செக்கச் சிவந்த வானம் ரிலீஸானாலும் பரியேறும் பெருமாள் மீது நம்பிக்கை இருக்கு… : கதிர்

செக்கச் சிவந்த வானம் ரிலீஸானாலும் பரியேறும் பெருமாள் மீது நம்பிக்கை இருக்கு… : கதிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pariyerum perumalமதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாக பதிய வைத்த கதிர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வம் டைரக்சனில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தனது திரையுலக வாழக்கையில் திருப்புமுனை தரப்போகும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மிகவும் எதிர்பார்க்கும் கதிர்.

படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்தப்படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

“பரியேறும் பெருமாள் படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக இயக்குனர் மாரி செல்வத்திடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன்..

அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது. இந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது.. அது பிரெஷ்ஷாக இருக்கிறது.. அதனாலேயே இந்தப்படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது.

திருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது.. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம்..

மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா அந்த நடைதான் எனக்கு ஒய்வு நேரம் என்பதே. இதுவாவது பரவாயில்லை..

மொட்டை வெயிலில் பொட்டல்வெளியில் நடக்கும் ஷூட்டிங்கில் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும்.. அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பெட்டர் என உட்கார்ந்து விடுவேன்..

என்னுடன் நடித்த நாய் கருப்பி, வேட்டை நாய் ரகம்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது.

அப்புறம் நான்கு நாட்களில், அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து, ஆக்சன் கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகி விட்டது. நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக்கொண்டால் தான், நடக்கவே முடிந்தது.

கதாநாயகன் எந்த மனநிலையில் இருக்கிறான் என்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தவேண்டிய ஒரு காட்சி. அதற்காக இரண்டுபக்கமும் பரபரப்பாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும், சென்டர் மீடியன் இல்லாத திருநெல்வேலி ஹைவே ரோட்டில், திடீரென நடுவில் உட்கார்ந்துவிடுவது போல ஒரு காட்சியை படமாக்கினார்கள்.

எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திடீரென எடுக்கப்பட காட்சி அது. ஏதோ ஒரு வாகனம் எதிர்பாராமல் ஓவர்டேக் பண்ணுவதற்காக சற்றே ஏறி வந்திருந்தாலும் என் கதை முடிந்திருக்கும்.. எப்படி அந்த காட்சியில் நடித்து முடித்தேன் என்பதே தெரியவில்லை.

ஆனால் அன்று இரவு முழுதும் என்னால் தூங்கவே முடியவில்லை. அந்த பாதிப்பிலிருந்து மீளவே ஒருநாள் ஆனது. இனி அப்படி ஒரு காட்சியில் நடிக்கவே மாட்டேன்.

என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும் படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான்.. ஆனால் கதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது

வழக்கமான பார்முலாவில் கடகடவென படங்களில் நடித்துவிட்டுப்போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள்.

பத்துப்படம் தான் பண்றோம்.. ஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ணனும்.. ரசிகர்களையும் ஏதோ ஒருவிதத்துல படத்தோட ஒட்ட வைக்கணும்..

அந்தப்படம் ரிலீசான பின்னாடி அப்டியே மறந்துபோய் விடாமல், ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும்.. அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன்..

அடுத்து வெளியாக இருக்கும் ‘சிகை’ படத்தில் கூட வித்தியாசமான கதைக்களமும் கேரக்டரும் தான். அதில் நான் நடித்துள்ள இருவித கெட்டப்புகளில் முக்கியமான கெட்டப் ஒன்று மட்டும் நாற்பது நிமிடம் இடம்பெறும்.. அது படத்தைப்பற்றி, என்னைப்பற்றி நிறையநாள் பேசவைக்கும்.

தற்போது குமரன் என்பவர் டைரக்சனில் ஒரு படம் நடித்து வருகிறேன். விக்ரம் வேதாவுல கிடைச்ச மாதிரி ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துற கேரக்டர்கள் கிடைச்சா இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும், ஏன் குணசித்திர வேடத்திலும் நடிக்கவும் கூட தயங்கமாட்டேன்..

