ரூ.100 கோடியை வசூலித்த ‘மார்க் ஆண்டனி’.; டைரக்டருக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த ப்ரொடியூசர்

ரூ.100 கோடியை வசூலித்த ‘மார்க் ஆண்டனி’.; டைரக்டருக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த ப்ரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் சிலுக்கு கேரக்டரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தை மினி ஸ்டுடியோ சார்பாக வினோத்குமார் தயாரித்திருந்தார்.

தற்போது இந்த படம் ஓடிடி-யில் வெளியாகி உள்ளது. மக்களின் பெரும் ஆதரவை பெற்ற இந்த படம் ரூ. 100 கோடி வசூலை அள்ளியுள்ளது.

இந்த நிலையில் இந்த பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பி எம் டபிள்யூ என்ற காரை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர் வினோத்.

மார்க் ஆண்டனி

Mark Antony Producer Vinod Kumar gifted a Luxury BMW Car to Adhik Ravichandran

யாஷிகா ஆனந்த் மிரட்டும் ஹாரர் படம் ‘சைத்ரா’ ரிலீஸ் அப்டேட்

யாஷிகா ஆனந்த் மிரட்டும் ஹாரர் படம் ‘சைத்ரா’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு ‘சைத்ரா’ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். .

இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.
பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார்.

மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி.
இணை தயாரிப்பு – T. கண்ணன் வரதராஜ்.
தயாரிப்பு – K. மனோகரன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் M. ஜெனித்குமார். இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

சைத்ரா

படம் பற்றி இயக்குனர் M. ஜெனித்குமார் பேசியதாவது..

24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது.

பீட்சா , டீமாண்டி காலணி மாதிரியான வித்தியாசமான திரைக்கதையை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது.

படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் கிணறு பகுதியில் படமக்கினோம் . படம் நவம்பர் 17 ம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது.

படத்தை PVR பிக்சர்ஸ் நிறுவனம் தமிழங்கமெங்கும் வெளியிடுகிறது” என்றார் இயக்குனர் M.ஜெனித் குமார்.

சைத்ரா

Yaashika Anand starrer Chaithra releasing on 17th Nov 2023

குஞ்சுமோன் – கீரவாணி – வைரமுத்து இணைந்த ‘ஜென்டில்மேன்-2’ பட ஷூட்டிங் அப்டேட்

குஞ்சுமோன் – கீரவாணி – வைரமுத்து இணைந்த ‘ஜென்டில்மேன்-2’ பட ஷூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ஜென்டில்மேன்-2’.

A.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சேத்தன் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் கதா நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்று புறங்களில் பதினைந்து நாட்கள் நடைபெற்று நிறைவுற்றது.

இதில், சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், படவா கோபி, சுதா ராணி, சித்தாரா, ஶ்ரீ லதா, கண்மணி, ‘ லொள்ளு சபா ‘ சாமிநாதன், பேபி பத்ம ராகா மற்றும் முல்லை – கோதண்டம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் முக்கியமான ஒரு சண்டை காட்சியும் படமாக்கப்பட்டது. ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி இதை படமாக்கினார்.

ஜென்டில்மேன்-2

பிரம்மாண்ட காட்சிகள் நிறைந்த அடுத்த கட்ட படப்பிடிப்பு நவம்பர் மூன்றாம் வாரம் சென்னை ஹைதராபாத் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெறும்.

நான்கு கட்டங்களாக மலேஷியா, துபாய், ஶ்ரீலங்கா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இப்படத்தில் சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், சுமன், மனோஜ் k ஜெயன், பிராச்சிகா, ‘ காந்தாரா ‘ வில்லன் அச்சுத் குமார், படவா கோபி, முனிஷ் ராஜா, ஆர்.வி.உதயகுமார், சென்றாய்ன், மைம் கோபி, ரவி பிரகாஷ், ஷிஷிர் ஷர்மா, வேலா ராம மூர்த்தி, ஜான் மகேந்திரன், கல்லூரி விமல், ‘ ஜிகர்தண்டா ‘ ராம்ஸ், பிரேம் குமார், இமான் அண்ணாச்சி, முல்லை, கோதண்டம், ஶ்ரீ ராம், ஜான் ரோஷன்,’ லொள்ளு சபா ‘ சாமிநாதன், ஜார்ஜ் விஜய், நெல்சன், சித்தாரா, சுதா ராணி, ஶ்ரீ ரஞ்சனி, சத்ய பிரியா, கண்மணி , மைனா நந்தினி, ஶ்ரீ லதா, கருண்யா, பேபி பத்ம ராகா, பேபி அனீஷா என ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பிரபல நடிகர் நடிகைகள் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது சிறப்பு அம்சமாகும்.

