சிஸ்டர்-ருக்காக இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் – யோகி பாபு – ரெடின் கிங்ஸ்லி

சிஸ்டர்-ருக்காக இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் – யோகி பாபு – ரெடின் கிங்ஸ்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dwarka Productions பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது.

திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர்.

கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது,

அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பெரும் பொருட்செலவில், அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான பொழுது போக்கு திரைப்படமாக, Dwarka Productions சார்பில், பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரப்பரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

சிஸ்டர்

கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்ப குழு..

தயாரிப்பு – பிளேஸ் கண்ணன் (Dwarka Productions)
எழுத்து இயக்கம் – ரா.சவரி முத்து
ஒளிப்பதிவு – தமிழ் A அழகன்
இசை – D இமான்
படத்தொகுப்பு – சரத் குமார்
கலை – சுரேஷ் கல்லேரி
சண்டை – சுகன்
நடனம் – ஷெரிப்
ஒப்பனை – சுரேஷ்
ஆடை வடிவமைப்பு – ஷேர் அலி
உடைகள் – ரமேஷ்
புகைப்படம் – அன்பு
நிர்வாக தயாரிப்பு – நிதின் கண்ணன்
தயாரிப்பு மேற்பார்வை – அழகர் குமரவேல்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
விளம்பர வடிவமைப்பு – சபா டிசைன்ஸ்

Aishwarya Rajesh new comedy thriller titled Sister

துரோகம் இழைத்த தினகரனை எதிர்த்து தோற்ற தொகுதியில் போட்டியிடுவேன்.. – மன்சூர் அலிகான்

துரோகம் இழைத்த தினகரனை எதிர்த்து தோற்ற தொகுதியில் போட்டியிடுவேன்.. – மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1999 இல் புதிய தமிழகம் சார்பில், கட்டைவண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வெற்றிபெற்றார்.

ஆனால் அந்த தாயை எப்படி ஒழித்தார்கள், எவ்வளவு கொடூரம் செய்தார்கள் என்று நாடறியும். நான் அம்மாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன்.

அவர்கள் குடும்பம் எத்தனை லட்சம் கோடி அடித்து உலையில் போட்டார்கள். எப்படி அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு, அவரிடம் நயவஞ்சகம் செய்து, மக்களுக்கு, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து ஆலமரமான, அன்பின் ஆண்டாளான, ”அம்மாவை வேரடி மண்ணோடு நாடகமாடி, ஆளுநர் உட்பட யாரையும் பார்க்கவிடாது மாய்த்த கொடுரத்தை எடுத்து சொல்ல, மக்களோடு மக்களாக நின்று 1999-ல், நான் தோற்ற அதே பெரியகுளம் தேனி மண்ணில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.

இது சத்தியம். எந்த ஆளான கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி, இந்தா வர்ரேன்டா!!!

—நடிகர் மன்சூர் அலிகான்

I will stand in election against TTV Dhinakaran says Mansoor Alikhan

நேர்வழியில் சம்பாதித்து முன்னேற நடிகர் ரமேஷ் அரவிந்த் எழுதிய புத்தகம்

நேர்வழியில் சம்பாதித்து முன்னேற நடிகர் ரமேஷ் அரவிந்த் எழுதிய புத்தகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த்*

‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் பரபரப்பாக விற்பனை ஆகிறது, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்*

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவரும் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவருமான ரமேஷ் அரவிந்த் ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளரும் கூட.

ரமேஷ் அரவிந்த்

கர்நாடகா முழுவதும் உள்ள பெருநிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டும் பேச்சுக்கள், பயிற்சிகளை வழங்கி வரும் ரமேஷ் அரவிந்த், கல்வி, வாழ்க்கை, பணி, மற்றும் தொழிலில் வெற்றி பெறுவது குறித்த புத்தகங்களையும் எழுதி வருகிறார்.

இந்த வரிசையில் இவர் எழுதியுள்ள ‘அன்புடன் ரமேஷ்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி சென்னை புத்தகக் கண்காட்சியில் தற்போது பரபரப்பாக விற்பனை ஆகி வருகிறது. சவன்னா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் அகநாழிகை அரங்குகளான 520 மற்றும் 521-ல் கிடைக்கும். மேலும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.

ரமேஷ் அரவிந்த் வழங்கிய ஊக்கமூட்டும் பேச்சுகளின் முக்கிய மற்றும் சுவாரஸ்யமான பகுதிகளின் தொகுப்பான இந்த புத்தகம், ‘ப்ரிதியிந்த ரமேஷ்’ என்ற பெயரில் கன்னடாவில் வெளியாகி ஆறே மாதங்களில் ஏழு பதிப்புகள் என பெரும் வெற்றி பெற்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பாகும். கே. நல்லதம்பி இதை சிறப்பான முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

AnbudanRamesh

புத்தகம் குறித்து பேசிய ரமேஷ் அரவிந்த்…

, “ஒருவர் வாழ்க்கையிலும் தொழில் அல்லது பணியிலும் வெற்றி பெற்று செல்வந்தராக உயர‌ 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும் என்று நம்பப்படுகிறது. ஆனால் சில மாற்றங்களை செயல்படுத்தி, வியூகங்கள் வகுத்து அதற்கு ஏற்ப உழைத்தால் 6 முதல் 8 ஆண்டுகளிலேயே இலக்குகளை அடைந்து விடலாம்.

