தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட்டில் பிரபலமான நடிகர் நானா பட்டேகர். இவர் தமிழில் பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ மற்றும் ‘காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனை மீது பாலியல் தொல்லை குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில்…
இந்திய மக்கள் கசாப்பு கடையில் இருக்கும் கோழிகளைப் போன்றவர்கள். மற்ற கோழிகள் அறுக்கப்படும் பொழுது அதைப் பற்றி கவலைப்படாமல் கசாப்பு கடைக்காரன் கொடுக்கும் தீவனத்தை சந்தோசமாக தின்று கொண்டிருக்கும்.
அதன் முறை வரும்பொழுது கசாப்பு கடைக்காரன் சுடுதண்ணீரில் தூக்கி போடும் போது மட்டுமே கதறி துடிக்கும்.
முதலில் இஸ்லாமியர்கள், பின்னர் விவசாயிகள், இப்பொழுது மல்யுத்த வீராங்கனைகள். மக்கள் இதைப் பற்றி எதையுமே கவலை கொள்ளாமல் தீவனத்தை தின்று கொண்டிருக்கிறோம். நமது முறையும் வரும்…
என நானா படேகர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்…
சில ஆண்டுகளுக்கு முன்…
‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் விஷாலுடன் நடித்தவர் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர், ’ஹார்ன் ஓகே பிளீஸ்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மீ டூ ME TOO வில் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kaala villain Nana Patekar talks about protests