ஜென்டில்மேன்-2

இசை அமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் எம்.எம்.கீரவாணி , கவி பேரரசு வைரமுத்து கூட்டணியின் ஏழு பாடல்கள் படத்தில் இடம் பெறுகிறது.

அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். படத்தொகுப்பு – சதீஷ் சூரியா, நடனம் – பிருந்தா, ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, ஸ்டைலிஸ்ட் செரீனா டிசெரியா,
தயாரிப்பு மேற்பார்வை – முருகு பூபதி, சரவண குமார், ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

ஜென்டில்மேன்-2

The first Schedule of Gentleman 2 is wrapped up.

5 வருடமாக படுத்த படுக்கையாக கிடந்த விக்ரமன் மனைவி.; நடவடிக்கை எடுத்த அமைச்சர்

5 வருடமாக படுத்த படுக்கையாக கிடந்த விக்ரமன் மனைவி.; நடவடிக்கை எடுத்த அமைச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புதிய மன்னர்கள்’, ‘பூவே உனக்காக’, ‘உன்னை நினைத்து’, ‘சூரிய வம்சம்’, ‘வானத்தைப்போல’ உள்ளிட்ட பல குடும்பபாங்கான படங்களை இயக்கியவர் விக்ரமன்.

இவரது படங்களுக்கு எப்போதும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். ஆனால் சமீபகாலமாக இவர் படங்களை இயக்குவது இல்லை.

அதற்கு காரணம் இவரது மனைவி படுத்த படுக்கையாக கிடப்பதால் அவரை 5 வருடமாக அருகில் இருந்து கவனித்து வருகிறார் விக்ரமன்.

இதனையடுத்து தமிழக அமைச்சர் மா. சுப்ரமணியன் விக்ரமனை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

விக்ரமன்

இது குறித்து விக்ரமன் கூறியதாவது…

“என் மனைவிக்கு தவறான செய்த ஒரு ஆபரேஷனல் அவரால் எழுந்து நடக்க முடிவதில்லை. 5 வருடமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இதனை அறிந்து கொண்டு அமைச்சர் மா சுப்ரமணியன் ஒரு மருத்துவர் குழுவை அழைத்து வந்திருந்தார்.

என் மனைவி பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து முழுவதுமாக குணமடைய செய்வோம்” என உறுதி அளித்துள்ளார்கள்.

விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும் அமைச்சருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் இயக்குனர் விக்ரமன்.

கூடுதல் தகவல்கள்…

கே எஸ் ரவிகுமார் தயாரித்து வரும் ‘ஹிட் லிஸ்ட்’ என்ற படத்தில் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடித்து வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

விக்ரமன்

Director Vikraman wife operation TN Govt immediate action

பாஸர் இயக்கிய ‘ரூல் நம்பர் 4’ சொல்லும் ஏடிஎம் கொள்ளை கதை

பாஸர் இயக்கிய ‘ரூல் நம்பர் 4’ சொல்லும் ஏடிஎம் கொள்ளை கதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரூல் நம்பர் 4 – (Rule Number 4)

சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் YSIMY புரொடக்ஷன்ஸ் ( YSIMY Productions ) தயாரித்துள்ள படம் ‘ரூல் நம்பர் 4.’

பாஸர் (Director Bosser) இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா (AK Pratheesh Krishna) நாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா (Shree Gopi ka) கதாநாயகியாக நடிக்கிறார்.

அவர்களுடன் மோகன் வைத்யா (Mohan vidhya ), ஜீவா ரவி(Jeeva Ravi), கலா கல்யாணி (Kala Kalyani ), பிர்லா போஸ்(Birla Bose), கலா பிரதீப்(Kala Pradeep ) உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிற நாயகன் தமிழுக்கு, ஏடிஎம் செக்யூரிட்டியின் மகள் மீது காதல் உருவாகி, நாட்கள் நல்லபடியாய் நகர்கிறது.

