நடிகர் மாதவன் இயக்கத்தில் இணைந்த ஷாரூக்கான் & சூர்யா

நடிகர் மாதவன் இயக்கத்தில் இணைந்த ஷாரூக்கான் & சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-2000களில் சாக்லேட் பாயாக ரசிகைகளால் கொண்டாடப்பட்டவர் நடிகர் மாதவன்.

அவரை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படம் ‘இறுதிச்சுற்று’. தானே படத்தை தயாரித்து ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அதன்பின்னர் விக்ரம் வேதா உள்ளிட்ட ஆக்‌ஷன் படங்களிலும் நடித்தார்.

தற்போது இயக்குனராக உருவாகியுள்ளார்.

மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்’ . முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில் அவர் விலகவே மாதவனே இயக்குகிறார்.

நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார்.

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்.

பின்னர் அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் சிம்ரன், ரஜத்கபூர், ரவிராகவேந்திரா, மிசா கோசல் ஆகியோர் நடிகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் & நடிகர் சூர்யா இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.

‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படம் ஜூலை 1-ம் தேதி தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Suriya and Shah Rukh Khan joins for Madhavan’s next ?

இளையராஜா இசையமைத்த ஆங்கில படத்திற்கு விருது.; எல்லையில்லா ராஜா நீ..!

இளையராஜா இசையமைத்த ஆங்கில படத்திற்கு விருது.; எல்லையில்லா ராஜா நீ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜாவின் இசைக்கு மயங்காத இந்தியர்களே இல்லை எனலாம். 45 வருடங்களுக்கு மேலாக இந்திய திரையுலகில் தன் இசை சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் இசைஞானி்.

இந்த நிலையில் ‘ஏ பியூட்டிபுல் பிரேக் அப்’ என்ற ஆங்கில படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் இளையராஜா.

இப்படத்தை இங்கிலாந்தை சேர்ந்த எஸ். நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் AIFF நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இந்த படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு விருது வழங்கப்பட்டது.

இதில் க்ரிஷ் மற்றும் மட்டில்டா ஆகியோர் நடித்துள்ளனர். அஜித்வாசன் உக்கினா இயக்க கே.குணசேகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Ilaiyaraaja wins award at AIFF film festival

பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார் சீமான்.; பதறிய நாம் தமிழர் தம்பிகள்

பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார் சீமான்.; பதறிய நாம் தமிழர் தம்பிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை திருவொற்றியூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் சீமான்.

அங்கு ஏராளமான நாம் தமிழர் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் பங்கேற்று இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த சீமான் திடீரென மயங்கி கீழே விழுந்தார் .

எனவே நாம் தமிழர் தம்பிகள் பதறியடித்து கொண்டு 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர்.

108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் சீமான்.

பின்னர் சிகிச்சை முடிந்து சிறிது நேரத்தில் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கோடை வெயில் காரணமாக dehydration னால் அவர் மயங்கி விழுந்ததாக அவரின் பிஆர்ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTK leader Seeman faints during an interaction with the press in Chennai

திருமணத்திற்கு வாழ்த்தியவர்களை முட்டாள்கள் ஆக்கிய யாஷிகா.; இதெல்லாம் ஓவரா இல்ல..

திருமணத்திற்கு வாழ்த்தியவர்களை முட்டாள்கள் ஆக்கிய யாஷிகா.; இதெல்லாம் ஓவரா இல்ல..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதன் பின்னர் சில படங்களில் நடித்தாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் யாஷிகா.

2021ல் கடந்தாண்டு கார் விபத்தில் தனது தோழியை பறிக்கொடுத்தவர்.

யாஷிகாவுக்கு காலில் பலத்த அடிபட்டு நடக்கவே முடியாமல் பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார் யாஷிகா.

பல போட்டோஷூட்களில் கலந்துக் கொண்டு தன் வழக்கமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 1ல் தான் திருமணம் செய்ய போவதாக கூறி.. “என் பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இது செட்டிலாகும் நேரம்.

சினிமாவை விட்டு விலக மாட்டேன். எப்போதும் உங்களை மகிழ்விப்பேன். காதல் செட் ஆகாது, இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். அனைவரின் ஆசீர்வாதம் தேவை” என பதிவிட்டார் யாஷிகா

எனவே ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் சில மணிநேரங்களில் ‛‛எனக்கு திருமண வாழ்த்து சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் செய்ய போவதில்லை” என்றார் யாஷிகா.

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்துள்ளார் யாஷிகா.

ஆனால் யாஷிகாவின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

அட… வாழ்த்து சொன்னது குத்தமா.?

Yashika Anand announces wedding on April Fools Day

ரசிகர்களுடன் ‘செல்ஃபி’ பார்த்து செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ் & வர்ஷா

ரசிகர்களுடன் ‘செல்ஃபி’ பார்த்து செல்ஃபி எடுத்த ஜி.வி.பிரகாஷ் & வர்ஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி.

இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் 1ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியானது.

இதைத்தொடர்ந்து செல்பி திரைப்படத்தை நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை வர்ஷா பொல்லம்மா, இயக்குனர் மதிமாறன், நடிகர் டி ஜி குணாநிதி மற்றும் தயாரிப்பாளர் டி.சபரீஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர்.

படத்தின் இடைவேளையில் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

GV Prakash and Varsha Bollamma watched Selfie with fans

‘விருமன்’ நாயகி அதிதி ஷங்கருக்கு திருமணம்.? குஞ்சுமோனிடம் கொடுத்த அழைப்பிதழால் ரசிகர்கள் குழப்பம்

‘விருமன்’ நாயகி அதிதி ஷங்கருக்கு திருமணம்.? குஞ்சுமோனிடம் கொடுத்த அழைப்பிதழால் ரசிகர்கள் குழப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரு மகள்களும், ஆர்ஜித் என்ற மகனும் உள்ளனர்.

2வது மகள் டாக்டர். தற்போது கார்த்தியுடன் விருமன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளார்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்தாண்டு 2021ல் ஜூனில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை சந்தித்து தன் மகள் திருமண வரவேற்பிற்கு அழைத்திருந்தார் ஷங்கர்.

எனவே ஷங்கரின் 2வது மகளுக்கு தான் திருமணம் என்ற செய்திகள் பரவியது.

கொரோனா காலக்கட்டத்தில் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றதால் வெகு சிலரை மட்டுமே அப்போது அழைத்திருந்தனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார். அப்போது திருமண வரவேற்பு நடத்த முடியாத சூழ்நிலையால் தற்போது திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளார் ஷங்கர் என தெரிய வந்துள்ளது.

Will director Shankar’s daughter and Aditi Shankar get married this May?

More Articles
Follows