தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி காய்ச்சல் வந்து போனாலும், அப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் மீடியாவை ஆக்ரமித்துள்ளன.
தமிழகத்தைப் போலவே கேரளா மற்றும் கர்நாடகாவில் நல்ல வசூலை குவித்து வருகிறது.
மேலும் வெளிநாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் வசூலை குவித்து வருவதாக அங்குள்ள பத்திரிகைகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன.
வெரைட்டி என்ற பத்திரிகை ஐந்து நாட்களில் மட்டும் ரூ. 248 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வாரவிடுமுறை நாட்களை கடந்த பின்னும் இன்னும் திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே படம் வெளியாகியுள்ளது.
இவ்வாரம் மலாய் மொழியில் வெளியாகவுள்ளதால் மலேசியாவில் அதிக வசூலை குவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இவையில்லாமல் இந்த வாரம் (ஜீலை 29) வெள்ளிக்கிழமை எந்த படமும் வெளியாகவில்லை. எனவே கபாலியின் வசூல் இன்னும் எகிறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படம் வெளியாகி ஆறு நாட்களில் வெளிநாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 118 கோடியை குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ 145 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு, தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…
கபாலி செய்துவரும் சாதனைகளை என் வாழ்வில் மறக்கமுடியாது. இந்த நூறாண்டுகளில் இந்திய சினிமா செய்த சாதனைகளை கபாலி முறியடித்து வருகிறார்.
முதல் மூன்று நாட்களில் அமெரிக்காவில் மட்டும் ரூ. 28 கோடியை எட்டியது.
மேலும் மற்ற நாடுகளிலும் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.