அந்த நிலையில் ஒருநாள் ஏடிஎம் வேனை கொள்ளையடிக்க ஒருதரப்பினர் திட்டமிடுகிறார்கள். வேன் டிரைவரான நாயகனின் காதலியும் கர்ப்பிணி பெண் ஒருவரும் கடத்தப்படுகிறார்கள்.

அப்படியான சூழ்நிலையில் கதாநாயகன் எப்படி செயல்படுகிறான், அதற்கான பலன் என்ன என்பதை அதிரடியான திரைக்கதையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

ரூல் நம்பர் 4

காடு, ஊழல்வாதிகள், நேர்மையற்ற காட்டிலாக்கா அதிகாரிகள் என காட்சிகளை பரபரப்புக்கு பஞ்சமில்லாதபடி அமைத்திருக்கிறார்கள்.

படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களுக்கு கெவின் டெகாஸ்டா (Kevin D costa) இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பான கதைக்களம், அதிரடி ஆக்சன், அட்டகாசமான சென்டிமென்ட் என உருவாகியுள்ள இந்த ரூல் நம்பர் 4 (Rule Number 4 ) வரும் நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படக்குழு:..

டேவிட் ஜான் (David John ) ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு தீரஜ் சுகுமாறன் (Dheeraj Sukumaran ) பின்னணி இசையமைத்துள்ளார்.

எஸ்.பி.அஹமது ( S P Ahmed ) எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, நடன இயக்குர் பொறுப்பை அஜய் காளிமுத்து (Ajay Kalimuthu ) ஏற்றுள்ளார்.

சண்டைக் காட்சிகளை ராக் பிரபு (Rock Prabhu) வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை பா.சிவக்குமார் (P.SIVAKUMAR) கவனிக்கிறார்.
தயாரிப்பாளர் – ஷிமி இஸட் (Simy Z)
இணை தயாரிப்பாளர்கள் – ஏ. குமரபிள்ளை, கிரண் மேலவீட்டிள், தேவராஜன் பிள்ளை (Kumara Pillai, Kiran Meleveetil, Devarajan Pillai)
நவம்பர் 3 முதல் தமிழகமெங்கும் படம் வெளிவருகிறது.

ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஸ் (An Action Reaction JENISH Distribution) படத்தை வெளியிடுகிறார்.

ரூல் நம்பர் 4

Rule Number 4 movie about ATM theft thriller

என்னால முடியல.; சினிமாவை விட்டு விலகும் ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்

என்னால முடியல.; சினிமாவை விட்டு விலகும் ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2013 ஆம் ஆண்டில் வெளியான ‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்தில் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 2015ல் ‘பிரேமம்’ என்ற படத்தை இயக்கி இந்திய சினிமா ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார் அல்போன்ஸ் புத்திரன்.

இதில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் பல சாதனைகளை மலையாளத்தில் படைத்தது. மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இதனையடுத்து அல்போன்ஸ் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. அதன் பின்னர் அவியல் என்ற ஆந்தாலஜியை இயக்கியிருந்தார் அல்போன்ஸ்.

கடந்த ஆண்டு 2022 பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோல்டு’ படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது இவரது இயக்கத்தில் கிப்ட் என்ற படம் உருவாகி வருகிறது.

இந்த பத்து ஆண்டுகளில் நான்கு ஐந்து படம் படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார் அல்பான சுபத்திரன்.

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படுவார். எப்போதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர் இவர்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

“எனக்கு சிறு வயது முதலே ஆட்டிசம் குறைபாடு உள்ளது. அதை இப்போது முழுமையாக உணர்ந்துள்ளேன். இனிமே என்றால் முடியல.

எனவே படங்களை இயக்குவதை நிறுத்திக் கொள்ளப் போகிறேன். இனிமேல் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆனால் ஆல்பம் மற்றும் வீடியோக்களை உருவாக்குவேன்.” என உருக்கமான பதிவிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

Director Alphonse Puthiran quits cinema

More Articles
Follows