்கிறோம்.
என் சினிமா வாழ்க்கையில் யாரும் பின்னால் இல்லை. என் முன்னால் இருக்கும் பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் காரணம்.
அவர்களால்தான் எனக்கு இந்த மேடை கிடைத்துள்ளது.
ஆனால் அதற்குள் எவ்வளவு பிரச்சினைகள். ராஜாவிடம் சொந்த வீடு இல்லை. கார் இல்லை.
எனக்கும் சரி அவருக்கும் சரி அவ்வளவு பிரச்சினைகளை கொடுக்கின்றனர்.
யார் பிரச்சினைகளை கொடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.?
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன். எங்களை வேலை செய்யவிடுங்கள்.
அவருக்கு ரூ. 20 கோடி லாபம் கிடைத்தவுடன் அவர் எங்கோ சென்று செட்டில் ஆகி விடலாம்.
ஆனால் என்றாவது ஒருநாள் பெரிதாக புதுசாக செய்துவிட எங்கள் குழு நினைக்கிறது. அதை செய்யவிடுங்கள்.
உதவியோ ஆதரவோ வேண்டாம். அது மக்கள் கொடுப்பார்கள்.
அவர்கள் குறை சொன்னால் திருத்திக் கொண்டு அடுத்த படத்தை கொடுக்கிறோம்.
எனக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். அதற்காக உண்மையாக உழைக்க வேண்டும் என நினைக்கிறேன்.”
என்று கண்ணீர் மல்க பேசினார் சிவகார்த்திகேயன்.