தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா தயாரித்து நடித்த படம் ‘ஜெய் பீம்’ இந்த படத்தை கொரோனா லாக்டவுன் சமயத்தில் வெளியான இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
மிகப்பெரிய வரவேற்பு பெற்று பல சர்ச்சைகளை உண்டாக்கியது. ஒரு பக்கம் ஜெய் பீம் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்த நிலையில் சில சாதிய அமைப்புகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த திரைப்படம் ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துருவின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் எடுக்கப்பட்டிருந்தது.
1990 களில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு போலீஸ் விசாரணையை மையப்படுத்தி (இருளர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராசாகண்ணு – பார்வதி) இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் மூலம் இந்த வழக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜெய் பீம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது…
“‘ஜெய்பீம்’ எனக்கு பல படிப்பினைகளைக் கொடுத்துள்ளது. படம் வெளியான பிறகு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல மாணவர்களுடன் பேச எனக்கு வாய்ப்பு கிட்டியது.” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு.
கூடுதல் தகவல்..
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Jaibhim 2 update by Ex Judge Chandru