தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய விலங்குகள் நல வாரியத்தின் பிராண்ட் அம்பாசிடராக சௌந்தர்யா ரஜினி தேர்ந்தெடுக்கபட்டார் என்பதை நாம் முன்பே தெரிவித்திருந்தோம்.
மேலும் அவர் நியமிக்கப்பட்டத்தற்கான காரணத்தை நல வாரியமே தெளிவுப்படுத்தி இருந்தது.
https://www.filmistreet.com/cinema-news/animal-welfare-board-clarifies-role-of-soundarya-rajini/
இந்நிலையில் தன் மகளுக்கு அறிவுரை கூறி அவர் அப்பதவியிலிருந்து விலக சொல்ல வேண்டும் என தமிழர் வீர விளையாட்டு மீட்புக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது…
“இந்திய விலங்குகள் நல வாரியத்தின் பிராண்ட் அம்பாசிடராக சௌந்தர்யா நியமிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அவரது தந்தை ரஜினி ஒரு சராசரி மனிதரல்ல; இந்தியளவில் புகழ்பெற்ற மனிதர். தமிழகத்தின் முக்கிய அடையாளம்.
அவரது மகள் சௌந்தர்யா பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் உள்ளது.
இந்திய விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கட்டுக்கு எதிரான ஒரு அமைப்பு. ரஜினி பிரம்மாண்ட புகழ் அடைந்ததற்கு முக்கிய காரணமே தமிழர்கள்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழர்கள் எத்தனை துயரத்திற்கு ஆளாகினர் என்பதை ரஜினி நன்கு அறிந்தவர்.
அப்படி இருந்தும் தன் மகளை அந்த வாரியத்தில் துாதர் பொறுப்பை ஏற்று கொள்ளச் செய்தது தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்.
இதன்மூலம் தமிழகத்தின் உணர்வை கொச்சைப்படுத்துகிறது வாரியம். அதற்கு துணைபோயிருக்கிறார் ரஜினி.
சென்னை வெள்ளத்தில் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை ரஜினி.
காவிரி பிரச்னையிலும் மவுனம் காக்கிறார். ஆனால் சினிமாவில் தமிழர்கள் மேல் அக்கறை கொண்டவராக நடிக்கிறார்.
தமிழர்களுக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ரஜினி கெட்டது செய்யாமல் இருந்தாலே போதும்.
எனவே முதற்கட்டமாக ரஜினியை சந்தித்து தன் மகளை பதவி விலகும்படி அறிவுறுத்த மனு அளிக்க இருக்கிறோம்.
அவர் செய்யவில்லை என்றால் போராட்டங்களை நடத்த உள்ளோம். அதற்குள் தன் மகள் சௌந்தர்யாவை துாதர் பொறுப்பிலிருந்து ரஜினிகாந்த் விலக சொல்வார் என நம்புகிறோம்”
இவ்வாறு பேட்டியில் தெரிவித்துள்ளார்.