இயக்குனர் ராம் படம் பார்த்துவிட்டு, படம் ரிலீசானதும் கமர்ஷியல் வேல்யூ உள்ள நடிகரா மாறுவீங்க என்று சொன்னார். இதைவிட பெரிய பாராட்டு என்ன வேண்டும்..?

மணிரத்னம் சார் டைரக்சனில் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படம் இன்று வெளியாகி இருந்தாலும் கூட, ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மீதும் ரசிகர்கள் மீதும் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையில் தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறோம்” என்கிறார் கதிர்.

திமிரு புடிச்சவனின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன்டிவி

திமிரு புடிச்சவனின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன்டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thimiru pidichavanபாகுபலி டைரக்டர் ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் கணேஷா.

இவர் ஸ்ரீகாந்த், சந்தானம் ‘நம்பியார்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தற்போது விஜய் ஆண்டனி, நிவேதா பெத்து ராஜ் நடித்து வரும் ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் நாயகன் நாயகி இருவரும் போலீஸாக நடித்து வருகின்றனர்.

பாத்திமா விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக, சிலம்பம் கற்றுக்கொண்டு நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. மோட்டார் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இருப்பதால், நிவேதா பெத்துராஜுக்கும் பயிற்சி கொடுத்த பின் படமாக்கியுள்ளனர்.

மார்ச் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

1 டிக்கெட்டில் 1 ரூ எடுத்து 30 விவசாயிகளுக்கு 10 லட்சம் வழங்கிய விஷால்

1 டிக்கெட்டில் 1 ரூ எடுத்து 30 விவசாயிகளுக்கு 10 லட்சம் வழங்கிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal dontated Rs 10 lakhs to farmers from the Cinema ticket priceவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” சண்டக்கோழி 2 “ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விஷால் 25 விழா சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மோகன்லால், இயக்குனர் ஷங்கர் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி தற்போது விஷால் “ விஷால் 25 “நிகழ்ச்சியில் தேர்தெடுக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கினார்.

துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை படத்தின் டிக்கெட் விற்று கிடைத்த லாபத்தில் விஷால் இதை வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் பேசிய விஷால் இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். விவசாயிகளுக்கு நம்மால் உதவ முடிகிறது என்பது மிகப்பெரிய விஷயம்.

நாம் 30 விவசாயிகளுக்கு உதவுவதை பார்த்து மேலும் 2 பேர் நாம் உதவியதை விட அதிகமான விவசாயிகளுக்கு உதவுவார்கள். நாம் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது மகிழ்ச்சி. இதை போல் எல்லோரும் விவசாயிகளுக்கு உதவி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்.

அப்போது மேடையிலிருந்து இயக்குனர் பாண்டிராஜ் , விஷால் எதற்கு என்னை விவசாயிகளுக்கான உதவி தொகையை வழங்க சொன்னார் என்று தெரியவில்லை.

ஆனால் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்த எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. நான் வேகமாக படமெடுப்பவன். விஷால் எனக்கு கதகளி திரைப்படத்தை வேகமாக முடித்து தந்து சொன்ன தேதியில் வெளியிட்டார் என்றார் பாண்டிராஜ்.

விவசாயிகளுக்கு விஷால் பத்து லட்சம் ருபாய் நிதி உதவியை சண்டை கோழி2 பட இசை வெளியீட்டு விழாவில் நேற்று 24/9/18 ல் வழங்கினார்.

விஷால் தொடர்ந்து விவசாயிகளை பாதுகாக்க உதவிகள் செய்து வருகின்றார். அவருக்கு நன்றிகள். அவர் படம் சண்டை கோழி 2 வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் திரு. தெய்வசீகாமணி

Vishal dontated Rs 10 lakhs to farmers from the Cinema ticket price

Vishal dontated Rs 10 lakhs to farmers from the Cinema ticket price

தனியிசைக் கலைஞர்களுக்காக ரஞ்சித்துடன் இணைந்த ஹிப்ஹாப் ஆதி

தனியிசைக் கலைஞர்களுக்காக ரஞ்சித்துடன் இணைந்த ஹிப்ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hiphop Aadhi and Ranjith speech at Casteless Collection eventகாலா பட இயக்குனர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்”, “கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “ரூட்ஸ்” ஆகிய அமைப்புகளின் சார்பில் தனியிசைக் கலைஞர்களுக்கான இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தனியிசைப் பாடகர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள்.