இந்த மாற்றங்கள், வியூகங்கள் மற்றும் உழைப்பு குறித்தும், நேர்வழியில் விரைவில் வெற்றி பெறுவதற்கான சூட்சுமங்கள் குறித்தும் இந்த புத்தகத்தில் கூறியுள்ளேன்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நம்முடன் பணியாற்றுபவர்களையும் நமது குடும்பத்தினரையும் நமது சிறு செயல்கள் மூலமே உற்சாகப்படுத்தி விடலாம்.

இதன் மூலம் நமது பணியிடத்திலும், வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும். இது குறித்தும் எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களில் இருந்து எடுத்துரைத்துள்ளேன்,” என்று தெரிவித்தார்.

‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் திறமைகளை எப்போதும் உரிய முறையில் அங்கீகரிக்கும் தமிழக மக்கள் இந்த புத்தகத்தையும் வாங்கி, படித்து பாராட்டுவார்கள் என்று தான் நம்புவதாகவும் ரமேஷ் அரவிந்த் கூறினார்.

ரமேஷ் அரவிந்த்

Ramesh Aravind reaches out to the youth through a book

கேப்டனுக்கு நன்றிக்கடன்.; விஜயகாந்த் மகனோடு நடிக்க ரெடி.. – ராகவா லாரன்ஸ்

கேப்டனுக்கு நன்றிக்கடன்.; விஜயகாந்த் மகனோடு நடிக்க ரெடி.. – ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நண்பர்களுக்கு வணக்கம்..

நானும் எனது தாயாரும் மறைந்த நடிகர் தே.மு.தி.க தலைவர் புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு கடந்த திங்கள் கிழமையைன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு கேப்டன் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

அவர்களின் குடும்பத்தாரோடு உரையாடினேன் அப்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து கொண்டிருப்பது பற்றி என்னிடம் சொன்னார்கள்.

திரையுலகைச் சேர்ந்த நீங்கள் எல்லோரும் தான் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது.

விஜய்காந்த சார் திரையுலகிற்கு செய்யாத உதவிகளே இல்லை. மற்ற ஹீரோக்கள் படத்தில் கேமியோ கெஸ்ட் ரோல் எல்லாம் செய்வார். அவர் பல ஹீரோக்களை வளர்த்து விட்டிருக்கிறார்.

அவர் நடித்த கண்ணுபடப் போகுதையா படத்தில் மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு நான் கோரியோகிராபி செய்திருக்கிறேன் ரொம்பவும் அழகான நடனமாடினார்.

என்னையும் ரொம்ப என்கிரேஜ் செய்தார். அப்படிப்பட்டவரின் பையனுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

சண்முக பாண்டியன் நடிக்கும் படம் வெளியாகும் போது முழு வீச்சில் வரவேற்பு தர நானே இறங்கி அனைத்து விளம்பர பணிகளையும் செய்ய ஆசைப்படுகிறேன். அந்தப்படக்குழு விருப்பப்பட்டால் அவர்களோடு படத்தின் விளம்பர விழாக்களில் கலந்துகொள்வேன்.

திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோள் யாராவது நல்ல டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்கள் சண்முகப் பாண்டியனோடு இணைந்து நடிக்கத் தயாராகா இருக்கிறேன்.

இது அவரது குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை, அப்போது அவரது ஆத்மா சந்தோசப்படும். இது என் மனதிற்கு தோன்றியது. அவரது மூத்த மகன் பிரபாகரன் அரசியலில் இருக்கிறார் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள். இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.
நன்றி

அன்புடன்
ராகவா லாரன்ஸ்

I wish to help Vijayakanth family says Raghava Lawrance

அயோத்தி ராமர் ஆலயத்திற்கு ரசிகர்கள் பணத்தை கொடுக்கும் ‘ஹனு-மான்’ படக்குழு

அயோத்தி ராமர் ஆலயத்திற்கு ரசிகர்கள் பணத்தை கொடுக்கும் ‘ஹனு-மான்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹனு-மான்’ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடும் ரசிகர்களிடமிருந்து.. அவர்கள் செலுத்திய டிக்கெட் கட்டண தொகையிலிருந்து ஐந்து ரூபாயை.. அயோத்தியில் எழுப்பப்பட்டு வரும் ராமர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்குகிறோம்’ என அப்படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பிற்கு ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி வரவேற்பும், நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஹனு-மான்’. இதில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், வினய் ராய், சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தாசரதி சிவேந்தரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌர ஹரி மற்றும் அனுதீப் தேவ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ஃபேன்டசி ஜானரில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார்.

ஸ்ரீமதி சைதன்யா இதனை வழங்குகிறார்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுதும் திரையரங்குகளில் ‘ஹனு-மான்’ வெளியாகிறது.

தமிழகம் முழுவதும் இந்த திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார்.

