Breaking ஜிவி.பிரகாஷ் & ஆதிக்ரவி இணையும் அடுத்த படத்தலைப்பு வெளியானது

Breaking ஜிவி.பிரகாஷ் & ஆதிக்ரவி இணையும் அடுத்த படத்தலைப்பு வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and Adhik Ravichandrean teams up again for Kadhalai Thedi Nithya Nandhaஜீ.வி.பிரகாஷ், ஆனந்தி, மனீஷா யாதவ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’.

2015-ம் ஆண்டு ரிலீஸான இப்படத்தை பிட்டு படம் ரேஞ்சுக்கு அனைவரும் திட்டி தீர்த்தார்கள்.

படத்தில் ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததால் பலத்த எதிர்ப்பும் கிளம்பியது.

அதுவே இந்த படத்துக்கு விளம்பரமாகவும் இது மாபெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தை அடுத்து சிம்பு 3 வேடங்களில் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கியனார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம் படு தோல்வியை சந்தித்தது.

எனவே தற்போது மீண்டும் ஜிவி. பிரகாஷ் உடன் கூட்டணி அமைத்துள்ளார் ஆதிக்.

இந்தப் படத்துக்கு ‘காதலை தேடி நித்யா நந்தா’ எனத் தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் அமைரா தஸ்தூர் ஹீரோயினாக நடிக்க, சோனியா அகர்வால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இப்பட போஸ்டரில் ஜிவி பிரகாஷின் தோற்றத்தை பார்க்கும்போது பேய் லுக்கில் கண்கள் இல்லாமல் வெறித்தனமாக நிற்கிறார்.

இதுவரை 80% சூட்டிங் முடிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

GV Prakash and Adhik Ravichandrean teams up again for Kadhalai Thedi Nithya Nandha

Breaking யோகிபாபு அசத்தும் *கூர்கா* பட பர்ஸ்ட் லுக் ரிலீஸானது

Breaking யோகிபாபு அசத்தும் *கூர்கா* பட பர்ஸ்ட் லுக் ரிலீஸானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedian YogiBabu plays lead role in Gurkha first look releasedஜிவி.பிரகாஷ் நடித்த டார்லிங் மற்றும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன்.

தற்போது அதர்வா, ஹன்சிகா நடிப்பில் ‘100’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு படத்தை அவர் இயக்குவதாக வந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

ஆனால், ‘நான் ஹீரோ கிடையாது. ஒரு வெளிநாட்டுக்காரரும் நாயும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நான் படம் முழுக்கக் காமெடியனாக கூர்கா வேடத்தில் நடிக்கிறேன்’ என கூறியிருந்தார் யோகிபாபு.

இந்நிலையில், இன்று சற்றுமுன் ‘கூர்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அதில், யோகிபாபு அருகில் ஒரு நாய் ஒன்றும் நிற்கிறது.

கூர்கா கெட்டப்பில் காக்கி உடையில் அசத்தலாக இருக்கிறார் யோகிபாபு.

4 Monkeys Studio என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாக உள்ளதாக அந்த பர்ஸ்ட் லுக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comedian YogiBabu plays lead role in Gurkha first look released

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படத்தில் சிவகார்த்திகேயன்

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படத்தில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan plays lead role in short film directed by Thiruஅண்மையில் வெளியான மிஸ்டர் சந்திரமௌலி படத்தை இயக்கியிருந்தார் திரு.

இப்படத்தை அடுத்து இவர் ஒரு குறும்படத்தை இயக்குவதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

தற்போது இது தயாராகி விரைவில் வெளியாக உள்ளது.

இப்படம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளுக்கான விழிப்புணர்வை சொல்ல வருகிறாம்.

இதில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan plays lead role in short film directed by Thiru

வடிவேலுவுக்கு சான்ஸ் கொடுக்காதீங்க..; வரிந்துக் கட்டும் தயாரிப்பாளர்கள்

வடிவேலுவுக்கு சான்ஸ் கொடுக்காதீங்க..; வரிந்துக் கட்டும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadiveluஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு 2 வேடங்களில் நடித்து 2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.

இதனையடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே படக்குழுவினருடன் வடிவேலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அவர் சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இப்படியாக இந்த பிரச்சினை நீடித்து வந்தாலும் முடிவு ஏற்படவில்லை.

இறுதியாக இயக்குனர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர்.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கும் பிறகும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

தற்போது ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தற்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்துள்ளது.

இப்படத்துக்கு செலவழித்த 9 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சொன்னதற்கு, வடிவேலு தரப்பில் எந்த ஒரு பதிலுமே வரவில்லை.

எனவே இந்த படப்பிரச்சினையை முடியும் வரை, வடிவேலுக்கு எந்த தயாரிப்பாளரும் வாய்ப்பு தரக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் வாய்வழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தன் 100வது படத்தலைப்பை வரலட்சுமிக்கு விட்டுக் கொடுத்த கமல்

தன் 100வது படத்தலைப்பை வரலட்சுமிக்கு விட்டுக் கொடுத்த கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and varalaxmiநடிகர்களில் விஜய்சேதுபதி, ஜிவி. பிரகாஷ் இருவரும் கிட்டதட்ட 6,7 படங்களையாவது கையில் வைத்துள்ளனர்.

இவர்களைப் போல் நடிகைகளில் வரலட்சுமியும் கிட்டதட்ட 6 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’, `மாரி 2′, கன்னி ராசி, ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட படங்கள் தற்போது வரலட்சுமி கைவசம் உள்ளன.

இந்நிலையில் ஜே.கே. இயக்கத்தில் பார்வையற்றவராக வரலட்சுமி ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை பார்தோம்.

இப்படத்திற்கு ராஜபார்வை என்று தலைப்பு வைக்க விரும்பினர் படக்குழுவினர்.

இப்படத்தலைப்பானது கமலின் 100வது படமாகும்.

எனவே கமலின் அனுமதிக்காக காத்திருந்தனர்.

தற்போது இந்த தலைப்புக்கு கமல் ஓகே சொல்லிவிட்டாராம்.

எனவே விரைவில் இந்த தலைப்புடன் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட காத்திருக்கிறதாம்.

ஹீரோயின்ஸ்-நாய்-தயாரிப்பாளர்கள் பற்றி சர்ச்சை ட்வீட்; சந்தோஷ் சிவனால் கடுப்பான ஜேஎஸ்கே

ஹீரோயின்ஸ்-நாய்-தயாரிப்பாளர்கள் பற்றி சர்ச்சை ட்வீட்; சந்தோஷ் சிவனால் கடுப்பான ஜேஎஸ்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Captureரோஜா, தளபதி, இருவர், உயிரே உள்ளிட்ட மணிரத்னத்தின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன்.

தற்போது உருவாகியுள்ள ‘‘செக்கச் சிவந்த வானம்’’ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

12 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று தயாரிப்பாளர்கள் மத்தியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஒரு டிசைனை பதிவிட்டுள்ளார். அதில் இரண்டு நாய்கள் இடம்பெற்றுள்ளது. நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கும் போது தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆனால் மற்ற கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கடுப்பாக இருக்கிறார்கள் என்ற தோனியில் இரண்டு நாய் படங்கள் பதிவிட்டுள்ளார்.

இதற்குத் தயாரிப்பாளர்கள் சிலர் விமர்சனங்களையும் பதிவிட்டனர்.

தரமணி, அண்டாவ காணோம் படத்தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் இது குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

எனவே இந்த பிரச்சினை தயாரிப்பாளர்கள் சங்கம் வரை சென்றது.

இதனையடுத்து அந்த பதிவை சந்தோஷ் சிவன் தனது ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.

அதன் பிறகு அவர் தெரிவித்துள்ளதாவது…

‘‘நல்ல தயாரிப்பாளர்கள் பலருக்கு அந்தக் கருத்து ஆட்சேபனை தெரிவிக்கும் விதத்தில் இருந்ததால் அந்த டுவிட்டை நீக்கிவிட்டேன்.

நான் முன்பு தெரிவித்த கருத்து யாரையும் குறிப்பிட்டு வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows