விஜய் – அஜித் பட சங்கீதாவை திருமணம் செய்த ரெடின் கிங்ஸ்லி.; நடிகை விவரம் இதோ…

விஜய் – அஜித் பட சங்கீதாவை திருமணம் செய்த ரெடின் கிங்ஸ்லி.; நடிகை விவரம் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி.

வடிவேலு, சூரி, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் கதையின் நாயகர்களாக மாறிவிட்ட நிலையில் தற்போது ரெடின் கிங்ஸ்லிக்கு காமெடி வாய்ப்புகள் வந்த வண்ண உள்ளன.

‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இவரது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, விஜய் நடித்த ‘பீஸ்ட்’, ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ உள்ளிட்ட படங்களிலும் வாய்ப்பை பெற்றார் ரெடின் கிங்ஸ்லி.

Redin Kingsley and Sangeetha

இந்த நிலையில் இன்று டிசம்பர் 10ஆம் தேதி ரெடின் கிங்ஸ்லிக்கும் டிவி சீரியல் நடிகை சங்கீதாவுக்கும் மைசூரில் திருமண நடைபெற்றுள்ளது.

கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த புகைப்படங்களை நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ரெடின் கிங்ஸ்லிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor Redin Kingsley and Actress Sangeetha got married at Mysore

கூடுதல் தகவல்…

‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு உதவிய டாக்டர் ஸ்ரீநாத்தின் மனைவி மதி என்ற கேரக்டரில் நடித்தவர் சங்கீதா. மேலும் கார்த்தியுடன் ‘சுல்தான்’ &, அஜித்துடன் ‘வலிமை’ படத்திலும் நடித்து இருந்தார் சங்கீதா.

Redin Kingsley and Sangeetha

2026-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நானே..; நடிகர் சரத்குமார் நம்பிக்கை

2026-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நானே..; நடிகர் சரத்குமார் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் சரத்குமார். இவர் சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை நிர்வகித்து வருகிறார்.

சினிமாவில் வாய்ப்பு இல்லாத போது அரசியல் பக்கம் ஒதுங்கியவர் அங்கு எதிர்பார்த்த பெயரும் புகழும் பதவியும் கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் சரத்குமார்.

சரத்குமார்

இந்த நிலையில் சமீபத்தில் திருநெல்வேலி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சரத்குமார் பேசும்போது

“என் மாமியாருக்கு காலில் அடிபட்டு ஹாஸ்பிட்டலில் படுத்திருந்தாங்க. அவங்களை பார்க்க போயிருந்தேன். படுக்கையில் இருந்தவங்க என்னை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, ” மாப்ள எப்போ நீங்க முதலமைச்சர் ஆகப் போறீங்க..”ன்னுதான்..

இப்போ சொல்றேன். 2026-லே நான்தான் முதலமைச்சர். யார்..யாரோ சொல்றாங்க…நான் சொல்லக் கூடாதா..மற்றவங்க சொன்னா சீரியஸ். நான் சொன்னா மட்டும் காமெடியா..” எனப் பேசினார்.

சரத்குமார்

I will became chief minister of tamilnadu says sarathkumar

ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் ஈ-மெயில்.; தமிழ் பிரபலங்கள் ஆதரவு

ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் ஈ-மெயில்.; தமிழ் பிரபலங்கள் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’.

இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார்.

2வது நாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

ஈ-மெயில்

இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்தநிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான அமீர், நடிகர் மகத் ராகவேந்திரா, நடிகைகள் வசுந்தரா மற்றும் கோமல் சர்மா ஆகியோர் வெளியிட்டனர்.

ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் அதேசமயம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

ஈ-மெயில்

அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

ஈ-மெயில்

Online Game fraud Ameer Mahat launched First look of Email

வாழவைத்த சென்னைக்கு வாரி கொடுத்து கொண்டே இருக்கும் பாலா

வாழவைத்த சென்னைக்கு வாரி கொடுத்து கொண்டே இருக்கும் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பாதிப்பில் மக்கள் பக்கம் நிற்பவனே உண்மையான கலைஞன், தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் உதவும் குணத்தால் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார்.

தன் மொத்தக் கையிருப்பையும் திரட்டி, சென்னை வெள்ளபாதிப்பில் அவர் செய்து வரும் உதவிகளை, பலரும் பாராட்டி வருகிறார்கள்.

விஜய் டிவி ( கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாலா தற்போது தன் உதவும் கரங்களால் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித்தந்தது, ஏழ்மையான குழந்தைகளை படிக்க வைப்பது என, திரையில் பணியாற்றி அதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு இது போல் உதவி செய்து வருகிறார்.

இந்த சென்னை வெள்ளத்தில் அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிககப்பட்ட மக்களுக்கு – குடும்பத்திற்கு தலா ( 1000 ) ரூபாய் வீதம் – 200 குடும்பங்களுக்கு மொத்தமாக 2,00,000 ( இரண்டு லட்சம் ) உதவித் தொகை வழங்கினார்.

பின்னர் தான் அவசர தேவைக்காக சீட்டு போட்டு வைத்திருந்த 3 லட்ச ரூபாய் மற்றும் தன்னால் முடிந்த பணத்தை திரட்டி, பணத்தை எடுத்து, பள்ளிக்கரனை உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் 600 கிலோ அரிசி வாங்கி அளித்துள்ளார்.

அடுத்ததாக துரைப்பாக்கம் பல்லவன் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு நைட்டி,, ஆண்களுக்கு கைலி என வெள்ள நிவாரணம் அளித்துள்ளார்.

நரிக்குறவர் சமுதாய மக்கள், மழையால் பாதிக்கப்பட்ட சாலையோரம் வசிக்கும் மக்கள் என 140 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் மொத்தம் 1,40,000 ரூபாய் உதவித்தொகையுடன் ரூபாய் 1,60,000 மதிப்புள்ள
நைட்டி, கைலி உட்பட வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார்.
பாலா இதுவரை சென்னை மழைக்காக மொத்தம் 5லட்சம் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையின் பாதிப்பை சரி செய்யும் பணியில் இறங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியுடன் வெள்ள நிவாரணத்தை தன் மொத்தக் கையிருப்பையும் திரட்டி உதவி செய்து வரும் பாலாவின் முன்மாதிரியான செயல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

பாலா

Kpy Bala helping for chennai flooded area peoples

ரஜினிகாந்த் பிறந்த நாளில் ‘தலைவர் 170’ படத்தின் மெகா விருந்து

ரஜினிகாந்த் பிறந்த நாளில் ‘தலைவர் 170’ படத்தின் மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவது ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எனவே அவரது பிறந்தநாளுக்கு பலவிதமான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்து திருவிழா போல கொண்டாடி வருவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

எனவே ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்விக்க பட தயாரிப்பாளர்களும் திரையுலகினரும் ரஜினிபடம் தொடர்பான ஏதாவது ஒரு தகவல்களை பகிர்ந்து வருவதை பார்த்திருக்கிறோம்.

அடுத்த வாரம் டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார்.

இதனை முன்னிட்டு நேற்று டிசம்பர் 8ம் தேதி ‘முத்து’ படத்தின் ஜப்பான் ரீலீஸ் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு திரைப்படத்தை ரி-ரீலீஸ் செய்தது அந்த தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட உள்ளனர்.

ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க பிரபல நட்சத்திரங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalaivar 170 Mega treat on Rajini birthday

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது. பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர்.

வெப்பன்

இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது. இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ், எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிகளில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர்.

’வெப்பன்’ படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

வெப்பன்

Weapon movie team helping Chennai flood affected peoples

More Articles
Follows