தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜி.வி. பிரகாஷ் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
இப்படத்தில் மனீஷா யாதவின் பாட்டியாக பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று மரணமடைந்தார்.
இதுகுறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…
“சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ (AAA) படத்தை இயக்கிவருகிறேன்.
என்னுடைய இரண்டாவது படத்திலும் ஜோதி லட்சுமிக்கு ஒரு கேரக்டர் கொடுத்திருந்தேன்.
ஆனால் அவர் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்தார். அதற்குள் அவரை மரணம் தழுவிக் கொண்டது” என்று தெரிவித்தார்.
பின்குறிப்பு: ‘ராகம் தாளம் பல்லவி’ படத்தில் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, மாயா என்று மூன்று கவர்ச்சி நடிகைகளை ஒரே பாடலுக்கு நடனமாட வைத்தவர் டி. ராஜேந்தர்.
இதில் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.