‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்த சில்க் ஸ்மிதா யார் தெரியுமா.?

‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்த சில்க் ஸ்மிதா யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

ஜி வி பிரகாஷ் இசையமைக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் தயாரித்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

இந்த படத்தில் சில்க் ஸ்மிதா தோற்றத்தில் ஒருவர் நடித்துள்ளார். அவர் யார்? என்பது பல ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

அவர் வேறு யாருமல்ல ஆந்திராவை சேர்ந்த டிக் டாக் பிரபலம் விஷ்ணுபிரியா காந்தி என்ற பெண்தான். இவரை பலரும் நடிகை சில்க் ஸ்மிதா போலவே உள்ளனர் என கருத்து தெரிவித்திருந்த நிலையில் இவர் மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா ஆக நடித்துள்ளார்.

மேலும் சில கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் நிஜ சில்க் ஸ்மிதா போலவே இவரை மாற்றி உள்ளதாக இயக்குனர் ஆதிக் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக சில்க் ஸ்மிதா ரசிகர்களுக்கு மீண்டும் சில்க் தரிசனம் செப்டம்பர் 15ல் கிடைக்கப் போவது உறுதி ..

 விஷ்ணுபிரியா காந்தி

Who is Silk Smitha in Mark Antony movie

வெளியே நடந்தது தெரியல.. – ஏஆர் ரஹ்மான்..; பொறுப்பற்ற பேச்சு – தீனா.; ACTC மோசடி நபர்கள் இவர்களா.?

வெளியே நடந்தது தெரியல.. – ஏஆர் ரஹ்மான்..; பொறுப்பற்ற பேச்சு – தீனா.; ACTC மோசடி நபர்கள் இவர்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை அருகே உள்ள பனையூரில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்..’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். 40 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் மாறாக ஒரு லட்சத்திற்கு அதிகமான ரசிகர்கள் திரண்டதாக கூறப்படுகிறது.

ரூ 2000 5000 10,000 விலையிலான டிக்கெட் அதிகப்படியாக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏ சி டி சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

ஏ சி டி சி நிறுவனர் ஹேமந்த் ராஜா மற்றும் பூங்கொடி இருவருமே நிகழ்ச்சிக்கு பொறுப்பு ஏற்றவர்கள் என தெரியவந்துள்ளது.

நிகழ்ச்சியில் முறையான ஏற்பாடுகள் எதுவும் அங்கு அமைக்கப்படவில்லை. மேலும் டைமண்ட் பிளாட்டினம் என இருக்கைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் குளறுபடி காரணமாக வெவ்வேறு பிரிவுகளில் ரசிகர்கள் அமர்ந்தனர்.

மேலும் முறையான பார்க்கிங் வசதிகள் அமைக்கப்படவில்லை

இதனால் நிகழ்ச்சி அரங்கத்திற்கு வெளியே மிகவும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. போக்குவரத்து நெரிசல் காரணமாக தமிழக முதலமைச்சரின் வாகனமும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்ச்சி நடந்த இடத்தை தாம்பரம் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை செய்த பின் விவரங்கள் தெரியவரும்.

இந்த நிலையில் “இந்த குளறுபடிகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.” என ஏ ஆர் ரகுமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தங்களது டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து ஏ சி டி சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கவும் ஏ ஆர் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேசமயம் நாங்கள் அரங்கத்திற்கு உள்ளே இருந்ததால் வெளியே என்ன நடந்தது என எங்களுக்கு தெரியவில்லை என ஏஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஹ்மானின் இந்த பதிலுக்கு இசை அமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தீனா கருத்து தெரிவிக்கையில்..

“அங்கு உள்ள எவருக்காகவும் மக்கள் வரவில்லை.. ஏ ஆர் ரகுமான் என்ற ஒருவருக்காகவே மக்கள் திரண்டனர். அப்படி இருக்கையில் ரகுமானின் இந்த பேச்சு பொறுப்பேற்ற பேச்சாகும்.

இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் முறையான ஏற்பாடுகளை செய்து இசையமைப்பாளர்கள் நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஹேமந்த் ராஜா மற்றும் பூங்கொடி ஆகியோரின் படங்கள் தற்போது கிடைத்துள்ளன..

Music composer AR Rahman concert issue goes viral

மனசிலாயோ சாரே.. செப்டம்பர் 15ல் ‘ஜெயிலர்’ வில்லன் வர்மா மீண்டும் வர்றார்

மனசிலாயோ சாரே.. செப்டம்பர் 15ல் ‘ஜெயிலர்’ வில்லன் வர்மா மீண்டும் வர்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரை உலகில் மிகப் பிரபலமான நடிகர் விநாயகன். இவர் தமிழில் திமிர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இவரது மிரட்டலான நடிப்பு அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

‘மனசிலாயோ சாரே.. என்று இவர் பேசும் வசனம் தமிழக மக்களையும் கவர்ந்துள்ளது. வர்மா என்ற கொடூரமான வில்லன் கேரக்டரில் இவர் அசத்தியிருந்தார்.

அண்மையில் ஒரு வீடியோவில்.. “ரஜினிக்கும் நெல்சனுக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் மிக்க நன்றி எனவும் உருக்கமாக பேசியிருந்தார்”.

இந்த நிலையில் இவரது அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன

‘காசர்கோல்ட்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார் விநாயகன். இந்த படத்தில் நாயகனாக ஆசிப் அலி நடிக்க மாளவிகா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்க மிருதுள்நாயர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ஸ்டைலிஷான ஹைடெக் வில்லனாக விநாயகன் நடித்துள்ளார். இந்த படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசாகிறது.

