தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இறுதிச்சுற்று என பெயர் வைத்ததால், அப்படமே மாதவனுக்கு இறுதிச்சுற்றாய் அமையும் என கோலிவுட் செண்டிமென்டர்கள் சொன்னார்கள்.
ஆனால், அது மாதவனின் இரண்டாவது சுற்றுக்கு ஆரம்பமானது.
தற்போது புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் மாதவன்.
இதனையடுத்து கரு. பழனியப்பன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
இதில் முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனின் தாத்தாவாக நடித்து, ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தார் ராஜ்கிரண் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.