விலங்குகள் நலவாரியத்தில் சௌந்தர்யா ரஜினி தூதுவராக நியமிக்கப்பட்டது ஏன்?

விலங்குகள் நலவாரியத்தில் சௌந்தர்யா ரஜினி தூதுவராக நியமிக்கப்பட்டது ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajiniஇந்திய அரசின் விலங்குகள் நலவாரியத்தில் தூதுவராக சௌந்தர்யா ரஜினி நியமிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

அதை நம் தளத்திலும் பதிவு செய்திருந்தோம்.

அதற்கு சௌர்ந்தர்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும், இவர் ஏன்? தூதுவராக நியமிக்கப்பட்டார் என்ற சந்தேகங்களும் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து விலங்குகள் நலவாரியமே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகியவற்றில் மிக பெரிய அளவில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது நாம் அறிந்த ஒன்றே.

இவரை தற்போது Animal Welfare Board எனும் அமைப்பு தங்களது தூதுவராக நியமித்துள்ளது. இதை பற்றிய தகவல் வெளிவந்தது முதல் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் வேலை என்னவென்றால் திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா அல்லது அது கிராபிக்ஸ் தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வழங்குவது தான்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறையில் நல்ல நிபுணத்துவம், கோச்சடையான் என்னும் அனிமேஷன் படத்தை இயக்கிய அனுபவம் உள்ளதால் அவரை Animal welfare Board இப்பணியில் அமர்த்தியுள்ளது.

அந்த செய்திக்குறிப்பு இதோ….

 

awbi soundarya rajini

தனுஷ் காதல்; டைரக்ஷன் மோகம்; அண்ணன் கொடுத்த தைரியம்

தனுஷ் காதல்; டைரக்ஷன் மோகம்; அண்ணன் கொடுத்த தைரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush stillsபிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தொடரி திரைப்படம் வருகிற செப். 22ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் இப்படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷிடம் ஒரே நேரத்தில் நிறைய படங்களில் எப்படி நடிக்கிறீர்கள்?

இவை தவிர்த்து, தயாரிப்பு, இயக்கம்.. இது எல்லாம் எப்படி சாத்தியம்? என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது தனுஷ் கூறியதாவது…

‘நான் எனது தொழிலை வேலையை காதலிக்கிறேன். எனவே அதன் மீது விருப்பம் உள்ளதால் சோர்வடைவதில்லை.

அண்ணன் செல்வராகவன் கொடுத்த தைரியத்தால்தான் இயக்குனராக முடியும் என முடிவெடுத்தேன் என்று தெரிவித்தார்.

அஜித்தின் புதிய கார்; எத்தனை கோடி தெரியுமா?

அஜித்தின் புதிய கார்; எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithநடிப்பை தவிர்த்து, கார் ரேஸ், பைக் ரேஸ், கேமரா போட்டோகிராபி என அனைத்திலும் ஆர்வர் உள்ளவர் அஜித்.

இவரின் கார் ரேஸ், பைக் ரேஸ் திறமைகளை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இந்நிலையில் கார் பிரியரான இவர், புதிய கார் ஒன்றை வாங்க முடிவு செய்திருக்கிறார்.

அது லம்பாகினி என்ற புதிய கார் மாடல் ஒன்றை ஓகே செய்திருக்கிறாராம்.

இந்த காரின் விலை ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

சூர்யாவின் ‘எஸ் 3’ பட ரிலீஸ் தேதி உறுதியானது

சூர்யாவின் ‘எஸ் 3’ பட ரிலீஸ் தேதி உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

s3 release dateஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் சிங்கம் 3.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஓர் அறிமுக பாடல் உள்ளது-

இதன் கம்போஸிங்கை அண்மையில் முடித்துள்ளர்.

‘ஓ சோனி சோனி, சூப்பர் சோனிக்’ என்று இப்பாடல் தொடங்குகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 16ஆம் தேதி இப்படத்தை உலகமெங்கும் மிகப்பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தேனாண்டாள் தயாரிக்கும் படத்தில் விஜய்-அட்லிக்கு பேசப்பட்ட சம்பளம்

தேனாண்டாள் தயாரிக்கும் படத்தில் விஜய்-அட்லிக்கு பேசப்பட்ட சம்பளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeபரதன் இயக்கும் பைரவா படத்தை முடித்துவிட்டு அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ராமநாராயணனின் மகன் முரளி தயாரிக்கிறார் என்பதை நாம் முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு சம்பளமாக ரூ. 35 கோடி வரை பேசப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் அட்லிக்கு சம்பளமாக ரூ. 15 கோடி கொடுக்க இருக்கிறார்களாம்.

இதன் மூலம் ஷங்கர், முருகதாஸ் அவர்களின் அடுத்த இடத்தை அட்லி நெருங்கி விட்டார்.

ராஜா ராணி, தெறி ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லிக்கு தெறி படத்தில் சம்பளமாக ரூ. 3 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சூர்யா-35’ படத்திற்கு பாட்ஷா பட பன்ச் டயலாக் தலைப்பு?

‘சூர்யா-35’ படத்திற்கு பாட்ஷா பட பன்ச் டயலாக் தலைப்பு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya baashaஎஸ் 3 படத்தை முடித்துவிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இது இவரது நடிப்பில் வளரும் 35வது படமாகும்.

அனிருத் இசையமைக்க, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் இப்படத்திற்கு ரஜினி நடித்த பாட்ஷா பட பன்ச் டயலாக் ஒன்றை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதில் வில்லன் ரகுவரனிடம் ‘இது தானா சேர்ந்த கூட்டம்’ என்று ரஜினி சொல்வார்.

இதையே டைட்டிலாக வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இது இந்தியில் வெளியான அக்ஷய்குமாரின் ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தழுவல் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows