தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் 50 நாட்களாக வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தது. எனவே எந்த படத்தின் சூட்டிங் நடக்காமல் இருந்தது.
தற்போது ஸ்டிரைக் நிறைவு பெற்றதால், பெரும்பாலான படத்தின் சூட்டிங்குகள் தொடங்கிவிட்டன.
சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தின் 2ஆம் கட்டப் படப்பிடிப்பை இன்று சென்னையில் துவங்கியிருக்கிறார் செல்வராகவன்.
இதில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்கும் கலந்துக் கொண்டுள்ளார் என்பதை அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மற்றொரு நாயகியாக சாய் பல்லவி நடிக்க, வில்லனாக ஜெகபதிபாபு நடிக்கிறார்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.