பணத்திற்காக அலையும் உறவுகளை சொல்ல வரும் பிளாக் காமெடி ‘உடன்பால்’

பணத்திற்காக அலையும் உறவுகளை சொல்ல வரும் பிளாக் காமெடி ‘உடன்பால்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் சார்லி நடிப்பில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்துள்ளது. பார்வையாளர்கள் பெரும் கரகோஷம் எழுப்பிப் படக்குழுவினரை வாழ்த்தினர்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, 21 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன.

1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர்.

இவ்விழாவில் தமிழிலிருந்து சிறந்த படப்போட்டித் தேர்வில் 12 அற்புதமான படைப்புகள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் “உடன்பால்” படம் திரையிடப்பட்டது.

இந்த திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன், நடிகர் சார்லி, நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோருடன், ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உட்படத் தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லிய இந்த திரைப்படம் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இத்திரையிடலின் போது ரசிகர்கள் பெரும் கரகோஷத்துடன் எழுந்து நின்று படக்குழுவினரைப் பாராட்டினர்.

மேலும் படக்குழுவினருடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து உற்சாகப்படுத்தினர். படக்குழுவினர் ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நன்றியினை தெரிவித்தனர்.

விமர்சகர்கள், ரசிகர்கள், திரை ஆர்வலர்கள் என அனைவரது பாராட்டுக்களைக் குவித்த இப்படம், ஆஹா தமிழ் தளத்தில் ஓடிடித் தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.

உடன்பால்

Udanpaal movie deals with money minded relatives

இலங்கையில் இசை ராஜ்யம் நடத்தும் மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ்

இலங்கையில் இசை ராஜ்யம் நடத்தும் மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்கள் இன்று டிசம்பர் 17ல் பிறந்தநாள் காணும் இலங்கையின் மூத்த கலைஞர்.
ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்கள் ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார்.

இசையை தனது வாழ்க்கையாக்கியவர் இன்றும் இசையோடு பயணம் செய்கிறார்.

வாழ்ந்தால் இசையோடு தான் என்று தனது வாழ்க்கையைப் பற்றியே பாடல் இயற்றி இசையமைத்து பாடியவர் தனக்கென ஒரு சங்கீத சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.

1968 களில் இலங்கையின் முதல் இசைத் தட்டுகளை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

எமது இலங்கை கலைஞர்களும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தியவர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்கள். இசையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அற்புத கலைஞர்.

எம்பி பரமேஷ் அவர்கள் இசைத்தட்டுகளை வெளியிடுவதற்கு முன் மேடை நிகழ்ச்சிகள் செய்து புகழ்பெற்றவர்.

பாடல் எழுதுவது, இசையமைப்பது, விளம்பர வேலைகள் என பொறுப்புக்கள் அதிகமானதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இசை பயணத்தை தொடர்ந்தார்.

காதல் ஒரு நல்ல கலைஞனை உருவாக்கும் என்பதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு எம்பி பரமேஷ் அவர்கள் தான். காதலித்த பெண்ணிடம் தன் காதலை சொல்ல அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் இசை.

அந்த காதலும் இசையும் தான் இன்னும் அவரை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

சங்கீத பூசனம் சிவமாலினி மீது எம்பி பரமேஷ் அவர்கள் வைத்த காதல்தான் “உனக்கு தெரியுமா…நான் உன்னை நினைப்பது…”என்ற பாடல் உருவாக காரணமாக இருந்தது. சிவமாலினி அவர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சங்கீதம் படித்துக் கொண்டிருந்த காலம்.

எம்.பி. பரமேஷ் அவர்கள் இந்த பாடலை இலங்கை வானொலி ஒளிபரப்பு செய்து தன் காதலை மாலினி காதில் விழ வைத்தார். பாடல்கள் தமிழர்கள் வாழும் சகல இடங்களிலும் ஒழித்தது.

இந்த பாடல் இலங்கையின் இசை வரலாற்றில் அழிக்க முடியாத சாதனை படைக்க காரணமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அன்றைய காதலர்களின் தேசிய கீதம் “உனக்கு தெரியுமா…நான் உன்னை நினைப்பது…”என்ற பாடல் தான்.

மக்கள் மனதை கொள்ளை அடித்த அந்த பாடல் சங்கீத பரம்பரையில் வந்த சங்கீத பூஷனம் மாலினி அவர்கள் மனதை மயக்காமலா? இருந்திருக்கும் இசையோடு இசை சேர்ந்தது.

எம்பி பரமேஷ்

ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஸ் அவர்கள் தொடர்ந்து இசையமைத்து சாதனை படைத்த பாடல்கள்:
1. உனக்கு தெரியுமா…உன்னை நினைத்தது…?
2. ⁠ நீ இன்றி நிலவு…
3. ⁠போகாதே தூரம் போகாதே…
4. ⁠நீ வாழுமிடமெங்கே…
5. ⁠மனமாளிகை ரோஜா…
6. ⁠எழுதுகிறேன் பாட்டு…
7. ⁠அழைக்கும் ஓசை கேட்கலையா…
8. ⁠பாடலெனக்கிது முதல் தரம் தான்…
என்ற பாடல்களை எழுதி இசையமைத்து பாடினார்.

