தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி ரிலீசானது.
இப்படத்தின் வெற்றியாலும் கொரோனா காலத்தில் தன்னை படப்பிடிப்பில் நன்றாக கவனித்துக் கொண்டமையாலும் இயக்குனர் சிவாவுக்கு அவரது வீட்டிற்கே சென்று தங்க செயின் கொடுத்து பாராட்டினார் ரஜினிகாந்த்.
இதனைடுத்து கடந்த டிசம்பர் 23ஆம் தேதி ‘அண்ணாத்த’ பட 50-வது நாள் வெற்றி விழாவையொட்டி அப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை தனக்கு சொந்தமான சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு அழைத்து பாராட்டி வாழ்த்தியிருந்தார் ரஜினி.
இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் வெற்றி, படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட 50 பேருக்கு தங்க செயின் கொடுத்து பாராட்டினாராம் ரஜினி.
அப்போது ரஜினி பேசும்போது…
‘அண்ணாத்த’ படம் ஓடிடி நெட்ஃபிளிக்ஸ்’-ல் ரிலீசான பிறகும் சில தியேட்டர்களில் 50 நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஹிந்தியில் மிகப் பெரிய வெற்றியை அண்ணாத்த பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளதாக படக்குழுவினரிடம் ரஜினி பேசினாராம்..
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்வி கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.
தமிழில் ஹிட் படங்களை கொடுத்த பல இயக்குனர்களிடம் கதை கேட்டு இருக்கிறாராம் ரஜினி.
தற்போது இயக்குனர்கள் வரிசையில்.. தேசிங்கு பெரியசாமி, பாண்டிராஜ், வெங்கட் பிரபு, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.
இவர்களுடன் பிரபல ஹிந்தி இயக்குனர் (தமிழரான) பால்கியும் இணைந்திருக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த இயக்குனர்களை அழைத்து ரஜினியே கதை கேட்டு வருகிறார். இவர்கள் எல்லாம் சின்ன ஹிட் படங்களை கொடுத்தவர்கள்.
ஆனால் இந்திய சினிமாவையே தன் சூப்பர் ஹிட் படங்களால் மிரள வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. அவர் கொடுக்காத ஹிட் படங்களே இல்லை எனலாம்.
அவரும் ரஜினியை இயக்க காத்திருப்பதாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
சமீபத்தில் வடஇந்தியாவில் நடைபெற்ற ஆர்ஆர்ஆர் பட புரோமோசன் நிகழ்ச்சியில் கூட ரஜினியின் சிகரெட் ஸ்டைல் பற்றி சல்மான்கானிடம் பேசினார் ராஜமௌலி. அந்த வீடியோவும் இணையங்களில் வைரலாகி வருகிறது.
இப்படியாக தொடர்ந்து ரஜினி பற்றி பேசிக் கொண்டு இருக்கும் ஒரு பிரம்மாண்ட இயக்குனரிடம் ரஜினி கதை கேட்கலாமே…
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவை இயக்கவுள்ளார் ராஜமௌலி. ஒருவேளை ரஜினி கால்ஷீட் கிடைத்தால் ரஜினிக்காக வரமாட்டாரா ராஜமௌலி..? அல்லது மகேஷ்பாபு தான் ரஜினி படத்தை இயக்கிவிட்டு வாருங்கள் என சொல்லமாட்டாரா..?
ரஜினிகாந்த் – ராஜமௌலி இணைந்தால் அந்த படத்தின் மேக்கிங் எப்படி இருக்கும்..? வியாபாரம் எப்படி இருக்கும்? என யோசித்து பாருங்கள்..
உலக சினிமா ரசிகர்களிடையே ரஜினிக்கும் ராஜமௌலிக்கு மாஸ் மார்கெட் இருக்கும்போது இருவரும் இணையலாமே என்பதுதான் ரஜினி ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக உள்ளது என்றால் அது மிகையல்ல..
ரஜினியின் சமீபத்திய படங்கள் அண்ணாத்த, தர்பார்… காலா.. உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியிருக்கையில் ரஜினி-ராஜமௌலி இணைந்தால் அது ரஜினியின் சினிமா இமேஜை இன்னும் உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.
Fans wants Rajinikanth and Rajamouli combo in onscreen