இந்நிலையில் படக் குழு தற்போது கொச்சி, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

இதில் ஒரு நிகழ்வாக ஹைதராபாத்தில் ஃபிரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில்…

” அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்றில் ஒரு மைல் கல் நிகழ்வாகும். இம்மாதம் 22 ஆம் தேதியன்று ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்திருக்கிறது.

இதில் நான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொள்வேன்.

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ‘ஹனு-மான்’ படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இப்படத்தினை காண்பதற்காக விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஐந்து ரூபாயை ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடையாக வழங்குகிறார்கள்.

இந்த செய்தியை படக் குழு சார்பாக நான் மகிழ்ச்சியுடன் இங்கு அறிவிக்கிறேன். மேலும் இத்தகைய உன்னதமான முடிவை எடுத்த ‘ஹனு-மான்’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ராமர் ஆலயம் கட்டுவதற்காக ‘ஹனு-மான்’ படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்து ஐந்து ரூபாயை நன்கொடையாக வழங்கும் ‘ஹனு-மான்’ படக்குழுவினரை திரையுலகினர் மட்டுமல்லாமல் ஆன்மீக அன்பர்களும் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.

Hanuman team donates amount for Ayothi Ramar temple

தமிழகத்தில் ஹிந்திக்கு தடையில்லை..; விஜய்சேதுபதி கருத்துக்கு பாஜக அண்ணாமலை பதில்

தமிழகத்தில் ஹிந்திக்கு தடையில்லை..; விஜய்சேதுபதி கருத்துக்கு பாஜக அண்ணாமலை பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ‘மேரி கிறிஸ்மஸ்’ படத்தில் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் தமிழகத்தில் ஹிந்தி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது ஹிந்தியை திணிக்க கூடாது. ஆனால் ஹிந்தி படிக்கலாம். ஹிந்திக்கு எப்போதும் தமிழகத்தில் தடை இல்லை என்று பேசி இருந்தார் விஜய்சேதுபதி.

விஜய்சேதுபதி இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது…

விஜய்சேதுபதி ஹிந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி..

நடிகர் விஜய்சேதுபதி ‘இந்தியை திணிக்க கூடாது’ என்று பேசியது குறித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று அளித்த பேட்டி..

‘ஜவான்’ படத்துல விஜய்சேதுபதி வில்லனாக சிறப்பாக நடித்து இருக்கிறார். சப் டைட்டில் இல்லாமல் அதை பார்த்தால், அது இந்தியை திணிப்பதா? கற்றுக் கொடுப்பதா? அது விவாத பொருள்.

இந்தி உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்பதுதான் பாயின்ட். ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவன தயாரிப்பில் அவர் நடிக்கிறார்.

விஜய்சேதுபதி கருத்து எதுவும் சொல்லவில்லை. அது அவர் உரிமை. அவர் இந்தி, போஜ்புரி, தமிழ் என எதிலும் நடிக்கட்டும். அவர் உரிமை. அதே சமயம் கருத்துக்கு சொல்லும்போது இரண்டு பக்கமும் பார்க்கணும்.

தமிழகத்தில் பல நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் இந்தியா முழுக்க, வட இந்தியாவில் இருந்துஆட்களை வேலைக்கு எடுக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தைவிட பெங்களூர் ஓகே.

அங்கே மொழி பிரச்னை இல்லை. இங்கே தமிழில்தான் பேச வேண்டியது இருக்கிறது என்கிறார்கள். இதுபோன்ற மொழி பிரச்னையால் தமிழகத்தில் முதலீடு வாய்ப்புகள் குறைகிறது.

இந்தி விருப்பம் இருந்தால் படியுங்க. வேண்டாம் என்றால் விட்டுவிடுங்க. நாங்க 3 மொழி கொள்கையை சொல்றோம். இந்திபடியுங்கனு மோடி சொல்லவில்லை. கட்டாயம், தமிழ், ஆங்கிலம் படிக்கணும். 3வது மொழியாக உங்களுக்கு தேவைப்படும் மொழியை படியுங்க என்கிறோம். இது எங்க கருத்து, விஜய்சேதுபதிக்கு பதில் அல்ல, 4, 5 மொழி கூட படியுங்க.

நாளைக்கு நீங்க குளோபல் சிட்டிசன். நாளை வெறும் 2 மொழிவைத்துக்கொண்டு எங்கேயும் போக முடியாது. கூடுதல் மொழி தேவை. இந்தி பிடிக்காவிட்டால் பிரெஞ்சு, ஜெர்மன் படித்து ஐரோப்பாவில் வேலை செய்யுங்க.

இந்தியை நாங்க திணிக்கவில்லை. அதேசமயம், விஜய்சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா? இந்தி தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கலாமானு கேட்கமாட்டோம்.

அவர் அவரின் தனித்திறமை. அவர் விருப்பம். நாங்க ஏதாவது சொன்னால் தவறாக போய்விடும். அவர் படத்தை நாங்க கைதட்டி ரசித்துவிட்டு போறோம்.

Bjp Annamalai reply to Vijaysethupathi for Hindi issue in Tamilnadu

More Articles
Follows