இந்தியர்கள் கசாப்பு கடை கோழிகள்.; கடுப்பான ‘காலா’ வில்லன் நானா படேகர்

இந்தியர்கள் கசாப்பு கடை கோழிகள்.; கடுப்பான ‘காலா’ வில்லன் நானா படேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் நானா பட்டேகர். இவர் தமிழில் பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ மற்றும் ‘காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனை மீது பாலியல் தொல்லை குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்…

இந்திய மக்கள் கசாப்பு கடையில் இருக்கும் கோழிகளைப் போன்றவர்கள். மற்ற கோழிகள் அறுக்கப்படும் பொழுது அதைப் பற்றி கவலைப்படாமல் கசாப்பு கடைக்காரன் கொடுக்கும் தீவனத்தை சந்தோசமாக தின்று கொண்டிருக்கும்.

அதன் முறை வரும்பொழுது கசாப்பு கடைக்காரன் சுடுதண்ணீரில் தூக்கி போடும் போது மட்டுமே கதறி துடிக்கும்.

முதலில் இஸ்லாமியர்கள், பின்னர் விவசாயிகள், இப்பொழுது மல்யுத்த வீராங்கனைகள். மக்கள் இதைப் பற்றி எதையுமே கவலை கொள்ளாமல் தீவனத்தை தின்று கொண்டிருக்கிறோம். நமது முறையும் வரும்…

என நானா படேகர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்…

சில ஆண்டுகளுக்கு முன்…

‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் விஷாலுடன் நடித்தவர் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர், ’ஹார்ன் ஓகே பிளீஸ்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மீ டூ ME TOO வில் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kaala villain Nana Patekar talks about protests

உண்மை சம்பவத்தை சொல்லும் படத்தில் ஹீரோவாகும் ‘பிக்பாஸ்’ புகழ் கதிரவன்

உண்மை சம்பவத்தை சொல்லும் படத்தில் ஹீரோவாகும் ‘பிக்பாஸ்’ புகழ் கதிரவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கூடு’ என்ற வித்தியாசமான தலைப்பில் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது.

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு இந்த படத்தை ஜோயல் விஜய் என்பவர் இயக்கி வருகிறார்.

இது பற்றிய தகவல்களை நாம் ஏற்கனவே நம் filmistreet தளத்தில் பார்த்து இருக்கிறோம்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் பிக் பாஸ் பிரபலம் விஜே கதிரவன் நாயகனாக இடம் பெற்றுள்ளார்.்அவரது போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Kathiravan of ‘Bigg Boss’ fame is the hero of the film which is based on a true story

புதிய நாடாளுமன்ற செங்கோல்.: சங்கீ என கலாய்த்தவர்களுக்கு சீனு ராமசாமி பதிலடி

புதிய நாடாளுமன்ற செங்கோல்.: சங்கீ என கலாய்த்தவர்களுக்கு சீனு ராமசாமி பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் இந்த கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார் பிரதமர்.

இதில் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் மோடி நிறுவினார்.

இதனையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி கடந்த 28ஆம் தேதி, “தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர். பெரிய விசயம்” என பதிவிட்டு இருந்தார்.

இதனால் சீனு ராமசாமியை சில நெட்டிசன்கள் சங்கி எனவும் மோடி ஆதரவாளர் எனவும் கமெண்ட்களால் கலாய்த்து வந்தனர்.

எனவே மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி. அந்த பதிவில்…

நான் சங்கியுமல்ல, அங்கியுமல்ல, லுங்கியுமல்ல, டர்பன்னும் அல்ல, நீலவான் அல்ல. மேலும் தமிழ் தேசியம், திராவிடம், இன்னபிற ஜாதியம் இப்படி எல்லையில்லா உலகில் உள்ள அனைத்து பிரிவினர்களிடமும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைக்கு குரல் தரும் சாமான்யன். ‘எல்லோரையும் குளித்து வரச்சொன்னாயே நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய்’ என எழுதி வள்ளுவத்துக்கு விளக்கவுரை தந்து வான் உயர சிலை வைத்த முத்தமிழறிஞரின் தமிழ் நேசன். ”

என பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.

netizens abuse seenu ramasamy for praising modi

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் உலக நாயகன்.; இதுவரை கமல் வாங்காத சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளர்

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் உலக நாயகன்.; இதுவரை கமல் வாங்காத சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக சினிமாவே போற்றும் ஓர் உன்னத கலைஞர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் சினிமாவில் ஏற்காத வேடமில்லை.. பார்க்காத தொழிலில்லை என்றே கூறலாம்.