தமிழகம் முழுவதுமிருந்து பலதரப்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர் ஹிப்பாப், ராப், கானா, நாட்டுப்புறப் பாடல்கள் பாடப்பட்டன.

இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.இரஞ்சித்

“கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவை முதலில் அறிமுகப்படுத்தி இசை நிகழ்ச்சியை நடத்திய பிறகு பல தனியிசைக்கலைஞர்களும் தொடர்ந்து தொடர்புகொண்டு பாடுவதற்க்கு வாய்ப்புகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

வாய்ப்புக்கேட்கிற எல்லோருக்கும் ஒரு மேடையை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்கிற நோக்கில் “ரூட்ஸ் (Roots)” என்கிற அமைப்பை ஏற்படுத்தி மேலும் அதிகமான திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே இந்த மேடை.

கலைகளின் மூலமாக சாதி, மதமற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க, நாம் இணைந்து செயல்படுத்த இந்த கலைகள் நமக்கு கைகொடுக்கும் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவோம்” என்றார்.

அடுத்ததாக பேசிய இசையமைப்பாளர் “ஹிப்பாப்” ஆதி…

“தனியிசைக்கலைஞனாக எனது ஆரம்பகாலத்தில் எதாவது ஒரு மேடை கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன்.

தனியிசைக்கலைஞனாக இருந்து இப்போது இசையமைப்பாளராக நடிகனாக வந்திருக்கிறேன். சுதந்திர இசை இங்கு வெற்றிபெறும் சூழல் அதிகம் இல்லை இன்னும் ஏராளமான கலைஞர்கள் சின்ன வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஞ்சித் அண்ணன் மீன் பிடித்து கொடுக்காமல் தூண்டிலை கொடுத்திருக்கிறார். இந்த கலைஞர்களுக்கு இந்த மேடையை அமைத்துக்கொடுத்தற்க்கு அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மேடையில் பல திறமையாளர்களை நான் கண்டுகொண்டேன் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. வரும் காலங்களில் நானும் இதுபோன்ற சுதந்திர இசை மேடையை உருவாக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

Hiphop Aadhi and Ranjith speech at Casteless Collection event

அட்டு பட நாயகன் நடிக்கும் *சில்லாக்கி டும்மா* அந்த மாதிரி படமா.?

அட்டு பட நாயகன் நடிக்கும் *சில்லாக்கி டும்மா* அந்த மாதிரி படமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sillaakki Dumma is not Adult movie says Maran Kandhasamy‘சில்லாக்கி டும்மா’ படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா ஏவி எம் ஸ்டுடியோவில் உள்ள கார்டனில் இன்று நடைபெற்றது.

‘அட்டு’ படத்தில் நாயகனாக நடித்த ரிஷிரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகி மோனிகா, யோகி பாபு, மைனா நந்தினி, அபிஷேக், சரவண சக்தி, தீனா, ஜார்ஜ் விஜய் டிவி. பிஜ்ஜி ரமேஷ் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு உதயசங்கர். எடிட்டிங் – எலிசா. இயக்கம் மாறன் கந்தசாமி.

தொடக்க விழாவில் நாயகன் ரிஷி ரித்விக், நடிகர் அபிஷேக், இயக்குநர் சரவண சக்தி, நடிகர் தீனா மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

படம் பற்றி இயக்குநர் மாறன் கந்தசாமி பேசும் போது,

” இந்தப் படத்தில் நாயகனாக ‘அட்டு’ படத்தில் நடித்த ரிஷி ரித்திக் நடிக்கிறார். இது மூன்று கேங்ஸ்டர்களுக்கிடையே ஒரு நாளில் நடக்கும் கதை. படத்தின் தலைப்பை பார்த்து யாரும் அடல்ட்ஸ் படமாக நினைத்துவிடக்கூடாது.