விநாயகன்

Jailer baddie Vinayakans next movie Kasargold release

‘படைத்தலைவன்’ பறந்து வர்றான்.; மலேசியாவை மகிழ்விக்கும் ‘ஹரா’ படக்குழு

‘படைத்தலைவன்’ பறந்து வர்றான்.; மலேசியாவை மகிழ்விக்கும் ‘ஹரா’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’.

இந்தப் படத்தில் இடம்பெற்ற கயாமுயா என்ற பாடல் மோகன் பிறந்த நாளில் கடந்த ஆண்டு 2022 வெளியானது.

தற்போது ஒரு வருடத்திற்கு பிறகு இந்த படத்தில் இடம்பெற்ற ‘படைத்தலைவன்…’ என்ற இரண்டாவது சிங்கிள் மலேசியா நாட்டில் வெளியிடப்பட உள்ளது.

அதன்படி செப்டம்பர் 17ஆம் தேதி மாலை மலேசியாவில் இந்தப் பாடல் வெளியிடப்பட உள்ளதை முன்னிட்டு ‘ஹரா’ பட குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

மோகன் ரசிகர்கள் சார்பாக நடத்தப்படும் ‘என்னோடு பாட்டு பாடுங்கள்…’ என்ற நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியாகிறது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி படைத்தலைவன் என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மோகன் ஒளிப்பதிவு செய்ய ரஷாந்த் அர்வின் இசையமைக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் ஸ்ரீ உடன் இணைந்து மோகன்ராஜ் என்பவர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் மோகன் உடன் குஷ்பூ, யோகிபாபு, சாருஹாசன், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, வனிதா, அனித்ரா நாயர், இளையா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Haraa movie 2nd Single Padaithalaivan promo released

பத்தாது பாட்டில்.. மில்லி..; விஜய் பாடிய ‘நான் ரெடி.. பாடலில் சர்ச்சை வரிகள் நீக்கம்

பத்தாது பாட்டில்.. மில்லி..; விஜய் பாடிய ‘நான் ரெடி.. பாடலில் சர்ச்சை வரிகள் நீக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்பாடல் இதுவரை யூடியூபில் 100 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது.

இப்பாடலில் சிகரெட் மற்றும் மதுவை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அதுவும் குறிப்பாக அனைத்து மக்கள் கட்சியின் நிறுவனரான ராஜேஸ்வரி பிரியா என்பவர் இப்பாடலுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், ‘நான் ரெடி’ பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளை சென்சார் வாரியம் நீக்கியுள்ளது.

இது தொடர்பாக சென்சார் சான்றிதழ் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘நான் ரெடி’ பாடலில் இடம்பெற்ற ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க.. அண்டாலக் கொண்டா சியர்ஸ் அடிக்க’ என்ற வரியும், ‘மில்லி உள்ள போனா கில்லி வெளில வருவான்டா’ என்ற வரியும் நீக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இப்பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற க்ளோசப் ஷாட்களும் நீக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த பாடல் டிவியில் ஒளிபரப்பாகும்போது மட்டுமே இந்த நடவடிக்கை, பொருந்தும் என்று கூறப்படுகிறது. திரையரங்கில் இந்த வரிகள் இடம்பெறுமா இல்லையா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

லியோ

leo movie ‘Naa ready’ song sensor board canceled several scenes

அருள்தாஸ் ஆரம்பித்து வைத்தார்.. நட்டியிடம் ரஜினி வேகம்.. நிதிலனிடம் திமிருல்ல.. – விஜய்சேதுபதி

அருள்தாஸ் ஆரம்பித்து வைத்தார்.. நட்டியிடம் ரஜினி வேகம்.. நிதிலனிடம் திமிருல்ல.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிதிலன் இயக்கத்தில் விஜய்சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ளது ‘மகாராஜா’.

நட்டி அபிராமி மம்தா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் நிதிலன்…

” இந்த கதை மீது நம்பிக்கை வைத்து கடுமையாக உழைக்கும் என்னுடைய அணிக்கு நன்றி. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அபிராமி மேம், மம்தா மேம், அனுராக் கஷ்யப் சார் இவர்களுக்கும் நன்றி.

விஜய்சேதுபதி அண்ணன் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த மனிதர். அவரது ஐம்பதாவது படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம். நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு மூன்று மடங்கு லாபம் தரக்கூடிய படமாக இதை உருவாக்குவேன்” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது…

“என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்திற்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி! இந்த படம் உங்களுக்கு பிடித்தது போல வந்திருக்கிறது.

ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். அது ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. என் சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய புள்ளியை அருள்தாஸ் அண்ணன் ஆரம்பித்து வைத்துள்ளார். அவரைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மீண்டும் வந்துள்ளது.

நட்டி சாரை பார்க்கும் பொழுது ரஜினி சாரின் அதே வேகம் ஈர்ப்பு அவரிடம் இருந்தது. பிலோமின், தினேஷ், அபிராமி, மம்தா என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

நிதிலன் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தருவேன் என்று சொன்னது திமிர் கிடையாது, அவர் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை. அந்த அளவுக்கு சிறப்பாக படம் வந்திருக்கிறது.

பாய்ஸ் மணிகண்டன் அவரின் சமீபத்திய பேட்டி ஒன்று பார்த்தேன். மாடர்ன் சாமியார் போல அவ்வளவு நம்பிக்கையாக பேசியிருந்தார். அவர் இன்னும் நிறைய உயரம் அடைய வேண்டும். அனுராக் சாரின் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆனால் இந்த படத்திற்காக அவர் செய்த வேலை மிக பெரியது.

நானும் அவரும் இணைந்து இன்னும் நிறைய படங்கள் பணிபுரிய வேண்டும் என விருப்பம்” என்றார்.

Vijaysethupathi speaks about his growth upto 50th movie Maharaja

More Articles
Follows