எந்த வேடத்தையும் அர்ப்பணிப்புடன் செய்பவர் கமல்ஹாசன். 230+க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்து வந்த கமல் தற்போது வேறு ஒரு நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பிரபாஸ், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ப்ராஜெக்ட் கே’.

இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க அஸ்வின் தத் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.

இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்படாத பட்ஜெட் இந்த படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு 12.01.2024 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கமல் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக 3 வாரங்கள் கமல் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக கமலின் சம்பளம் மட்டும் 150 கோடி எனக் கூறப்படுகிறது.

Kamal Haasan plays baddie in super star film

நிறைய அடி வாங்கி இருக்கேன்.; நானே என்னை பாராட்டி கொண்டேன் – ‘டக்கர்’ சித்தார்த்

நிறைய அடி வாங்கி இருக்கேன்.; நானே என்னை பாராட்டி கொண்டேன் – ‘டக்கர்’ சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் தயாரித்த திரைப்படம் ‘டக்கர்’.

கார்த்திக் ஜி கிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த், திவ்யா ஷான், யோகி பாபு, அபிமன்யு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று மே 30ஆம் தேதி செய்தியாளர்களை படக்குழுவினர் சென்னை பிரசாத் லேபில் சந்தித்தனர்.

டக்கர்

அப்போது நடிகர் சித்தார்த்த பேசும் போது…

“கொரோனா காலகட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

பெரும்பாலும் என்னிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் ஐந்து ஃபைட் இருக்கு என்பார்கள். ஆனால் ஷூட்டிங் செல்ல செல்ல இரண்டு பைட் மூன்று பாடல் மட்டுமே இருக்கும்.

ஆனால் இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் கதை சொல்லும் போது ஐந்து ஃபைட் நிச்சயம் இடம்பெறும். இது முழுக்க ஆக்ஷன் திரைப்படம் என்றார்.

ஒரு கோபக்கார இளைஞனின் கதைதான் இந்த படம். ஒரு இளைஞனுக்கு எதற்கு கோபம் வர வேண்டும்? அவன் பணக்காரன் ஆக வேண்டும் என நினைப்பான். ஆனால் ஆக முடியவில்லை. இதனால் அவன் கோபம் அதிகரிக்கிறது.

இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள திவ்யா இந்த படத்திற்கு பிறகு பெரும் பெயரை பெறுவார். அவர் டக்கர் டீசரில் பேசிய வசனம் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

டக்கர்

யோகி பாபு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த படத்தில் அவரது காமெடி பெரிய அளவில் பேசப்படும். தற்போது சினிமாவை தவிர பலவிதமான பொழுதுபோக்குகள் மக்களுக்கு உள்ளன.

அதன் இடையில் இந்த படத்தின் பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது.

திரையரங்குகளில் ஜூன் 9ஆம் தேதி டக்கர் படம் ரிலீஸ் ஆகிறது. டக்கர் என்றால் சூப்பர். டாப் டக்கர் என்றால் ரொம்ப சூப்பர் என்பார்கள். இந்தப் படத்தில் டக்கர் என்பது மோதலை குறிக்கும் சொல்லாகும்.

இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக நிறைய அடி வாங்கி இருக்கிறேன். ஒரு கட்டத்தில் என்னுடைய காட்சிகளை பார்க்கும்போது நானே என்னை பாராட்டி கொண்டேன். எனக்கே வியப்பாக இருந்தது”

இவ்வாறு பேசினார் நடிகர் சித்தார்த்.

டக்கர்

I appreciates myself says Siddharth at Takkar Trailer Launch

இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்.; ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டிரைலருக்கு ரஜினி பாராட்டு

இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்.; ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டிரைலருக்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள “காவி ஆவி நடுவுல தேவி” படத்தின் டிரெய்லரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், “இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்” என்று பாராட்டு தெரிவித்து வெளியிட்டார்.

ரஜினிகாந்த் அருகில் வி.சி.குகநாதன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன், பிலிம்சேம்பர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி எடிட்டர் மார்ட்டின் ஆகியோர் உள்ளனர்.

rajinikanth released ‘kaavi aavi naduvula devi’ movie trailer

More Articles
Follows