தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ‘ரெமோ, வேலைக்காரன், சீமராஜா’ ஆகிய படங்களை அவரின் நெருங்கிய நண்பர் 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் சார்பாக தயாரித்தார் ஆர்.டி.ராஜா.
ரெமோ படம் நல்ல வசூலை அள்ளியது.
மற்ற இரு படங்கள் பரபரப்பாக பேசப்பட்டாலும் போதிய லாபத்தை தரவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து நிவின் பாலியுடன் ஒரு படம், அருவி பட இயக்குனருடன் ஒரு படம் என அறிவித்தார் ஆர். டி. ராஜா.
மேலும் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, ஏஆர்.ரகுமான் இசையில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தை தயாரிப்பதாகவும் அறிவித்தனர்.
ஆனால் தயாரிப்பாளர் ராஜா கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியதால் படம் அப்படியே நிறுத்தப்பட்டது.
மேலும் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தையும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய இரு படங்களை தயாரித்திருந்தார் சிவகார்த்திகேயன். இதில் கனா படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். அந்தப்படம் வெற்றி பெற்றது.
தற்போது தான் ஹீரோவாக நடிக்கும் படத்தை சிவாவே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.