தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக காவல்துறையை போற்றியும் கழுவி ஊற்றியும் நிறைய படங்கள் தமிழ் சினிமாவில் இடம் பெற்றுள்ளன.
பெரும்பாலும் ஹீரோ போலீசாக இருந்தால் அந்த படத்தில் காவலர்களை நல்லவர்களாக காட்டியிருப்பார்கள். ஒருவேளை வில்லன் போலீசாக இருந்தால் அந்த படத்தில் காவலர்களை மிக மோசமாக காட்டியிருப்பார்கள்.
சில வருடங்கள் முன் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.
இதில் காவலர்களை நேர்மையாளர்களாக காட்டியிருந்தார் வினோத்.
இந்த படத்தில் பவாரியா கொள்ளை சம்பவ வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீசாக நடித்திருத்தார் கார்த்தி.
இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். தமிழக முன்னாள் டிஜிபி ஆன எஸ்.ஆர்.ஜாங்கிட் தான் இந்த உண்மை கதைக்கு காரணமாக அமைந்தவர். இவர் காவல்துறையில் பணியாற்றிய போது குற்றவாளிகளுக்கு சிம்மசொப்பனாக இருந்தார். இவரது பணியை மக்கள் பலரும் பாராட்டினர்.
இந்த நிலையில் தற்போது ஆன எஸ்.ஆர்.ஜாங்கிட் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கியுள்ளார்.
விமல், தன்யா ஹோப் நடிப்பில் உருவாகி வரும் ‛குலசாமி’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஜாங்கிட்.
இந்த படத்தை ‛குட்டிப்புலி’ புகழ் ஷரவணஷக்தி இயக்க நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார்.
குலசாமி பட மோசன் போஸ்டர் நேற்று வெளியானது. அதை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, தான் நடிப்பதை தெரிவித்துள்ளார் ஜாங்கிட்.
விரைவில் தமிழர்களுக்கு தரிசனம் தருவார் குலசாமி.
Theeran Adhigaram Ondru real hero turns reel hero