தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஷால் பேசும்போது.. “4 கோடிக்கு குறைவான பட்ஜெட் படங்களை தயாரிக்காதீர்கள். உங்களுக்கு ஒரு பைசா கூட தேறாது. அதற்கு பதிலாக நிலங்களை வாங்கி போடுங்கள்.. ஏற்கனவே 120 படங்கள் திரைக்கு வர முடியாமல் முடங்கி கிடக்கின்றன’ என பேசி இருந்தார்.
இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்ன பட்ஜெட் படங்கள் சில வெற்றி பெற்று தோல்வியடைந்தும் உள்ளன. அதே சமயம் பெரிய படங்கள் மோசமான தோல்வியடைந்தும் உள்ளன.
நிலைமை இப்படி இருக்கையில் விஷால் சொன்னது சரியா தவறா என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் சீனுராமசாமி வெளியிட்டுள்ள பதிவில்…
“நடிகர் விஷால் சொல்வதில் ஒரு உண்மை உண்டு. சிறு படங்களுக்கு இங்கே நியாயம் இல்லை. சிறுபடங்களை வெளியிட யார் உண்டு.
முதல் மூன்று நாள் அவகாசம் தான். சிறுபடங்களுக்கு தியேட்டரில் முதல் ஷோ கூட்டமில்லை எனில் தூக்கப்படும். தியேட்டர் வியாபாரம் பெரிய படங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு அதில் சிறிய படங்களை வெளியிடுவது படுகொலைக்கு சமம்.
பல தியேட்டரில் சைக்கிள் பார்க்கிங்கே இல்லை.. அப்புறம் சின்ன படத்தை யார் வாழ விடுவார்கள்? அன்னக்கிளி, சேது போன்ற படங்களின் காலம் பொற்காலம்” என பதிவிட்டுள்ளார்.
Seenuramasamy support Vishal in low budget movie controversy