இந்த எட்டு பாடலையும் மூன்று இசை தட்டுகளில் வெளியிட்டார். அதில் அந்த இசைத் தட்டுகள் மிகப் பெரிய சாதனைகள் படைத்தன. இதில் சிங்கள மொழியிலும் மொழிமாற்றம் செய்து இசைத் தட்டுகளை வெளியிட்டார்.

சிங்கள மொழிகளும் மிகச் சிறந்த வரவேற்பு பெற்ற பாடல்கள்:
1. உனக்கு தெரியுமா உன்னை நினைத்தது…/ Thigu Neela asthekai..
2. ⁠மன மாளிகை ரோஜா / Thura are athithe…
3. ⁠அலைக்கும் ஓசை கேட்கலையா…/ Sulanga selavan
4. ⁠பாடலெனக்கிது முதல் தரம்…/ Agasevan…

என்று ஒரு இசையமைப்பாளர் பாடகர் கவிஞர் என்பதையும் தாண்டி அந்த காலத்தில் வெளியிட்ட இசைத்தட்டுக்கள் இணையதளம் மற்றும் எந்த ஒரு சோஷியல் மீடியாவும் இல்லாத காலத்தில் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தார்.

அவரது புகழ் இந்தியா முழுவதும் ஒலித்து சாதனை படைத்தது.

இலங்கையில் 30 வருட போரில் மக்கள் உயிர்களையும் உடைமைகளையும் மட்டும் இழக்கவில்லை படைப்புகளையும் உணர்வுகளையும் இழந்து விட்டனர்.

1986 இல் ஜெர்மனிக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்த எம்பி பரமேஷ் சிவமாலினி அவர்கள் இசையையும் தனது படைப்புகளையும் கைவிடவில்லை. 2000-ஆண்டு இறைவனைடி சேர்ந்த தன் காதல் மனைவி மாலினி அவர்களின் நினைவுகளோடும், இசையோடும் வாழ்ந்து வருகிறார் எம்.பி. பரமேஷ் அவர்கள்.

பல விருதுகளைப் பெற்ற எம்பி பரமேஸ் அவர்கள் 2019ல் ஜெர்மனியில் வெளிவரும் வெற்றி மணி என்ற தமிழ் பத்திரிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் மற்றும் கனடாவில் வெளியாகும் தமிழ் மிரர் (Tamil Mirror-Canada) பத்திரிக்கையின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைக்கப் பெற்றார்.

எம்பி பரமேஷ் மாலினி தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள். அனைவரும் இசையில் ஆர்வம் உள்ளவர்கள். அவர்களின் மூத்த மகள் ஈழத்து மெல்லிசைக் குயில் பிரபலனி பிரபாகரன்அவர்கள். அப்பாவின் பெயர் சொல்லும் பிள்ளையாக இசைத் துறையில் சாதனை படைத்து வருகிறார். அப்பாவின் இசைப் பணியை தொடர்ந்து செய்ய உறுதுணையாக இருக்கிறார்.

இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் பிரபலானி பிரபாகரன்.

எம்.பி.பரமேஸ், சிவமாலினி தம்பதிகளின் இசை வாரிசு பிரபலனி பிரபாகரன். இந்தியாவில் 2016 ஆம் ஆண்டின் முதல் ஈழத் தமிழ் மகளாக எடிசன் விருது பெற்ற பெருமைக்குரியவர். 2020 ஆம் ஆண்டு எம்.பி. பரமேஸ் அவர்கள் தனது இசை வாழ்வின் கோல்டன் ஜூபிலி விழாவை கொண்டாடினார்.

2000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து தயாராக வைத்திருக்கிறார். அதில் சில நூறு பாடல்கள் பதிவு செய்தும், மீள் பதிவு செய்தும் வருடா வருடம் வெளியிடுகிறார்.

2024 இல் இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பாடல்களாக எழுதி இசையமைத்து வெளியிடும் பணியில் உள்ளார். அந்த பாடல்களும் இலங்கையில் சாதனை படைக்கப் போவது நிச்சயம். ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்களின் பாடல்களை iTunes, sportify, மற்றும்
www.mppramesh.com என்ற இணையதளம் மூலமாகவும் கேட்டு ரசிக்கலாம்.

எம்பி பரமேஷ் அவர்களின் இசைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

இன்று பிறந்தநாள் காணும் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்பி பரமேஷ் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க பல்லாண்டு…தொடரட்டும் இசைப் பயணம்…

எம்பி பரமேஷ்

Srilankan Musician MP Paramesh music records

‘The Kashmir Files’ & ‘The Kerala Story’ வரிசையில் BHAI.?