அப்படி யாரும் தவறாக நினைத்து விடாதீர்கள். இது எல்லாருக்கும் பிடிக்கும்படியான கதையாக இருக்கும்.” என்று கூறினார்.

நீண்ட நாட்களுக்குப் பின்பு பாரம்பரியமான ஏவிஎம் ஸ்டுடியோவின் கார்டன் பகுதியில் இதன் தொடக்க விழா நடைபெற்றது.

இப்படத்தை டீக்கடை சினிமா க்ரவுட் பண்டிங் புரொடக்ஷன் மற்றும் அருவி பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கின்றன.

டீக்கடை சினிமா என்பது சினிமா ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் குறும்படம் போன்ற படைப்புகளைத் திரையீடு செய்து விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வந்தது.

அது இப்போது ஒரு தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன் பின்னே சினிமா ஆர்வமுள்ள இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். சினிமா வாய்ப்பு தேடி திறமையை வைத்துக்கொண்டு யாரும் சிரமப்படக்கூடாது அவர்களை தூக்கி நிறுத்த வேண்டும்; கை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த டீக்கடை சினிமா அமைப்பு உருவானது.

இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதினைப் பெற்றுக் கொண்ட இளைஞர் மாறன் கந்தசாமிதான் ‘சில்லாக்கி டும்மா’ படத்தை இயக்குகிறார் என்பது குறிப் பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினர்கள் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன், டைரக்டர், சண்முகம் டைரக்டர் தாஸ் கந்தசாமி, டைரக்டர் ராகவன், டைரக்டர் சாம் ஆண்டன், மற்றும் பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

Sillaakki Dumma is not Adult movie says Maran Kandhasamy

Sillaakki Dumma movie pooja

*சண்டி முனி* படத்திற்காக நட்ராஜ்-யோகிபாபு-மனீஷா கூட்டணி

*சண்டி முனி* படத்திற்காக நட்ராஜ்-யோகிபாபு-மனீஷா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nataraja Yogi Babu and Manisha yadav starring Chandi Muni updatesசிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “சண்டிமுனி ” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கதா நாயகனாக நட்ராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார்.

மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர், அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா.எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் முனி 3 காஞ்சனா 2 படத்தில் உதவியாளராக பணியாற்றினார். இவர் இயக்கும் முதல் படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 27 ம் தேதி பழனியில் துவங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடை பெற்று முடிவடைய உள்ளது.

படம் பற்றி இயக்குனர் மில்கா எஸ் செல்வகுமார் கூறியதாவது…

இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ் சண்டி என்கிற சிவில் இஞ்சினீயர் வேடத்தில் நடிக்கிறார். மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியுடன் பேமிலி சப்ஜெக்ட்டாக சண்டிமுனி உருவாகுகிறது.

ஒரு பெண்ணுக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களமும் இவர்கள் இருவருக்கிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் சண்டி என்கிற நட்ராஜ் கதாபாத்திரம்.

படத்தின் சுவாரஸ்யமாகவும் திகிலாகவும் இருக்கும் நான் பாடம் கற்றுக் கொண்ட இடம் அப்படி..ஒவ்வொரு காட்சியுமே கமர்ஷியல் கலக்கலாக இருக்கும் என்கிறார் மில்கா எஸ் செல்வகுமார்.

ஒளிப்பதிவு – செந்தில் ராஜகோபால்
இசை – ரிஷால் சாய்
எடிட்டிங் – புவன்
கலை – முத்துவேல்.
பாடல்கள் – வா.கருப்பன்
நடனம் – பிருந்தா, தினேஷ், சிவா லாரன்ஸ், சிவா ராக்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை – குமார்
தயாரிப்பு – சிவம் மீடியா ஒர்க்ஸ்

Nataraj Yogi Babu and Manisha yadav starring Chandi Muni updates

More Articles
Follows