‘The Kashmir Files’ & ‘The Kerala Story’ வரிசையில் BHAI.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாய் – Sleeper Cell Trailer இணையதளத்தில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

பாய் – Sleeper Cell = இஸ்லாமியர்களை குறி வைக்கும் படமா?

பாய் – Sleeper Cell Trailer வசனங்கள் மற்றும் காட்சிகள் சர்ச்சை.

கோவை வெடிவிபத்தை பேசும் படமா இந்த பாய் – Sleeper Cell?

மூன்று இடங்களில் bomb blast உறுதி என்ற வசனத்தைக் கொண்டு Church மற்றும் கோவில் visual – உடன் trailer ஆரம்பம் ஆகிறது.

எங்க பாய் சொல்வார் மதம் ஒரு அரசியல் கருவி என்ற வசனம் (அப்பொழுது மூன்று மதங்களின் பெயர் paper – ல் எழுதியிருப்பது )

நான் மதம் மாறனுமா?

இஸ்லாமிய பெண் தொழுகும்போது மூன்று பேர் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டு இருப்பது.

பிடித்த பெண்ணை கல்யாணம் செய்ய மதம் மாற்றம் போன்ற வசனங்களைக் கொண்டு விறுவிறுப்பான காட்சிகளுடன் Trailer சுவாரஸ்யமாக இருக்க இறுதியில் Maruthi car- ல் குண்டு வெடிப்பு அதில் 1998- ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பை சம்பந்தப்படுத்தி பேசியிருக்கும் வசனம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Maruthi car குண்டு வெடிப்பு சமீபத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பை நினைவூட்டுகிறது இது ஒருபுறம் இருக்க, ஒட்டு மொத்த உலகையுமே புரட்டி போட்ட கோவை 1998 குண்டு வெடிப்பு இந்த இரண்டு சம்பவத்தையும் இணைத்து உருவாகியிருக்கும் படமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது?

காஸ்மீர் files மற்றும் the kerala stories போன்ற சர்ச்சைக்குறிய படங்களின் வரிசையில் Bhai – Sleeper cell இருக்கும் என்ற பரவலான பேச்சும் மக்களிடையே வளம் வருகிறது.

இத்தனை சர்ச்சை கேள்விகள் இருந்தாலும்… Bhai – Sleeper Cell Trailer ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.பாய் – sleeper cell திரைப்படம் டிசம்பர் 28- ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

bhai movie Trailer is controversy

சபரீஷ் நந்தா இயக்கத்தில் ரஜினி ரீல் மகன் நடிக்கும் ‘இந்திரா’

சபரீஷ் நந்தா இயக்கத்தில் ரஜினி ரீல் மகன் நடிக்கும் ‘இந்திரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு “இந்திரா” என்று பெயரிட்டுள்ளனர்.

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஐரா’, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார்.

வசந்த் ரவி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார்.

மேலும் இவர்களுடன் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தற்போது இப்படத்திற்கு ‘இந்திரா’ என தலைப்பு வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு மகனாக வசந்த ரவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vasanth Ravi’s Indra movie first look poster released

‘விடாமுயற்சி’ சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த சம்பவம்.; வைரலாகும் படங்கள்

‘விடாமுயற்சி’ சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த சம்பவம்.; வைரலாகும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இவர்கள் இணையும் முதல் படம் இது.

இதில் அஜித்துடன் த்ரிஷா மற்றும் அர்ஜுன் இணைந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே ‘மங்காத்தா’ படத்தில் இணைந்திருந்தனர்.

இவர்கள் தற்போது இரண்டாவது முறையாக இணைகின்றனர். இதன் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது.

விடாமுயற்சி

இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு தளத்தில் அர்ஜுன் மற்றும் மகிழ்திருமேனி ஆகியோரை அழகாக போட்டோ எடுத்துள்ளார் நடிகர் அஜித்குமார்.

இந்த புகைப்படங்களை அவரது பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

எனவே தற்போது அஜித்தின் போட்டோகிராபி படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விடாமுயற்சி

Ajith photography stills goes viral from Vidamuyarchi spot

விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை.; LIC தலைப்பு மீது வழக்கு போடும் SS குமரன்

விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை.; LIC தலைப்பு மீது வழக்கு போடும் SS குமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி செட்டி இணைந்து நடிக்க உள்ள படம் எல்ஐசி.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கு எல்ஐசி என்று தலைப்பிட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் படத்தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ் எஸ் குமரன் தன் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

மதிப்பிற்குறிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

திரு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு L I C என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இதை அறிந்த திரு விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் திரு மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார்.

ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன்.

ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை திரு விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.

இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது.

அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.

LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை திரு விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.


SS குமரன்.

Ss Kumaran warns Vignesh shivan for LIC movie title

More Articles
Follows